Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கட்டைப்பஞ்சாயத்து - மிரட்டல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

Featured Replies

பதிலளிப்பாரா?

Vijakala_CI.jpg

பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கட்டைப்பஞ்சாயத்து மற்றும் மிரட்டல்களில் ஈடுபடுவதாக யாழ்ப்பாணத்தில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இது வரை யாழ்ப்பாணத்திலுள்ள ஜந்திற்கும் அதிகமான காவல்நிலையங்களிற்கு சென்று அங்கு காவல்துறை அதிகாரிகளை மிரட்டியும் அவர்கள் முன்னதாகவே பொதுமக்களை அச்சுறுத்திய பல சம்பவங்கள இடம்பெற்றதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அவரால் அச்சுறுத்தலிற்கு உள்ளாகி இருக்கும் வயோதிப தாய் ஒருவரை தனக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்;ததாக விஜயகலா காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளதும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் காரைநகரினை சேர்ந்த யுவதியொருவர் காதல் வயப்பட்ட நிலையில் உரும்பிராய் பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் வீட்டிலிருந்து வெளியறி தலை மறைவாகி உள்ளார். குறித்த யுவதியின் தநதையார் விஜயகலாவின் உறவினர் என்ற அடிப்படையில் அவரது முறைப்பாட்டையடுத்து இளைஞனது வீட்டிற்கு தனது பணியாளர்களுடன்; சென்றிருந்த விஜயகலா அங்கிருந்த இளைஞனின் வயோதிப தாயாருக்கு மிரட்டல் விடுத்துள்ளாதாக தாயார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கோப்பாய் காவல் நிலையத்தில் யுவதியின் தந்தை முறைப்பாடொன்றையும் செய்துள்ளார். இது தொடர்பான முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட காவல்துறை நடத்திய விசாரணையில் யுவதி தனது மனப்பூர்வமான சம்மதத்தை வெளிப்படுத்தி கடிதம் வழங்கியுள்ளதுடன் தாம் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தொடர்ச்சியாக விஜயகலா மற்றும் அவரின் பணியாளர்களின் மிரட்டலையடுத்து தலைமறைவாகி வன்னியில் தலைமறைவாகி இருப்பதாகவும் அவர்களை கடத்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது விசேட படையணி முதல் முல்லைதீவு காவல்துறை வரை முயன்றமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கோப்பாய் காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்ட இளைஞனின் வயோதிப தாயை இரவு உடையில் அங்கு வந்த விஜயகலா மிரட்டி தாக்க முற்பட்டதாகவும் இதையடுத்து அவரை அங்கிருந்து காவல்துறை அதிகாரிகள் வெளியேற்றியதாகவும் தெரியவருகின்றது.

இதனால் சீற்றமடைந்து கோப்பாய் காவல்துறை பொறுப்பதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்த அவர் ஏற்பாடு செய்த போதும் மக்கள் எவரும் பங்கெடுக்க வராமையினால் அது கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனக்கு தொடர்ச்சியாக விஜயகலா கொடுத்துவரும் தலையிடியினையடுத்து தனக்கும் மகனிற்கும் தொடர்புகள் ஏதுமில்லையென்பதை வெளிப்படுத்த தொலைபேசி வழி அழைக்க முற்பட்ட அந்தத் தாயையே தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விஜயகலா முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று காவல்துறைக்கு அழைக்கப்பட்ட அந்த வயோதிப தாய் தனக்கு விஜயகலாவின் தொலைபேசி இலக்கத்தை தந்திருந்தது அவரே எனவும் அந்த தொலைபேசி இலக்கத்திற்கு மகன் எங்குள்ளான் என்பதை அறியத்தருமாறு கூறியதுடன் தனது அடியாட்களுடன் வீட்டிற்கு வந்து அச்சுறுத்தலை அவர் விடுத்ததாகவும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் தனது தரப்பு நியாயத்தை சொல்ல முற்பட்ட தன்னை கொலைமிரட்டல் விடுத்ததாக சிக்கவைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.   

இதேவேளை பிரதி அமைச்சர் விஜயகலாவை லண்டனில் இருந்து இன்று லண்டன் நேரம் 12.14 முதல் - 12.19 வரை தொடர்புகொள்ள முற்பட்ட போதும் அவர் அழைப்பை ஏற்கவில்லை...

இருந்த போதும் அவருடன் தொடர்புடைய தரப்பினரிடம் விசாரித்த போது காதல் வயப்பட்ட யுவதி 18 வயதிற்கு உட்பட்டவர் எனவும், பெண்ணை அழைத்துச் சென்ற தரப்பினர் காவற்துறை அதிகாரிக்கு 20 லட்சம் பணம் கொடுத்து காவற்துறையை தம் பக்கம் வசப்படுத்தி இருப்பதாகவும் அதனாலேயே பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலையிட நேரிட்டதாகவும் தெரிவித்தனர்...

பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் அவரோ அவரது ஊடகப் பிரிவோ பதில் அளிக்கும்பட்சத்தில் அவை முழுமையாக பிரசுரிக்கப்படும்..

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116646/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.