Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிக்னலை கவனிக்க தவறியதே ரயில் விபத்துக்கு காரணம்! சுவிஸ் ரயில்வே விளக்கம்

Featured Replies

சிக்னலை கவனிக்க தவறியதே ரயில் விபத்துக்கு காரணம்! சுவிஸ் ரயில்வே விளக்கம் [ சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015, 08:53.18 மு.ப GMT ] train_accident_001.jpgரயில்வே தண்டவாளத்தில் உள்ள சிக்னலை கவனிக்க தவறியதே இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதற்கு காரணம் என சுவிஸ் மத்திய ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 20ம் திகதி அதிகாலை 6.40 மணிக்கு Rafz ரயில் நிலையத்திலிருந்து Schaffhausen நகருக்கு புறப்பட்ட S-Bahn 18014 என்ற ரயில், ரயில் பாதையில் இருந்த ‘நிறுத்தல் சிக்னலை’யும் மீறி சென்றுள்ளது.

மேலும் மணிக்கு 59 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்ததால், அவசரகால ’பிரேக்’ தானாக செயல்பட்ட, சில விநாடிகளில் சிக்னலை கடந்து 100 மீற்றர் தொலைவில் ரயில் நின்றுவிட்டது.

அப்போது சூரிச்சிலிருந்து மணிக்கு 110 கிலோ மீற்றர் வேகத்தில் வந்து கொண்டிருந்த InterRegio 2858 ரயில், நின்று கொண்டிருந்த S-Bahn 18014 ரயிலுடன் மோதியது.

இந்த விபத்தில் ஏராளமான பயணிகள் காயமடைந்தனர், விபத்து குறித்து விசாரணையை தொடங்கிய மத்திய ரயில்வே துறை, S-Bahn 18014 என்ற ரயில் ’நிறுத்தல் சிக்னலை’ கவனிக்க தவறியதால் தான் விபத்து நிகழ்ந்துள்ளதாக கண்டுபிடித்துள்ளது.

மேலும் InterRegio 2858 ரயில் காலதாமதமாக புறப்பட்டதால் 3-வது வழித்தடத்தில் வருவதற்கு பதிலாக 5-வது வழித்தடத்தில் வந்தபோது இந்த விபத்து நடந்ததாகவும் தெரிவித்துள்ளது.

சில ரயில் பெட்டிகள் மற்றும் 60 மீற்றர் நீளமுள்ள தண்டவாளமும் மிகுந்த சேதத்திற்கு உள்ளானது, இது சேதாரத்தை சீரமைக்க பல மில்லியன் பிராங்குகள் செலவாகும் என மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ரயில்கள் ஏன் நிறுத்தல் சிக்னலை மதிக்காமல் சென்றது என்ற கேள்விக்கு ரயில்வே துறையின் தலைவரான Andreas Meyer பதில் அளிக்க மறுத்து விட்டார்.

இந்த விபத்து குறித்து சுவிஸ் மத்திய அரசு மற்றும் சூரிச் மண்டல வழக்கறிஞர்கள் விரிவான விசாரணையை நடத்தி வருகின்றனர்.

train_accident_002.jpg

http://www.coolswiss.com/view.php?22eOld0bcaa0Qd4e2KMM302cBnB3ddeZBnV203egAA2e4K0asacb3lOI43

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.