Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை இணைத்து உருவாக்கப்படும் சீனாவுக்கு எதிரான வலைப்பின்னல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கடந்த வாரம் அமெரிக்க பாராளுமன்றத்தின் ஆயுதப்படைகள் தொடர்பான உப குழுவின் முன்பாக உரையாற்றிய அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைப் பிரதித் தளபதியான வைஸ் அட்மிரல் ஜோசப் முல்லொய், அதிர்ச்சி தரக்கூடிய பெரியதொரு குண்டைத்தூக்கிப் போட்டிருந்தார்.

அமெரிக்கவிடம் உள்ள நீர்மூழ்கிகளின் எண்ணிக்கையை விட, சீனாவின் நீர்மூழ்கிகளின் பலம் அதிகமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். உலகிலேயே படைபல ரீதியாக அதிசக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்ட நாடு அமெரிக்காவே என்ற கருத்து உலகில் உள்ளது.

அமெரிக்கா அடுத்த தலைமுறைக்கான ஆயத தயாரிப்புகள், கண்டுபிடிப்புகளுக்குக் கூட முக்கியமளிக்கும் ஒரு நாடு. ஆனால், அமெரிக்காவையும் மிஞ்சக் கூடியளவுக்கு சீனாவின் ஆயுதப் போட்டி அதி வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

இரகசியமான பல ஆயுதங்கள், ஏவுகணைகளை சீனா தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. நீர்மூழ்கியிலிருந்து அமெரிக்காவைத் தாக்கும் அணுவாயுத ஏவுகணைகளைக் கூட சீனா பரிசோதித்துள்ளதாக தகவல். இந்நிலையில் தான், சீன நீர்மூழ்கிகள் விவகாரத்தில் அமெரிக்கா அதிகம் முன்னெச்சரிக்கையுடன் செயற்படத் தொடங்கியுள்ளது.

பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, படை பல ரீதியாகவும், அமெரிக்காவுடன் போட்டியிடும் நாடாக சீனாவே மாறியிருக்கிறது. இந்தியப் பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்தியா கவலை கொள்கிறது என்றால், கூடவே சீனாவின் வளர்ச்சி குறித்து அமெரிக்காவும் கவலை கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

இந்தியப் பெருங்கடலின் ஊடாக, சீனாவின் செல்வாக்கு, மேற்கு நோக்கி விரிவாக்கமடைந்து விடும் என்று அமெரிக்கா தீவிர கவலை கொண்டிருக்கிறது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும், சீனா தனது கடலாதிக்கத்தை விரிவாக்கி வருகிறது என்பதற்கான ஆதாரங்களை வைஸ் அட்மிரல் ஜோசப் முல்லொய் அண்மையில் முன்வைத்திருக்கிறார்.

அதில் முக்கியமானது இந்திய கடற்பரப்பில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது பற்றியதாகும். கொழும்புத் துறைமுகத்துக்கு சீன நீர்மூழ்கிகள் இரண்டு கடந்த ஆண்டு மேற்கொண்ட பயணத்தையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தியப்பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்கனவே இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயலாற்றத் தொடங்கி விட்டது.

அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் மிக்க ஒரு சக்தியாக சீனா மாறிவரும் நிலையில், அதனை தனித்துக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கும் அமெரிக்கா சென்றிருக்கிறது. இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன், கடந்தவாரம் கொச்சியில் நடந்த “ஆசியப் பிராந்தியமும், அமெரிக்காவின் மீள்சமநிலையும்” என்ற கருத்தரங்கில் பேசிய போது, ஆசியாவில் இந்தியாவின் துணையின்றி அமெரிக்காவினால் சீனாவைக் கட்டுப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டார்.

எனவே தான், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் துணையுடன், சீனாவை எதிர்கொண்டு வருகிறது எனவும் இவர் கூறியிருந்தார்.

இந்தியப் பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த, இந்தியாவின் ஆதரவு மட்டும், அமெரிக்காவுக்குப் போதாது. 0இந்த இரண்டு நாடுகளும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி வந்த நிலையில்தான், கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசிக்க அனுமதி கொடுத்ததே, மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறாகும். அதுதான் வரலாற்று ரீதியான இலங்கையின் அரசியல் மாற்றங்களுக்கும் காரணமாகியது.

மஹிந்த ராஜபக்ச ஆட்சியைத் தோற்கடிக்க, இந்தியாவும், அமெரிக்காவும் முக்கிய பங்கு வகித்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம், ஹொங்கொங்கில் இருந்து வெளியாகும், சவுத் சைனா போஸ்ட் நாளிதழுக்கு மஹிந்த ராஜபக்ச அளித்துள்ள பேட்டியில், இந்த இரண்டு நாடுகளும் தன்னைத் தோற்கடிப்பதற்கு தமது தூதரகங்களைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

சீன நீர்மூழ்கிகளுக்கு இடமளித்ததன் மூலம், இந்தியப் பெருங்கடலில், சீனாவுக்குப் பட்டுக் கம்பளம் விரித்திருந்தது முன்னைய அரசாங்கம். அதுவரையில், நீர்மூழ்கிகளின் ஆதிக்கத்துக்கான களமாக இந்தியப் பெருங்கடல் இருந்ததில்லை. இந்த நிலையை ஒரேடியாக மாற்றியது சீன நீர்மூழ்கிகளின் வருகை.

இந்தியப் பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கத்தை அச்சத்தடன் பார்க்கின்ற இந்தியாவும், உலகளவில் சீனாவின் வளர்ச்சியை அச்சத்துடன் பார்க்கின்ற அமெரிக்காவும், கைகோர்த்துச் செயற்படுகின்றன. ஆனாலும், இந்தியப் பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கம் முற்றுமுழுதாக உடைக்கப்பட வேண்டுமாயின், இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஏனைய சிறிய நாடுகளும் தமது வலைப்பின்னலுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் இந்த நாடுகள் உறுதியாக இருக்கின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை, மொரிசியஸ், சீஷெல்ஸ் நாடுகளுக்கான பயணம் இதில் முக்கியமானது. ஏற்கனவே திட்டமிட்டபடி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவுக்கு செல்லவில்லை. அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பே அதற்குக் காரணம். ஆனால் மாலைதீவுப் பயணம் மிகவும் முக்கியமானது.

ஏனென்றால், ஏற்கனவே இந்தியாவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த மாலைதீவு, சில ஆண்டுகளாகவே சீனாவின் செல்வாக்குக்குட்பட்ட பகுதியாக மாறிவருகிறது. சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்தை புதிய அரசாங்கம், மீளாய்வு செய்தது போலவே, முன்னைய அரசாங்கத்தினால் இந்திய நிறுவனத்திடம் வழங்கப்பட்ட மாலே விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மாலைதீவின் தற்போதைய அரசாங்கமும் மீளாய்வு செய்தது. கடைசியில் அந்த திட்டம் இந்தியாவிடம் இருந்து பறிக்கப்பட்டு, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது இந்தியாவுக்கு மாலைதீவின் மீதிருந்த செல்வாக்கு உடைந்து போனதை வெளிப்படுத்தியது. அதுமட்டுமல்ல, சீன நீர்மூழ்கிகளுக்கு இனி கொழும்புத் துறைமுகத்தில் இடமளிக்கப்படாது என்று பீஜிங்கில் வைத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த போது, அது குறித்து ரொய்ட்டருக்கு கருத்து வெளியிட்ட சீன பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர், இதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியிருந்தார்.

கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிகளுக்கு இடமளிக்கப்படாது போனால், தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், மாலைத்தீவு, பாக்கிஸ்தான் போன்ற ஏனைய துறைமுகங்களும் அந்தப் பகுதியிலேயே இருப்பதாகவும் சீன பாதுகாப்பு அதிகாரி கூறியிருந்தார். இதிலிருந்து, இலங்கையை அடுத்து மாலைதீவின் மீது சீனா கண்வைத்திருக்கிறது என்பது உறுதியாகியிருக்கிறது.

ஏற்கனவே தனது கடல்வழிப்பட்டுப்பாதை திட்டத்தில் மாலைதீவையும் சீனா இணைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சீஷெல்ஸ், மொறிசியஸ் இலங்கைக்கான பயணங்களைப் போன்றே மாலைத்தீவுக்கான பயணமும் முக்கியமானது. ஆனால் அது சாத்தியமாகவில்லை.

மாலைதீவின் அரசியல் சூழலை அழுத்தங்களின் மூலம் இந்தியா மாற்றியமைக்க முனைந்தாலும், அது வெற்றியளிக்கவில்லை. இந்தியாவுக்கு தெற்கு மற்றும் மேற்கிலுள்ள இந்த நான்கு தீவுகளையும், ஒருங்கிணைத்து, சீனாவுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு வலைப்பின்னலை உருவாக்க முயன்றிருந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. இது தனியே மோடியினது திட்டம் மாத்திரமல்ல.

அமெரிக்காவினதும் திட்டமும் கூட இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு விவகாரங்களைப் பொறுத்தவரையில் இப்போது, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களும் அமெரிக்காவின் பாதுகாப்பு நலன்களும் கிட்டத்தட்ட ஒரே விதமானதாகவே உள்ளன. சீனாவின் சவால்களை முறியடிப்பதே இருநாடுகளினதும் முக்கியமானதும் பொதுவானதுமான பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்தச் சூழலில் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் இந்த இரண்டு நாடுகளுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. இந்தநிலையில், அமெரிக்காவும் இந்தியாவும் எதிர்காலத்தில் இரண்டு முக்கியமான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடும்.

முதலாவது, தமது பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தக்கூடிய, தற்போதைய அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் கூடிய கவனம் செலுத்தப்படும். அதற்காக, தமது எல்லா வளங்களையும், இலங்கைக்கு பகிர்ந்தளிக்கவும் இந்த நாடுகள் தயங்காது. இரண்டாவது, முடிந்தவரைக்கும் சீனாவின் தலையீகளை குறைக்கும் வகையில், அதனை அந்நியப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும். கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்தில், இலங்கை அரசாங்கம் சீனாவுடன் முட்டி மோதுகின்ற அளவுக்கே சென்றிருக்கின்றது.

சீனாவைக் கடுமையாக எரிச்சலடையும் அளவுக்கு இலங்கையின் நகர்வுகள் அமைந்திருக்கின்றன என்றால், இதற்குப் பின்னால், தற்போதைய அரசாங்கத்தின் முடிவுகள் மட்டும் காரணம் என்று கருதமுடியவில்லை. இந்தியாவும், அமெரிக்காவும் கூட இந்த முடிவுகளின் பின்னணியில் இருந்திருக்கக் கூடும் மஹிந்த ராஜபக்சவை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதற்கு உதவியதற்கான கைமாறாகக் கூட இந்த விடயத்தில் புதிய அரசாங்கம் தீவிரப் போக்கை காண்பிக்கலாம்.

இது இறுதியான முடிவாக இல்லா விட்டாலும், சீனாவுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது. இந்த அழுத்தங்களை சீனா நிச்சயம் எதிர்பார்த்திருக்காது. மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது சீனா கொண்டிருந்த நம்பிக்கை தான் பெரியளவிலான முதலீடுகளை செய்வதற்கு காரணம்.

ஆனால், அத்தகைய பெரிய முதலீடுகளுக்கும் ஆபத்தை விளைவிக்க தமது நீர் மூழ்கிகளே காரணமாகிவிடும் என்று சீனா எதிர்பார்க்கவில்லை. இதனை எதிர்பார்த்திருந்தால், சீனா தனது நீர்மூழ்கிகள் விவகாரத்தில் கொஞ்சம் கவனமாக செயற்பட்டிருக்கும். எவ்வாறாயினும் இப்போதைய நிலையில், சீன நீர்மூழ்கிகள் தான், ஆசியக்கண்டத்தின் அரசியல் போக்கை மாற்றியமைக்குக் காரணமாகியுள்ளன.

இத்துடன் இது நின்று விடும் எனக் கூற முடியாது அதன் தாக்கம் இன்னும் பல விவகாரங்களில் எதிரொலிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

ஹரிகரன்

tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.