Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரேந்திர மோடி- -ராஜீவ் காந்தி வருகையின் ஒற்றுமையும் வேறுபாடும்: அ.நிக்ஸன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோடி- -ராஜீவ் காந்தி வருகையின் ஒற்றுமையும் வேறுபாடும்: அ.நிக்ஸன்:-

அன்று ஈழப்போராளிகளை சமாதானப்படுத்தி இந்தியாவின் ஒற்றை ஆட்சி முறை பாதுகாப்புக்காக 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இன்று சீனாவின் செல்வாக்கை குறைத்து பிராந்திய பாதுகாப்புக்கு முன்னுரிமை கோரப்படுகின்றது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதே தயாரிக்கப்பட்ட விடயங்களைத் தான் இந்திய இலங்கை ஒப்பந்தமாக ராஜீவ்- ஜே.ஆர் 1987இல் கைச்சாத்திட்டனர்.

-அ.நிக்ஸன்-

இனப்பிரச்சினை தீர்;வுக்கு இந்தியா செய்த வழிமுறைகள் என்ன? அல்லது எந்த வகையில் இந்தியா இடையூறாக இருந்தது? என்ற இரண்டு கேள்விகள் முக்கியமானது பிரதமர் நாரேந்திரமோடி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இவ்வாறான கேள்விகள் எழுவது இயல்பானது. ஏனெனில் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக இல்லை. 1987ஆம் ஆண்டு பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி வருகை தந்தபோது பரபரப்பு மாத்திரமல்ல கொழும்பில் சிங்கள பௌத்த தேசிவாதிகள் எதிர்ப்பு ஆர்;ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அத்துடன் அணிவகுப்பு மரியாதையின்போது படைவீரர் ஒருவர் ராஜீவ்காந்தி மீது தாக்குதலும் நடத்தினார். ஆனால் மயிரிழையில் அவர் தப்பிவிட்டார்.

இப்போது ஏன் மௌனம்?

எவ்வாறாயினும் ராஜீவ் காந்தி கொழும்புக்கு வந்தன் நோக்கத்திற்கும் நரேந்திரமோடியின் கொழும்பு வருகைக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் ராஜூவ்காந்தியின் வருகையினால் பெறப்பட்ட மாகாண சபைகள் முறையை உரிய முறையில் செயற்பட வைப்பது தொடர்பாக பேச வேண்டும் அல்லது பேசவுள்ளோம் என தமிழ் தரப்பு கூறியுள்ளது. அதாவது 13 ஆவது திருத்தச் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைத்துள்ளார். அது மாத்திரமல்ல வடமாகாண சபை, இந்தியா இலங்கை என்ற முத்தரப்பு பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஒரு யோசனையையும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அது குறித்து எதுவுமே கூறவில்லை. எனினும் கூட்டமைப்பும் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்குனும் மேலாகச் சென்று தீர்வை முன் வையுங்கள் என்று மோடியிடம் வலியுறுத்தியுள்ளது. அதைவிட வேறு எதனையும் இந்தியாவிடம் இருந்து எதிர்ப்பார்க்க முடியாது என்று கூட்டமைப்புக்கும் தெரியும். இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அதிகாரப்பகிர்வு பற்றி கவனம் செலுத்தப்படும் என்று மாத்திரமே கூறியிருக்கின்றார். ஆகவே இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா செய்த வழிமுறைகள் என்ற கேள்விக்கு பதிலளிப்பதாக இருந்தால் இலங்கையின் ஒற்றை ஆட்சிக் கோட்பாட்டுக்கு ஆபத்து ஏற்படாதா முறையில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தம்தான் என்று கூறலாம்.

ஏன் அந்த நோக்கம்

இந்தியாவில் சமஸ்டி அடிப்படையில் மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அது முழுமையான சமஸ்டி முறை அல்ல. இந்திய மத்திய அரசின் ஒற்றை ஆட்சியை பாதுகாக்கும் ஏற்பாட்டுடன்தான் அந்த சமஸ்டி முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஆக பிரதமர் நேரு காலத்தில் இருந்த அந்த சிந்தனைதான் பிரதமர் இந்திரா காந்திகாலத்தில் வேகமடைந்து இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் அவ்வாறான ஒரு தீர்வுக்கு வழி வகுத்தது. எனவே 13 ஆவது திருத்தச்சட்டத்தை உள்ளபடி அமூல்படுத்துவது என்ற நிலைப்பாட்டுக்கு அப்பால் நரேந்திரமோடி செல்ல முடியாது. இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் ஈழத் தமிழர் விடத்தில் அன்று எழுதிவைக்கப்பட்ட கொள்கைதான் நடைமுறைக்கு வரும் என்பது கண்கூடு.

பயணத்தின் வேறுபாடு என்ன

ஆகவே ராஜீவ் காந்தி, மோடி ஆகியோரின் இலங்கை பயணத்தில் இருக்கக் கூடிய வேறுபாடு என்ன? அன்று ராஜூவ் காந்தி வகை தந்தபோது சீனாவினுடைய ஆதிக்கம் இலங்கையிலும் இந்து சமுத்திரத்திலும் பாரிய அளவு தாக்கத்தைச் செலுத்தவில்லை. ஆனால் இன்று நிலைமை அவ்வாறு இல்லை. சீனாவினுடைய இலங்கை மீதான செல்வாக்கு அதிகரித்த நிலையில் இந்தியப் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் இந்தியாவின் இறைமைக்கு அரசியல் பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது என்ற உணர்வு இந்தியாவுக்கு மேலோங்கியுள்ளது. இதன் பின்னணியில் மோடியின் வருகையை அவதானிக்கலாம். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காது விட்டால் இந்த பயணம் நடத்திருக்காது.

எனவே ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அதன் மூலம் 13 ஆவது திருத்தச்சட்டத்தை உருவாக்கி இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். அதாவது ஈழப் போராட்டம் வலுவடைந்து தனி நாடு அல்லது முழுமையான சுயணநிர்ணய ஆட்சி ஒன்று ஏற்பட்டு அது இந்தியாவில் இருக்கக் கூடிய 25 மாநிலங்களின் பாதி சம்ஸ்டி ஆட்சி முறையில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டை அன்று ராஜீவ் உறுதிப்படுத்தினார். ஆனால் மோடியின் வருகை ராஜீவ் காந்தியினுடைய வருகையின் தொடர்ச்சியாக இருந்தாலும் சீனாவினுடைய அரசியல் பொருளாதார இலக்குகளுக்கு இலங்கை தளமாக அமைந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அமைந்துள்ளது.

ஒப்பந்தத்தில் இருப்பது என்ன?

1987இல் ராஜீவ் ஜே.ஆர் செய்து கொழும்பில் செய்து கொண்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முழுமையாக என்ன இருக்கின்றது என்று கூட இன்றுவரை யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் மோடியின் வருகையுடன் அந்த ஒப்பந்தத்தில் இருக்கின்ற இந்திய பிராந்திய பாதுகாப்பு விடயங்கள் புதுப்பிக்கப்படலாம் என்ற தகவலும் உண்டு புதுடில்லியில் இருந்து வெளிவரும் ஆங்கில சஞ்சிகை ஒன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படலாம் எனற கருத்தை வெளியிட்டுள்ளது. ஆக இலங்கை இந்திய இராஜதந்திர உறவை மேம்படுத்தல் அதன் மூலம் சீன இலங்கை உறவை குறைத்தல் என்ற நோக்கத்தில் மோடியின் வருகையை பார்க்கலாம்.

ஆனாலும் மோடியின் வருகையை சிங்கள பௌத்ததேசியவாதிகள் ராஜீவ் காநத்தியின் வருகையை போன்று ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன. அன்று ஈழத்தை இந்தியா வழங்கிவிடும் என்ற அச்சத்தில் எதிர்ப்பு போராட்டங்கள் அரங்கேறின. ஆனால் இன்று சீனாவின் இலங்கை மீதான செல்வாக்கை குறைக்கும் நோக்கம் என்பது இந்திய நலன் சார்ந்தது என்று தெரிந்தும் மோடியின் வருகைக்கான எதிர்ப்பை அவர்கள் வெளியிடவில்லை. காரணம் அன்று இந்தியாவின் உள்நோக்த்தை அறியாமல்தான் ராஜீவ் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது என்பதை பிற்காலங்களில் சிங்கள பௌத்த தேசியவாதிகள் புரிந்து கொண்டனர். கவலைப்பட்டனர்.

புரிந்துகொண்ட நிலைப்பாடு

ஈழத் தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டை தற்போது புரிந்து கொண்டமையினால் மோடியின் வருகையை சிங்கள பௌத்த தேசியவாதிகள் எதிர்க்கவில்லை என்ற முடிவுக்கு வரலாம். ஆகவே மேல முன்வைக்கப்பட்ட இரண்டாவது கேள்விக்கு பதிலளிப்பதானால் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியா ஏற்படுத்திய இடையூறு என்பது 13 ஆவது திருத்தச் சட்டம்தான். இதனால்தான் 2002ஆம் ஆண்டு நேர்வேயின் எற்பாட்டுடன் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவடைந்தன. 2003ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை பயன்படுத்தி இந்தியா அப்போது நடத்திய நாடகம் அது. அனுசரனை முயற்சியில் ஈடுபட்ட நேர்வேயும் அவ்வப்போது புதுடில்லிக்கு சென்று இந்திய மத்திய அரசை சமாதானப்படுத்தினாலும் கூட 13 ஆவது திருத்தம் என்ற கோட்டுக்கு அப்பால் செல்ல முடியாது என்றும் ஆயுதப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் போராளிகளை முன் நிறுத்தி தீர்வை முன்வைக்க வேண்டாம் என்றும் நேர்வேக்கு புதுடில்லி யோசனை வழங்கியதாக தகவல். ஆனால் நேர்வேயின் அனுசரனை முயற்சியை குழப்பிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் அப்போது பாதிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது ஒன்றாகி மஹிந்த ராஜபக்ச ஆட்சியை கவிழ்த்து புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கியுள்ள நிலையில் மோடியின் வருகை அமைந்துள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117592/language/ta-IN/article.aspx

இதை தான் சொல்லுறது ரூம் போட்டு யோசிக்கிறது எண்டு  :D  :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.