Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் தூய குடிநீருக்கான உண்ணாவிரதத்தின் பின்னணி குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் தூய குடிநீருக்கான உண்ணாவிரதத்தின் பின்னணி குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள் APR 08, 2015 | 14:18by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள்

jaffna-protest-300x199.jpgயாழ்ப்பாணத்தில், தூய குடிநீருக்கு உத்தரவாதம் அளிக்கக் கோரி, நேற்று முதல் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், இன்று வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவின் தலையீட்டினால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

தன்னார்வ அமைப்புகள் என்று கூறப்படும் விதைக் குழுமம், தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், சுற்றுச்சூழல் அமையம் ஆகிய அமைப்புகளால் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து, 8 பேர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

வடக்கு மாகாணசபையிடம், கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேற்றிரவு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.

protest-water.jpg

அவர்களால் முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகள் தொடர்பாகவும், பதிலளிப்பதற்கு வரும் 12ம் நாள் வரை காலஅவகாசம் தரும்படியும், முதலமைச்சர் தரப்பில் கோரப்பட்டது.

எனினும், அதனை நிராகரித்த போராட்டக்காரர்கள், முதலமைச்சரை அவமரியாதைக்குள்ளாக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர் திரும்பிச் சென்றிருந்தார்.

இன்று, காலையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், போராட்டக்காரர்களுக்கு  சாதகமாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அமைச்சர் டெனீஸ்வரன் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட அந்தக் கடிதம், திருத்தங்கள் கோரி ஐந்து முறை திருப்பி அனுப்பட்டதுடன், கடைசியில், அது தமது கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமையவில்லை என்று போராட்டக்காரர்களால் நிராகரிக்கப்பட்டது.

இந்தநிலையில், வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவும், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனும், போராட்டக்காரர்களை சந்தித்தனர்.

இதன் போது, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, தமக்கு ஒரு வார கால அவகாசம் தருமாறு ஆளுனர் தரப்பில் கோரப்பட்டது.

அந்த வாய்மூல உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட போராட்டக்காரர்கள், தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.

  • வடக்கு மாகாண முதலமைச்சர் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்ற போது, அதற்கு இடமளிக்காதமை-
  • முதலமைச்சர் முன்வைத்த சாதகமான விடயங்களை பரிசீலிக்காதமை-
  • முதலமைச்சர் கோரிய ஐந்து நாள் காலஅவகாசத்தை கொடுக்க மறுத்து விட்டு, ஆளுனருக்கு ஏழு நாள் காலஅவகாசத்தை வழங்கியமை-
  • வடக்கு மாகாணசபையை உதாசீனப்படுத்தும் வகையில், ஆளுனரை முன்னிலைப்படுத்த முற்பட்டமை-

போன்ற விடயங்கள், இந்தப் போராட்டத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்களையும் விசனங்களையும் தோற்றுவித்துள்ளது.

வடக்கு மாகாணசபையின் அதிகாரங்களை மத்திய அரசின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கான- வடக்கு மாகாணசபையை நசுக்குவதற்கான புதிய சதித் திட்டத்துக்கு தூயநீரூக்கான போராட்டம், பயன்படுத்தப்பட்டு விட்டதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

வடக்கு மாகாணசபைக்கு மேலதிக அதிகாரங்களைக் கோரும் நிலையில், அதனை மறுப்பதற்காக, இருக்கும் அதிகாரங்களையே வடக்கு மாகாணசபையால், பொறுப்பாக பயன்படுத்த முடியாதளவுக்குச் செயலற்றதாக உள்ளது என்று மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் முயற்சியாக இது இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

http://www.puthinappalakai.net/2015/04/08/news/5087

 

  • கருத்துக்கள உறவுகள்

தூய நீருக்காக யாழ் குடாநாட்டில் நடைபெற்ற அரசியல் வாதிகள் யாரும் பங்குபற்றக்கூடாது எனும் சொற்கட்டுடன் நடைபெற்ற உண்ணாவிரதம் தனது பொதுவெளியில் அறிவிக்கப்பட்ட இலக்கினை அடையாமலேயே, வேறொரு இலக்கினைத் தீர்மானிக்கப்பட்டபடி சென்றடைந்து முடிவுக்கு வந்தது.

 

இதன்மூலம் ஆதாயம் தேடியவர்கள் யாவர் எனில் சிறீலங்காவின் ஏஜண்டாகிய அரசாங்க அதிபரும் யாழுக்கான ஆளுநருமே. அதாவது சிங்களத்தை அரவணைக்காது உங்களால் ஒரு துரும்பையும் அசைக்கமுடியாது என தமிழர்களுக்கு மீண்டும் ஒரு செய்தி சொல்லப்பட்டது.

 

முதல்வர் விக்னேஸ்வரன் எனப்படுபவர் முன்னைநாள் உயர்நீதிமன்றின் நீதியாளர், தவிர அதிகூடிய விருப்புவாக்குகளால் தேர்வுசெய்யப்பட்ட மக்களது பிரதிநிதி, அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டவர்களது சொல்லாடல்களை நான் பிறிதொரு பதிவினில் பார்த்தேன் வெறும் எட்டாங்களாஸ் படித்தவன் கூட இப்படிப்பேசமாட்டான். ஒரு பெரியவருக்குமுன் கைநீட்டிப்பேசுவது ஒற்றைவிரலை ஆட்டிப்பேசுவது இவை போன்றவற்றை என்னால் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.

 

இவர்களது ஆரம்பத்தில் எனக்கு ஈடுபாடு இருந்தாலும் இடையில் தாங்கள் யார் என்பதை தாங்களே அடையாளம்காட்டிவிட்டார்கள்.

 

தண்ணீர் அரசியலில் பல்வேறுபட்ட வெற்றிகளை தற்காலிகமாகவோ நிரந்தரமாகவே இவர்கள் பெற்றுவிட்டார்கள்,

 

அது அரசாங்க அதிபர் மற்றும் ஆளுநரே அதிகாரம் மிக்கவர்கள் இவர்களால் எதுவும் செய்யமுடியும் எனப் பறைசாற்றுவதுடன் மாகாணசபை கையாலாகத ஒரு நிர்வாகம் என்பதை பொதுமக்கள் மத்தியில் பதியவைப்பது.

 

இரண்டாவதாக இப்பிரச்சனையைப் பயன்படுத்தி தண்ணீர் அரசியலுடன் தண்ணீர் வியாபாரத்தையும் விருத்திசெய்துகொள்வது.

 

புலம்பெயர் தமிழர்களும் புலத்தின் தமிழர்களும் இப்பொறிக்குள் வீழாமல் இருக்கவும்.

 

சிலவேளை கூட்டமைப்பும் வடமாகாணசபையும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை இதுவிடையத்தில் எடுக்காமல் விட்டிருக்கலாம். அதற்காகத் தமிழர்களால் கூட்டமைப்பையும் தமிழ் தேசிய மக்கள் முண்ணணியையும் தங்களிலிருந்து அகற்றிவிட்டு எதிகாலத்துக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்லமுடியாது.

 

இவ்விடையத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்புடனும் முதல்வர் விக்னேஸ்வரனுடனும் ஒத்திசைவாக இருப்பதையே புலம்பெயர் சமூகம் விரும்புகின்றது. இதுபற்றி ஒரு விரிவான அறிக்கையை புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

 

இவ்வண்ணம்

புலம்பெயர் புலிவால்களின் கூட்டத்தில் ஒருவராகிய,

எழுஞாயுறு

Edited by Elugnajiru

  • தொடங்கியவர்

இங்கு இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிடுவதோடு இவர்களை யாழ் கள உறவுகள் அடையாளம் கண்டு வெளிக்கொண்டுவர வேண்டுமென்று மிகவும் தாழ்மையுடன் வேண்டிகொள்கின்றேன்.2012ல் ஆரம்பித்த இத்தொலைபேசி மிரட்டல்கள் இப்போது பல கொலைகளையும் நடத்தியுள்ளது அல்லது  எதிர் காலத்தில் நடத்தலாம் என்று எண்ணத்தோன்றுகின்றது. அண்மையில் ஐரோப்பிய நாடொன்றில் தமிழீழத்துக்கு ஆதரவான உண்மையான செயற்பாட்டாளர் ஒருவரின் சகோதரருக்கு  விடுக்கபட்ட அச்சுறுத்தலை என் காதாலேயே கேட்க முடிந்தது.இலங்கையில் மற்றும் இந்தியாவில் வசிக்கும் அவரின் சகோதரர்கள் அல்லது உறவினரது விபரங்களை கூறி அவர் தனது நிலைப்பாட்டை மாற்றாது விட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது.இது ஒரு பயமேற்படுத்தும்  நிகழ்வல்ல.இலங்கை இந்தியா மலேசியா ஒருசில மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா பிரிட்டன்,வட அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கும் ஒரு தொடர் வலையமைப்பு என்று மட்டும் தெரிகின்றது.இதன் பின் புலம் இலங்கை மற்றும் இந்திய அரசுகள் இருக்கலாம் என்றும் இந்தியாவில் பல இலங்கைத்தமிழர்களும் இலங்கை இந்திய புலனாய்வாளர்கள் சந்திக்கலாம் என்றும் பெயர் குறிப்பிடவிரும்பாத தமிழ் நாட்டு அரசியல் வாதியொருவர் ஊகம் வெளியிட்டார்

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.