Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுதிரும்பும் இலங்கை அகதிகளின் மீழ் வருகையும் சிக்கல்களும். - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடுதிரும்பும் இலங்கை அகதிகளின் மீழ் வருகையும் சிக்கல்களும்.

 

நேற்று (19.04.2015 இரவு 9 மணி. ) புதியதைமுறை தொலைக் காட்ச்சியில் தமிழ் நாட்டுக்கு ஆபத்தான படகுப் பயணத்தில் திரும்பி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கை அகதிகள் பற்றிய விவாதம் இடம்பெற்றது.

 

மீழ்வருகைக்கான காரணங்களாக அவர்கள் பின் வரும் காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அவை 1. இராணுவம் கைப்பற்றிய தமது நிலங்கள் திரும்பக் கிடைக்காதமை.2. தம்பலகாமத்தில் நிலவும் இராணுவச் சூழலில் பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பின்மை 3. இன்னும் இரண்டு பிள்ளைகள் திருவண்ணாமலை அகதி முகாமில் இருப்பது, .  

 

அகதிகளை மீழ் குடியேற்றத்தில் தீவிரமாயுள்ள குறிப்பிட்ட தொன்டு நிறுவத்தினர் ரஜபக்ச ஆட்ச்சிக் காலத்தில் இருந்தே இலங்கையில் போர் முடிந்து நிலமை சீரடைந்துவிட்டது  அகதிகள் தாயகம் திருப்பி அனுப்பப்ட வேண்டும்  என்கிற கருத்தை வலியுறுத்துகின்றனர். மேற்படி அணுகுமுறை அந்த தொண்டு நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொன்டது. 

மேற்படி விவாதத்தை பார்த்த திப்பு பூலிங்கம் என்கிற முகநூல் நண்பர் பின்வரும் கருத்தை பதிவு செய்துள்ளார்.

Tipu Poolingam "பேட்டியில் "ஒரு வழி பயணசீட்டு பற்றி கவனதிற்கு கொள்ளபட்டதுடன் இடத்துக்கிடம் ராணுவத்தின் நடவடிக்கை வேறுபட்டது என்பதையும் நன்றாக விளக்கினீர்கள்!" - Tipu Poolingam

இந்த விவாதத்தில் சோமீதரனும் கலந்து கொன்டார். இன்றுகாலை தொலைபேசியில் தொடர்புகொண்ட சோமீதரன் நான் குறிப்பிட்ட இரண்டு விடயங்கள் முக்கியமானவை என்றார். அவை ஏற்கனவே பூவிலிங்கம் பதிவு செய்யப்பட்ட விடயங்கள்தான்.,

1. நாட்டில் ஒரே சீரான சூமூக நிலை காணகப்படவில்லை. யாழ்ப்பாணம்போன்ற சர்வதேச கவனமுள்ள பகுதிகளில் இராணுவம் ஓரளவு கட்டுப்பாட்டுடன் நடக்கிறது. இந்த நிலமை தம்பலகாமம் போன்ற பின் தங்கிய வட்டாரங்களில் (Pocket ) இல்லை. அங்கு இராணுவத்தின் நடமாட்டமும் நடவடிக்கைகளும் யுத்த காலத்தில் இருந்ததைவிட அதிகம் மாரற்றமடையவில்லை. 

2. இது 20, 30 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்த இலங்கை அகதிக் குடும்பங்கள் சார்ந்த பிரச்சினை, இளைய தலைமுரையினர் இந்தியாவிலேயே பிறந்தவர்கள், அவர்கள் நாடு திரும்பும்போது உறவுகளை பிரிந்து கொன்டுதான் செல்கின்றனர். அவர்கள் திரும்பிவர விசா அனுமதி இல்லை. அதனால் அவர்கள் தற்காலிகமாக போய்ப்பார்த்து திரும்பிவந்து முடிவெடுக்கவும் வாய்ப்பில்லை.

3 திரும்பிவந்த குடும்பம் தம்பலகாம பகுதியில் இருந்து 1999ல் தமிழகம் வந்து 2010ல் தமே திரும்பிப்போய் இப்போது இராணுவம் கைப்பற்றிய நிலத்தை மீழ கொடுக்ககவில்லை. பெண்பிள்ளைகளுக்கு இராணு தொல்லை இருக்கிறது என்பதால் படகில் திரும்பிவந்துள்ளனர்'  மேலும் இவர்களது இரண்டு பிள்ளைகள் இன்னும் திருவண்ணாமலை முகாமில் உள்ளனர் .

4.ஈழத்தில் இராணுவம் விலக்கப்பட்டு இராணுவம் கைப்பற்றிய அகதிகளின் நிலம் மீழ கொடுக்கப் பொருளாதார நடவடிக்கைகள் சுமூகமாகி  அமைப்பு ரீதியாக உறுதியான இயல்புநிலை இன்னமும் திரும்பவில்லை. அரசு மாற்அத்தின் பின்னர் நிலவும் சூமூகச் சூழ்நிலையும்  ஈழ பகுதிகள் எங்கும் ஒரு சீராக இல்லை.

 

இடத்துக்கிடம் இராணுவ கெடுபிடிகள் மாறு பட்டுள்ளது.  யாழ்ப்பாண நகரில் உள்ள நிலமை வன்னியிலோ தம்பலகாமத்திலோ பொத்துவிலிலோ  இல்லை. ஈழத்தின் பல வட்டாரங்களில் இன்னும் நிலமை சுமூகமாகவில்லை அதனால் அகதி முகாமில் இருப்பவர்கள் தங்கள் ஊர்களுக்கு நேரில் சென்று பார்த்து தங்கள் நிலங்களைக் கையகப் படுத்திவிட்டு குடும்பத்தை அழைத்துச் செல்லவ் வாய்ப்பில்லை. நாட்டுக்கு திரும்பிச் சென்றவர்கள் இந்தியாவில் எஞ்சி இருக்கும் தங்கள் உறவுகளை வந்து பார்க்கவும் விசா அனுமதி சிக்கல் உள்ளது.

.

இங்கிருந்து மீழ்குடியேற்ச் செல்கிறவர்கள் திரும்பி வருவதில் உள்ள விசா சிக்கல்கள் தீர்க்கப்படவேண்டும். நாடு திரும்பியவர்கள் தமிழகம்  திரும்பி வந்தபோது  விமான நிலையத்தில் தடுத்து திருப்பி அனுப்பபடுகிரா நடைமுறைகளை அகற்றவேண்டும். ஏனைய இலங்கையர்கள் போல இங்கிருந்து சென்று மீழ்குடியேறிய குடும்பங்களுக்கும் விசா பெற்று இந்தியா வரக்கூடிய சூழல் உருவாக்கப் பட வேண்டும்.

விசா எடுத்து வரக்கூடிய வாய்ப்பிருந்திருப்பின் மேற்படி குடும்பத்தினர் தலா 25 ஆயிரம் ரூபா கொடுத்து இலங்கைக் கடற்படையால் ஆபத்துள்ள ப்படகுப் பயணத்தை மேற்கொண்டிருக்க மாட்டார்கள்.

என்னுடைய மேற்படி கருத்துக்கு பரவலான வரவேற்ப்பிருப்பது நம்பிக்கை தருவதாக உள்ளது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.