Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரைசு - அரசு - அரவு தீண்டல் - 2015 சித்திரை அரவு தீண்டல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்

ஏழாம் பதிவு

நாள்: 24.04.2015

 

     பெருந்தச்சு நிழல் காட்டியின்படி, கடந்த 04.04.2015 அன்று இவ்வாண்டின் நான்காவது முழுநிலவு சரியாக 102-ஆம் நாளில் கடந்து சென்றது.

 

     அதற்கு ஒரு நாள் முன்பாகப் பங்குனி உத்தரம் என்று பஞ்சாங்கத்தை நம்புகிறவர்கள் கொண்டாடினர். அந்த நாள் முழுநிலவு நாளும் இல்லை. அது பங்குனி முழு நிலவும் இல்லை. அது சித்திரை முழுநிலவு ஆகும்.

 

     அந்தச் சித்திரை முழுநிலவை நிழல் தீண்டியது. பழந்தமிழில் ‘அரவு தீண்டுதல்’ என்று குறிப்பிடப்படும் நிகழ்வு இவ்வாறான நிழல் தீண்டும் நிகழ்வு (சந்திர கிரகணம்) அல்ல என்று தெரிகிறது.

 

     மூவைந்தான் முறை (புறம் 400-2) முற்றாமலும், நாள் முதிர் மதியம் (மணி 5-12) தோன்றாமலும், முழுவட்டத்தில் ஏற்படும் குறைவையே ‘அரவு தீண்டுதல்’ என்று பழந்தமிழர் குறித்தனர் என்று கருத இடம் இருக்கிறது.

 

     நிலவு தனது வடிவில் குறைபடாமல் அதனை அணை கொடுத்துக் காப்பாற்றும் வல்லுநர்களின் அமைப்பிற்கே அரைசு அல்லது அரசு என்று பெயர் என்று புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. நிலவில் நிழல் விழுந்தால் அது தானாக நீங்கி விடுகிறது. ஆனால் நிலவை அரவு தீண்டினால் மாந்த முயற்சியினால் நீக்கினர் என்று தெரிகிறது. விசும்பு மெய் அகல (பதிற்றுப்பத்து – 69), திங்கள் அரவு உறின் தீர்க்கலார் (முல்லைக்கலி 140-17). நிழலின் அறிகுறியை அரவு தீண்டும் அறிகுறியாக கருதி அஞ்சினர் என்றும் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இது போகக் கோள்பட்டு மூளியாதல் (பெரும்பாண்-384) என்பதும், நிழல் தீண்டுதல் மற்றும் அரவு தீண்டுதல் ஆகியவற்றுடன் தொடர்பு உடையது என்று தெரிகிறது.

 

     கடந்த 04.04.2015-ல் தோன்றிய நான்காவது முழுநிலவு, இரவு 7.30க்குப் பிறகே நிழலில் இருந்து விடுபட்டு முழுவட்டம் காட்டிற்று ஆயினும், மறுநாள் காலையில் கதிர் எழும் வேளை வரை தாக்குப் பிடித்து இருந்த படியால் அந்த நாளையே முழுநிலவு நாளாகக் கணக்கிடுவதே பொருத்தமானது.

 

     சந்திர கிரகணங்களில் முழுநிலவில் மட்டும் தோன்றும் சந்திர கிரகணம் என்றும், எப்போது வேண்டுமானாலும் தோன்றும் சந்திர கிரகணம் என்றும் வகைப்பாடுகள் பிறரிடம் உள்ளனவா என்பது ஆய்வுக்குரியது.

 

     தமிழர் மரபில் நிழல்படாத 12 முழு நிலவுகளையும், மறு நிறம் கிளர (அகம் 141-6) ஒளிவிடும் ‘தை’ நிலவைப் பெருமைப்படுத்தும் செய்திகள் யாவும், ஆண்டு நாட்களில் எண்ணிக்கைக் குறைவு ஏற்படாத வெற்றிபெற்ற ஆண்டு பற்றிய செய்திகளாகவே தெரிகின்றன.

 

     கட்டிலில் மல்லாந்து படுத்துக்கொண்டு விதானத்தில் வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்து அரசி கலங்கிக் கண்ணீர் வடித்த செய்தியில் ‘நிலவை உரோகிணி தீண்டி விடும்’ என்ற அச்சத்தினால் இருக்கலாம் என்ற பார்வையில் ஆய்வு மேற்கொள்தல் தேவையாகிறது. உரோகிணி பாம்பைக் குறிப்பது கருதத் தக்கது.

 

     முரண் மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய

     உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா

     மாயிதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப் பணி

                                           (நெடுநல்வாடை 162-164)

 

     போருக்குச் சென்ற கணவனின் பிரிவால் துயர் உற்று அரசி கலங்கினாள் என்று பலர் உரை செய்துள்ளனர். கணவனைப் போருக்கு அனுப்பிவிட்டுப் பிரிவுத்துயரத்தில் வாடும் வழக்கம் தமிழர் மரபில் இல்லை. மாறாகத் துயரைத் தாங்கும் மரபினதாக இருந்துள்ளனர். மேலும் நிலவும் உரோகினியும் இணைபிரியாக் காதலர்கள் என்ற ஆரியக் கட்டுக்கதை தமிழ் மரபுக்கு நேர் எதிரானது. ‘அரவுப் பகை அஞ்சித் திங்களும் ஈண்டு திரிதலும் உண்டுகொல்’ (சிலம்பு 5-227) என்று நிலவும் அரவும் பகையாகப் பார்க்கப்படுகிறது.

 

     நிலவின் ‘அரவுக்குறி’ இயற்கைப் பேரிடரைச் சுட்டும் என்றும், மக்கள் இன்னுயிர் அஞ்சினர் என்றும் செய்திகள் உள்ளன (மதுரை காஞ்சி 403) தமிழர் மரபில் தன்னுயிர் அஞ்சுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. பிற உயிர்கள் அழிவுறுவதையே இன்னுயிர் அஞ்சுதலாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மன்னர் நடுங்கினர் என்ற செய்தியும் வியக்க வைக்கிறது.

 

மன்னர் நடுங்கத் தோன்றிப் பல்மாண்

எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்

குல்லை கரியவும் கோடு எரிநைப்பவும்

அருவி மாமழை நிழத்தவும் மற்றுஅக்

கருவி வானம் கடற்கோள் மறப்பவும்

பெருவறன் ஆகிய பண்பில் காலையும்

(பொருநர் ஆற்றுப்படை 232-237)

 

     நிலவு அஞ்சியதும், மக்கள் இன்னுயிர் அஞ்சியதும், அரசி கலங்கியதும், மன்னர் நடுங்கியதும் ஆன அரவுப் பகைமை பற்றி ஆரிய வைதிகம் அஞ்சவே இல்லை என்பதும் அது பற்றி அறிந்து கொள்ளவே அது அக்கறை எடுக்கவில்லை என்பதும் அதன் அயோக்கியத்தனத்திற்கு அளவு கோல் ஆகும்.

 

     ஆரிய வைதிகப் பஞ்சாங்க நம்பிகளும், அதனை உயர்த்திப் பிடிக்கும் அம்பிகளும் ‘சந்திரகிரகணம்’ ஒரு தோசம் என்று நேர்மையாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதனைத் தவிர்க்கவும் நீக்கவும் வழி சொல்லவில்லை. பரிகாரம் செய்யவே பரிந்துரை செய்கின்றனர். இந்த இடத்தில் தான் குற்றுயிரும் குறையுயிரும் ஆகக் கிடக்கும் தமிழர் மரபறிவு உதவிக்கு வருகிறது. இலக்கியங்களும் தொழில் மரபு நூல்களும் துணை புரிகின்றன.

 

     நிலவை நிழல் தீண்டிவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதே கோத்தொழில். அத்தகைய கோத்தொழில் நுட்பங்களைக் கொள்ளையடித்து மொழிமாற்றம் செய்து எற்றிப் பிழைத்துக் கொண்டு முட்டாள்களாக நீடிக்கும் ஆரிய வைதிகர் யாருக்கும் தமிழைத் தொட்டுப் பேச உரிமை இல்லை. அவர்கள் முக்கினாலும் அறிவு வராது.

 

     கடந்த சித்திரை நிலவினைக் ‘கோள்பட்ட வருடை’ (பதிற்றுப்பத்து-60-ன்-பதிகம்-3) என்றும், ‘சித்திரை சித்திரத் திங்கள் சேர்ந்தென வெற்றிவேல் மன்னர்க்கு உற்றதை ஒழிக்க என’ (சிலம்பு – இ.வி-5-64) என்றும், இந்திர விழா எடுக்க வாய்ப்பு இல்லை. வருவதை எதிர்கொள்ளக் காத்திருக்கும் தமிழ் மக்கள் அறிவாயுதத்தை நம்பி இருக்கின்றனர்.

 

     கடந்த 04.04.2015-ல் தோன்றிய நான்காவது முழுநிலவு நாளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அந்த நாளைத் தவிர்த்து எண்ணப்பட்ட 15-வது வழிநாள் ஆனது கடந்த 19.04.2015 அன்று அமாவாசை நாளாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதன் வழியே இவ்வாண்டின் ஐந்தாவது முழுநிலவானது 132-ஆம் நாளில் 04.05.2015 அன்று எதிர்பார்க்கப்படுகிறது. அது வைகாசி நிலவு ஆகும். அந்த நிலவு ஒருநாள் முந்தினாலும் அது அது வைகாசி நிலவுதான். அதனைச் சித்திரை நிலவாகத் தமிழர்கள் யாரும் கொண்டாட வேண்டாம். கொண்டாடுவோரைக் குறுக்கே விழுந்து தடுக்கவும் வேண்டாம்.

 

     ஒவ்வொரு நாளையும் எண்ணித் தைத்திங்கள் முதல் நாளுக்காகத் தவம் இருப்போரின் மன வலிமையே கோளின் போக்கை ஊக்கப்படுத்தும் பேராற்றல் என்ற உண்மையை புரியும்படி ஒவ்வொருவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது தமிழறிந்த தமிழர்களின் தலையாய கடமையாகும். இந்த முயற்சியில் ஈடுபடும் எவருக்கும் தமிழர்களின் மரபு வழிப்பட்ட அனைத்துவகை அறிவுத்துறைகளும் வழியமைத்துத் தரும் என்று தமிழின் பெயரால் நம்பலாம்.

 

__--000OOO000---___

    

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.