Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதத் தடைச்சட்டம் தமிழர்களை ஒடுக்கும் புதிய சட்டமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதத் தடைச்சட்டம் தமிழர்களை ஒடுக்கும் புதிய சட்டமா?

குளோபல் தமிழ் செய்திகளுக்காக அன்பழகன்:-

26 ஏப்ரல் 2015

ஈழத் தமிழ் மக்களை ஒடுக்கவும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை வளர்ப்பதற்காகவுமே இலங்கையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தனிச்சிங்கள சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் என பல சட்டங்களை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். பௌத்த சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான ஈழத் தமிழர் போராட்டத்தை ஒடுக்கும் இந்தச் சட்டங்கள் தமிழ் மக்களை கடுமையாக ஒடுக்கியுள்ளன. இதனால் தமிழ்மக்களின் இயல்பான வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இயல்பான வாழ்வை பாதிக்க வைத்தலின் ஊடாக போராட்டத்தை கைவிடச் செய்வதும் இந்தச் சட்டங்களின் நோக்கங்களாகும்.

இனவாதம், மதவாதம் ஆகியவற்றை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிடுவோர் மற்றும் எழுதுவோருக்கு எதிராக இரண்டு வருட சிறை தண்டனை என்ற சட்டம் இலங்கையில் கொண்டு வரப்படுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் என்பது பௌத்த சிங்களப் பேரினவாத்தை பாதுகாக்கும் ஓர் அரசாங்கமாகவே காணப்படுகிறது. சிறுபான்மை இனங்களை அடக்கி ஒடுக்கின்ற இனவாத்தை தடை செய்யும் ஒரு சட்டமே இலங்கைக்கு தேவைப்படுகிறது. அதற்கான அறிகுறிகள் இலங்கையின் புதிய அரசாங்கத்திடமும் இல்லை. இலங்கையின் புதிய அரசாங்கமும் சிங்கள பௌத்த பேரினவாத்தை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியின் அடிப்படையிலேயே செயற்படுகிறது.

இனவாதம் மதவாதம் பேசுவதை தடுப்பது என்பதைக் காட்டிலும். இனவாதம் மதவாதத்தை முன்னெடுப்பதை அல்லது வளர்ப்பதை தடுப்பதே அவசியம். அதற்கான சட்டமே அவசியமானது. இலங்கையில் நடந்த ஆயுதப் போராட்டம் குறித்த அனுபவத்திலிருந்தே இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. இலங்கையில் நிலவும் பௌத்த, சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையின் அனுபவத்திலிருந்து இலங்கையில் நடைபெற்ற இன ஒடுக்குமுறை மற்றும் ஒனவொறுத்தல் அனுபவத்திலிருந்து இந்த சட்டம் கொண்டுவரப்படடுவதாக இலங்கை அரசாங்கம் கூறவில்லை.

நிச்சயமாக இலங்கை அரசாங்கம் அவ்வாறு ஒரு சட்டத்தைக் கொண்டுவரப்போவதில்லை. ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் சிங்களப் பேரினவாத சட்டத்தையே சிங்களப் பேரினவாத அரசு கொண்டுவரும். ஆயுதப் போராட்டத்தை இனவாதப் போராட்டமாக மதிப்பிடலும் அதுபோன்றதொரு போராட்டம் இலங்கையில் மீண்டும் எழாதபடி இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்றால் நிச்சயமாக அது சிறுபான்மை மக்களின் முக்கியமாக தமிழ் மக்களின் போராட்டத்தை அல்லது பௌத்த சிங்கள பேரினவாத்திற்கு எதிரான எதிர்ப்பை கட்டுப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே உள்ளது.

இலங்கையில் இனவாத்தையும் மத வாதத்தையும் தூண்டுபவர்களுக்கு சிறை தண்டனை என்றால் இலங்கையை ஆள்பவர்களும் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளும் முதலில் சிறையில் அடைத்து தண்டிக்கப்பட வேண்டியவர்கள். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான் ஒரு சிங்கள பௌத்தன் என்ற வகையில் நேர்மையாகச் செயற்படுவேன் என்கிறார். இவ்வாறு சிங்கள பௌத்த நேர்மையை அவர் வெளிப்படையாக அறிவிப்பதன் அவசியம் எதற்காகவென யாவருக்கும் புரியும். அதைப்போலவே இன்றைய பிரதமரும் பெளத்த சிங்கள பேரினவாத அரசியலை நுட்பமாக முன்னெடுக்கின்றார்.

சிங்கள தேசத்தின் பெரும்பான்மையான அரசியல்வாதிகள் வெளியிடும் கருத்துக்கள் சிங்களப் பேரினவாதத்தின் பாற்பட்டதேயாகும். அவர்களில் பலர் இன்றைய அரசாங்கத்திலும் அமைச்சர்களாக உள்ளனர். குறிப்பாக வரலாற்று ரீதியாக உண்மைகளை மறைத்து தமிழ் மக்களின் வரலாற்றை, தமிழ் மன்னர்களின் வரலாற்றை மறைத்து இந்த நாட்டை பௌத்த சிங்கள நாடாக சித்திரிக்கும் ஒரு கல்வியையே இன்று இலவசக் கல்வி வழங்குகிறது. இவ்வாறான நிலமைகள் காணப்படுகின்ற வேளையில் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதை தடுப்பாற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்பது வெளிப்படையானது.

இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை கேட்டால் அதை இனவாதம் என்கிறார்கள். மக்களின் நிலங்கள் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருக்கிறது. உயர்பாதுகாப்பு வலமாய சுவீகரிக்கப்பட்டிருக்கிறது. அதை விடுவியுங்கள் என்று கேட்டால் அது இனவாதம் என்கிறார்கள். பௌத்த சிங்கள இனவாத வெறியின் உச்சமாக நடந்த இனப்படுகொலை தொடர்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டமையை இனவாதம் என்கிறார்கள். பொறுப்புக் கூறத் தவறும் விடயங்களையும் உண்மைகளை ஏற்றுக்கொள்ளத் தவறும்போதும் அதை இனவாதம் என்று மிகவும் இலகுவாக சொல்லிவிட்டு பேரினவாத அரசியலை செய்கின்றனர். அல்லது அதனை முன்னோக்கி நகர்த்தி பாதுகாக்கின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தமிழர் தரப்பை இனவாத நோக்கங்களை தூக்கி எரிந்துவிட்டு நாட்டை மீட்க வருமாறு அத்துலிய இரத்தினதேரர் ஒருமுறை அழைப்பு விடுத்திருந்தார். வடக்கு கிழக்குடன் நிலவுவது இனப்பிரச்சினையல்ல என்றார் இன்னொருமுறை. தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதை இனவாதம் என்று குறிப்பிடும் சிங்களப் பேரினவாதிகள் சிங்களப் பேரினவாத்திற்கு எதிராக போராடுபவர்களை இனவாதிகள் என வரையறுப்பதுதான் மிகவும் அபாயகரமானது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் குறித்து வாய் திறந்தால் வெல்ல முடியாது என்று தமிழ் குறித்து பேசுவதை இன்றைய ஆட்சியாளர்கள் தவிர்த்தனர். இலங்கையில் எத்தகைய இனவாதம் நிலவுகிறது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. சிங்கள பேரினவாத அரசியல் என்பது தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் பகிரக்கூடாது என்ற சமத்துவதற்கு எதிரான கருத்தை சிங்கள மக்களிடம் ஊட்டியுள்ளது. எனவே சிங்களப் பேரினவாத கருத்தியலை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு சட்டத்தை இலங்கையில் துணிந்து யார் இயற்றுவது? இப்போதும் எந்தவொரு சட்டம் கொண்டுவரப்பட்டாலும் சிங்களத்திற்கும் பௌத்திற்கும் அது எதிரானதல்ல என்றும் பாதுகாப்பானது என்றும் நிருபீத்தாலேயே அந்த சட்டம் கொண்டு வரப்படுகிறதென்றால் அதன் நோக்கம் ஈழ மக்களுக்கு எதிரானது என்பதை வெளிப்படையானதல்லவா?

ஆக இந்தச் சட்டம் என்பது சிங்கள பௌத்த பேரினவாத்தால் ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்கள் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக கொடுக்கும் குரலை நசிப்பதற்காகவா கொண்டுவரப்படுகிறது. உண்மைகளை ஏற்றுக்கொள்ளாது அதனை மறைப்பதற்காகவா இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்பது இன்னொரு விடயம். வரலாற்றை இல்லாமல் செய்ய முடியாது. உண்மையை பேசுவதன் ஊடாக அதிலிருந்து பெறும் அனுபவங்களைக் கொண்டு வரும் காலத்தை கட்டமைக்க வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை தொடர்பான உண்மைகளை மறைப்பதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம் எனில் இதை தமிழருக்கு எதிரான பௌத்த சிங்களப் பேரினவாத சட்டம் எனலாம். பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு ஈடானது எனலாம்.

இனவாதம் என்பது என்ன? இனத்தினை மிதப்பாக காட்டி அதை மேலானதாகவும் ஏனைய இனங்களை அடக்கும் தகைமை கொண்டது எனக் கருதுவது இனவாதமாகும். இதன் அடிப்படையாக இன மிதப்புக் குணம் காணப்படுகிறது. இனவாதத்தை அடிப்படையாக கொண்டவர்கள் வன்முறை, பாகுபாடு போன்றவற்றை ஏனைய இனங்களின்மீது மேற்கொள்கின்றனர். இனம் சார் தார்ப்பரியங்ககள் மற்றும் நம்பிக்கைகள் இனவாதம் எனப்படுகிறது. இவைகளால் ஒடுக்கப்படும் ஓர் இனம் தனது அடையாள அழிப்புக்கு எதிராக போராடுவது இனவாதம் என்று வரையறுக்க முடியாது.

ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்கள் இனவாதத்திற்கு எதிராகவே போராடுகின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை இனவாதம் என்று ஒடுக்குவதே இனவாதமாகும். தந்திரமான புத்திசாலித்தனமான இனவாதமாகும். உலகில் ஒவ்வொரு தேசிய இனமும் தனது அடையாளத்தையும் வரலாற்றையும் பாதுகாக்கிறது. அதன் அடிப்படையில் தம்மை தாம் ஆள்கின்றனர். தனித்துவமான ஓர் சமூகம் தம்மீதான இனப்பாகுபாடு கொண்ட ஒடுக்குமுறை நோக்கம் கொண்ட வன்முறைக்கு எதிராக போராடுவது இனவாதமல்ல. அது விடுதலைக்கான போராட்டம். சமத்துவதற்கான எளியோர்களின் போராட்டம். இனவாத்திற்கு எதிரான போராட்டம். இனவாத ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களின் போராட்டம்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக அன்பழகன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119048/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இச்சட்டத்தை பற்றி கூட்டமைப்பின் கருத்து என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.