Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு கப்பலின் காவியப் பயணம்

Featured Replies

ship_2351338g.jpg

 

 

shockildon_2351337g.jpg

ஷாக்கிள்டன்

 

 

உலகின் தென்துருவமான அண்டார்டிகா பனிக் கண்டத்துக்குச் செல்லும் சாகசப் பயணங்கள் 1910-களில் பெரும் புகழ்பெற்றிருந்தன. 1911-ம் ஆண்டில் தென் துருவத்தில் மனிதக் காலடி பட்ட பிறகு, அண்டார்டிகாவை தரைவழியாகக் கடக்கும் எண்ணத்துடன் 1914-ல் ஒரு பிரிட்டிஷ் சாகசப் பயணம் திட்டமிடப்பட்டது.

 
தரைவழித் திட்டம்
 
அந்தக் காலத்தின் கடைசி சாகசப் பயணமாக இது கருதப்படுகிறது. இந்தப் பயணத்துக்குத் தலைமை வகித்தவர் சர் ஏர்னெஸ்ட் ஷாக்கிள்டன். பனிப்பாறைகளின் மீது தரை வழியாக அண்டார்டிகா கண்டத்தின் மறுமுனையை அடைய வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் முதன்மைக் குறிக்கோள் என்று ஷாக்கிள்டன் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால், இந்தப் பயணம் அதைச் சாதிப்பதற்கு மாறாக, எண்ட்யூரன்ஸ் (நீடித்து நிலைக்கும் என்று அர்த்தம்) கப்பலின் மிகப் பெரிய காவியப் பயணமாக மாறியது.
 
ஷாக்கிள்டனின் அனுபவம்
 
1911 டிசம்பரில் நார்வே குழுவுக்குத் தலைமை வகித்துச் சென்றிருந்த ரால்ட் அமுண்ட்சென் தென் துருவத்தை முதன்முதலாக அடைந்திருந்தார். அமுண்ட்சென் சென்று 33 நாட்களுக்குப் பின்னர் பிரிட்டிஷ் குழுவுடன் கேப்டன் ஸ்காட் தென் துருவத்தைச் சென்றடைந்தார். இருவரும் வெவ்வேறு பாதைகளில் சென்றதும் இதில் குறிப்பிடத்தக்கது.
 
தென் துருவத்தைத் தொடுவதற்கு முன்னதாகவே கேப்டன் ஸ்காட் 1901 04-ல் ஒரு பயணத்தை மேற்கொண்டார். அந்தக் குழுவில் ஷாக்கிள்டன் இடம்பெற்றிருந்தார், அத்துடன் பிரிட்டிஷ் அண்டார்டிகா சாகசப் பயணம் (1907 09) ஒன்றுக்கும் ஷாக்கிள்டன் தலைமை வகித்து சென்றிருந்தார். இந்த அனுபவங்களின் அடிப்படையில் அண்டார்டிகா கண்டத்தின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனையை தரைவழியாகச் சென்றடையும் சாகசப் பயணத்துக்குத் தலைமை வகிக்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இரண்டு கப்பல்கள்
 
அண்டார்டிகாவின் வெண்டல் கடற்பகுதி வழியாக தென் துருவத்தை அடைந்து, அங்கிருந்து தரைவழியாகவே கண்டத்தின் மறுமுனையான ராஸ் கடல் பகுதியைச் சென்றடைவதுதான் இந்தப் பயணத்தின் அடிப்படை நோக்கம்.
 
திட்டமிட்டபடி அண்டார்டிகாவுக்கு மேலே அட்லாண்டிக் கடலில் உள்ள சாண்ட்விச் தீவுகளில் ஒன்றான தெற்கு ஜார்ஜியாவில் இருந்து பயணம் தொடங்கியது. புறப்பட்ட நாள் 1914 டிசம்பர் 5-ம் தேதி. ஷாக்கிள்டன் தலைமையில் வெண்டல் கடல் பகுதியை நோக்கி எண்ட்யூரன்ஸ் கப்பலும், கேப்டன் ஏனியாஸ் மேக்கிண்டாஷ் தலைமையில் ராஸ் கடல் பகுதியை நோக்கி அரோரா கப்பலும் புறப்பட்டன.
 
எண்ட்யூரன்ஸுடன் மற்றொரு கப்பல் எதற்காகப் புறப்பட்டது?
ஷாக்கிள்டன் தலைமையில் அண்டார்டிகாவின் ஒரு பகுதியைத் தொட எண்ட்யூரன்ஸ் கப்பல் போய்க்கொண்டிருந்தது. அதேநேரம் இவர்களுக்கு உதவுவதற்காக அண்டார்டிகாவின் எதிர்பகுதியான ராஸ் கடலை நோக்கி அரோரா கப்பல் பயணித்தது. எண்ட்யூரன்ஸ் கப்பல் குழு அண்டார்டிகாவைத் தொட்ட பிறகு, தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தரைவழியாகத் தரவே அரோரா சென்று கொண்டிருந்தது.
 
பனிக் கண்டத்தைக் கடந்து செல்லத் திட்டமிட்ட இந்தப் பயணத்தில் கப்பல் குழுவினருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முழுவதையும் எண்ட்யூரன்ஸ் கப்பலே சுமந்து செல்ல முடியாது. அத்தியாவசியப் பொருட்கள் இல்லையென்றால் கப்பல் குழுவினர் உயிர் பிழைக்க முடியாது. அந்தத் தேவையை நிறைவு செய்யவே மேக்கிண்டாஷ் தலைமையில் அரோரா கப்பல் சென்றது.
 
வெடித்தது பிரச்சினை
 
ஆனால், எண்ட்யூரன்ஸ் கப்பல் அண்டார்டிகா கண்டத்தைத் தொடுவதற்கு முன்னதாகவே பிரச்சினை வெடித்தது. பயணம் தொடங்கி ஒன்றரை மாதத்தில் குளிர்காலம் தீவிரமடைய ஆரம்பித்தது. 1915 ஜனவரி 18-ம் தேதி வெண்டல் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த எண்ட்யூரன்ஸ் கப்பலைச் சூழ்ந்து பனி படர ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாகப் பனிப்பாறைகளின் நடுவே கப்பல் சிக்கிக்கொண்டது.
 
பனிப்பாறைகள் விலகுவதாகத் தெரியவில்லை. பனிப்பாறைகளை வெட்டியெடுத்துக் கப்பலை வெளியேற்றும் கப்பல் குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. கப்பலில் இருந்த குழுவினரின் எண்ணிக்கை 28.
 
பனிக் கண்டத்தின் மேலே
 
அடுத்த 9 மாதங்களுக்குப் பனிப்பாறைகளால் கப்பல் வடக்கு நோக்கித் தாறுமாறாக நகர்த்தப்பட்டுக்கொண்டே இருந்தது. அக்டோபர் மாதத்தில் பனிப் பாறைகள் கப்பலின் பலகைகளை உடைக்க ஆரம்பித்தன. கப்பல் உடைந்து மூழ்கத் தொடங்கியது. வேறு வழியில்லாத நிலையில் எண்ட்யூரன்ஸ் கப்பலைக் கைவிட ஷாக்கிள்டன் உத்தரவிட்டார்.
 
அதற்குப் பிறகும் வடக்கு நோக்கிப் பனிப்பாறைகள் நகர்ந்து கொண்டேவர, கப்பல் குழுவினர் பனிப்பாறைகளின் மீதே தற்காலிக முகாமில் பல மாதங்களுக்குத் தங்கியிருந்தனர். அவர்களிடம் அவசரகாலப் படகுகள் இருந்தன. ஆனால், அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்றால்கூட, பனிப்பாறைகள் உடைந்து படகு செல்வதற்குத் தண்ணீர் வேண்டுமே.
 
அவர்கள் கடல் நாய் (சீல்), பென்குயின்களை வேட்டையாடிச் சாப்பிட்டனர். கடல்நாய்களின் கொழுப்பை எரிபொருளாகப் பயன்படுத்தினர். பெரும்பாலான நேரம் எதுவும் வேலை செய்ய முடியாது என்பதால் அவசரகாலப் படகுகளைத் தலைகீழாகக் கவிழ்த்து, தூங்கும் பைகளுக்குள் புகுந்துகொண்டு அவற்றுக்குள் தூங்கினர்.
 
பெரும் துணிச்சல்
 
பனி விலக ஆரம்பித்த பிறகு அருகிலிருந்த தரைப்பகுதியான யானைத் தீவை நோக்கி அவசரகாலப் படகுகளில் முன்னேறினர். அந்தத் தீவில் இருந்து ஐந்து பேருடன் எண்ட்யூரன்ஸ் கப்பல் புறப்பட்ட தெற்கு ஜார்ஜியா தீவுக்கு அவசரகாலப் படகில் செல்லத் தயார் ஆனார் ஷாக்கிள்டன். மிகவும் குறுகலான அந்தக் கடல் பகுதியில் 1916 ஏப்ரல் 24-ம் தேதி புறப்பட்டனர்.
 
காதை கிழிக்கும் பலத்த காற்றும், உறைய வைக்கும் குளிர்ச்சியான தண்ணீர் படகுக்குள் புகுவதுமாகப் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தனர். திசையறிய அவர்களிடம் மாலுமிகளின் காலமானி மட்டுமே இருந்தது. அதைக் கொண்டு திசையறிந்து, மிகவும் துணிச்சலுடன் 1,287 கி.மீ. தொலைவை 17 நாட்களில் கடந்து தெற்கு ஜார்ஜியாவை அடைந்தனர்.
 
ஆனால், அதிலும் ஒரு துரதிருஷ்டம். அவர்கள் சென்றடைந்தது தெற்கு ஜார்ஜியாவின் மற்றொரு முனை. உதவியைப் பெற வேண்டுமானால், மறுமுனையை அடைந்தாக வேண்டும். அப்பகுதியில் நெடிதோங்கி இருந்த மலைகளை ஏறிக் கடப்பதுதான் ஒரே வழி. கடலை துணிச்சலாகக் கடந்த ஆறு பேரும் மலைகளையும் ஏறிக் கடந்தனர்.
 
நிறைந்தது பயணம்
 
மறு முனையை அடைந்து உதவியைப் பெற்றனர். யானை தீவில் எஞ்சியிருந்த கப்பல் குழுவினரை மீட்க ஷாக்கிள்டன் திரும்பி வந்தபோது, ஐந்து மாதங்கள் கடந்திருந்தன. தன் குழுவினர் அனைவரையும் எந்த உயிர் சேதமும் இல்லாமல், தெற்கு ஜார்ஜியாவுக்கு ஷாக்கிள்டன் மீட்டுக் கொண்டுவந்தார். இதுதான் எண்ட்யூரன்ஸ் கப்பல் குழுவினர் காவியப் பயணம்.
 
அதேநேரம், அண்டார்டிகா கண்டத்தின் மற்றொரு முனையில் இருந்த ராஸ் கடல் குழுவினரோ மாறுபட்ட பயங்கரமான அனுபவத்தை எதிர்கொண்டனர். கடும் காற்றில் சிக்கிய அவர்களுடைய அரோரா கப்பல் சேதமடைந்தது. அதில் இருந்த கருவிகளும், அத்தியாவசியப் பொருட்களும் வீணாகின. இந்தப் பிரச்சினையில் அரோரா கப்பல் குழுவைச் சேர்ந்த 3 பேர் மடிந்தனர்.
 
endurance_2358851f.jpg
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.