Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேற்றுக் கிடங்காகிய இரத்தினபுரம் வீதி - பல வருடங்களாக கோரிக்கை விடுத்தும் புனரமைக்கவில்லை

Featured Replies

kili%20road_CI.jpg

கிளிநொச்சி நகரத்திற்கு மிக அருகில் உள்ள இரத்தினபுரம் கிராமத்திற்கு  அந் நகரத்திலிருந்து செல்லும் பாதை கடந்த பல வருடங்காக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. இதனால் ஆனந்தபுரம், இரத்தினபுரம், திருவையாறு போன்ற கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் போக்குவரத்தின்போது பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகின்றனர். 

கிளிநொச்சி நகரத்தின் ஏ-9 பாதையிலிருந்து ஆரம்பிக்கும் இந்த வீதி ஆனந்தபுரம், இரத்தினபுரம் ஊடாக திருவையாற்றிற்குச் செல்கிறது. சுமார் இரண்டரை கிலோமீற்றர் நீளமான இந்த வீதி கடந்த பல வருடங்களாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. அதிகாரிகள் எவரும் இதைக் கவனத்தில் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். 

இந்த வீதியில் இரத்தினபுரப் பகுதியில் பாரிய சேற்றுக்கிடங்கு ஒன்று காணப்படுகிறது. மழை பெய்யும் நாட்களில் இதனால் முற்றாக போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. ஆப்பதான சேற்றைக் கடந்தே பாடசாலை மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குச் செல்ல வேண்டும். சேற்றில் குளித்தே மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லுகின்றனர். 

இந்த வீதியின் ஊடாக சட்டவிரோத மண் மற்றும் மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன. மண் ஏற்றிச் செல்லும் உழவு எந்திரங்களின் பயன்பாட்டின் காரணமாகவே இந்த வீதி மேலும் மேலும் மோசமடைந்து வருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மழைகாலங்களில் உழவு இயந்திரங்கள் சென்ற பின்னர் வீதி சேற்றுக் குளமாக காட்சியளிக்கிறது. 

சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள் இந்த வீதியில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது. தினந்தோறும் பலர் சேற்றில் வழுக்கி விழுகின்ற நிகழ்வுகள் இடம்பெறுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் முற்றுமுழுதாக போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

திடீர் சுகவீனங்கள் ஏற்பட்டால் நோயாளியைக் கொண்டு செல்ல முடியாது. வாகனத்திலோ அல்லது நோயாளியை தூக்கிக் கொண்டே செல்ல முடியாது. இந்த வீதி கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்குச் செல்லும் வீதியாகும். இரத்தினபுரம், திருவையாறு மாத்திரமின்றி மருதநகர், வட்டக்கச்சியிலிருந்து வைத்தியசாலை செல்பவர்களும் இந்த வீதியையே பயன்படுத்தி வந்தனர். 

இந்த வீதி முழுவதும் பள்ளமும் புட்டியும் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. சரியான வடிகால் அமைப்பும் இன்றி, வீதியும் புனரமைக்கப்படாமல் மழைகாலங்களில் சேறாகவும் குளமாகவும் கிணறாகவும் காணப்படும் இந்த வீதியை உரியர்கள் புனரமைக்க இனியாவது முன்வருவார்களா? மக்கள் அசௌகரியமற்ற போக்குவரத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பார்களா? 

மழைகாலங்களில் தண்ணீர் பாயும் இந்தப் பகுதிக்கான வீதியை நிரந்தரமாக உரியமுறையில் புனரமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. குறிப்பாக மழைகாலங்களில் முற்றகா போக்குவரத்தை மேற்கொள்ள முடியாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்க நேரிடுகிறது. மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. 

இவ்வாறு இந்தப் பிரதேசத்தின் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதற்கு புனரமைக்கப்படாத இந்த வீதி காரணமாக அமைகிறது. கிளிநொச்சி நகரத்திற்கு அண்மையில் உள்ள இந்த வீதி இவ்வாறு காணப்படுவதுதான் வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியின் சாதனையா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120089/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.