Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

”ஐயோ மாமா… ஏன் என்னை துன்புறுத்துறீங்க, கடைசி நிமிடம் வரை கதறிய வித்தியாவின் அழு குரல் வெளியானது.

Featured Replies

ஐயோ மாமாஎன்னை கஷ்­டப்­­டுத்­தாமல் போக விடுங்கோநான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்கஎன்று கதறிய வித்தியா

ஐயோ மாமாஎன்னை கஷ்­டப்­­டுத்­தாமல் போக விடுங்கோநான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்கஎன்னை விட்­டி­டுங்க மாமாஐயோ என்னை போக விடுங்கோ மாமாஎன அவள் மன்­றா­டினாள்.

அப்­போது அவள் அணிந்­தி­ருந்த உள்­ளா­டை­களில் ஒன்றை களைந்து அவ­ளது வாய்க்குள் திணித்து மன்­றாட்­டத்தை அடக்­கினோம். அவ­ளது மன்­றாட்­டத்தை நாம் கணக்­கெ­டுக்­­வே­யில்லை.

துடிக்­காமல் இருக்கும் வண்ணம் அவ­ளது கால்­­ளையும் கைக­ளையும் இழுத்து மரங்­களில் கட்டினோம்.

அதன் பின்னர் காலை 7.45 தொடக்கம் மு..11.30 வரை ஒருவர் மாறி ஒரு­­ராக நாம் அவளை பாலியல் பலாத்­காரம் செய்­து­கொண்­டி­ருந்தோம்.

மர­­­டைந்து விட்டாள் என தெரிந்­­போது அவள் அணிந்­தி­ருந்த பாட­சாலை சீரு­டையை சடலத்தின்­மீது போட்டு விட்டு காட்­டுக்­குள்­ளி­ருந்து நாம் வெளி­யே­றினோம்.

பாலியல் பலாத்­காரம் செய்யும் திட்டம் எம்­மிடம் முதலில் இருக்­­வில்லை. எனினும் அவளைப் பார்த்த­வுடன் பாலியல் பலாத்­காரம் செய்யத் தோன்­றி­யது.

அனை­­ரது மன­தையும் உலுக்­கி­விட்­டுள்ள புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­லய மாணவி வித்­தியா பாலியல் பலாத்­கா­ரத்­திற்­குட்­­டுத்­தப்­பட்டு கொலை­செய்­யப்­பட்ட சம்­­வத்தில் சந்­தேக நப­ராகக் கைது செய்யப்பட்­டுள்­­வரின் வாக்­கு­மூலம் இது.

புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­­யத்தில் உயர்­தரம் கற்ற பதி­னெட்டு வய­தே­யான வித்­தி­யாவின் வீடு ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட புங்­கு­டு­தீவு பத்தாம் வட்­டா­ரத்தில் அமைந்­துள்­ளது.

வித்­தி­யாவின் மூத்த சகோ­தரி யாழ். பல்­­லைக்­­ழக வவு­னியா வளா­கத்தில் உயர் கல்வி கற்­கிறார். மூத்த சகோ­தரன் கூலித்­தொ­ழி­லாளி. அவ­ளது தந்தை ஒய்­வு­பெற்ற அர­சாங்க அலு­­லகர்.

குறித்த தினம் பாட­சா­லைக்­குச்­சென்ற தனது மகள் வீடு திரும்­பா­­தனால் கல­­ரப்­பட்­டுப்­போன வித்தியாவின் தாய் சரஸ்­வதி, மகளைத் தேடிக் கண்­டு­பி­டிக்கும் முயற்­சியில் இறங்­கினாள்.

எனினும் அவ­ளது தேடுதல் கைகூ­­வில்லை. சம்­பவம் நடை­பெற்று அடுத்த நாளே வித்தி­யாவின் உயிரற்ற சட­லத்தை பொலிஸார் மீட்­டனர்.

மகள் கொலை­யுற்­றி­ருப்­பதை அறிந்த சரஸ்­­தி நிலை குலைந்து போனாள். தங்களுக்கு யார் எதிரியென்று சிந்தித்தாள்.

அப்போது பழைய சம்­பவம் ஒன்று நினை­வுக்கு வந்­தது. திருட்டுச் சம்­பவம் ஒன்­றுடன் தொடர்­பு­டைய ஒரு­­ருக்­கெ­தி­ராகத் தான் சாட்­சி­­­ளித்­­மையே அது.

உடனே தாயான சரஸ்வதி அந்த சந்­தே­கத்தை பொலி­ஸா­ருக்குத் தெரி­வித்தார். சந்­தேகம் பொய்க்கவில்லை. பொலிஸார் சந்­தேக நபரைப் பிடித்து முறை­யாக விசா­ரித்­­போது அவர் உண்­மை­களைக் கக்­கி­விட்டார்.

குறித்த சந்­தே­­நபர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூலத்தில்.

திருட்டு சம்­பவம் ஒன்று தொடர்பில் வித்­தி­யாவின் தாயார் எனக்­கெ­தி­ராக சாட்­சி­­­ளித்தார்.

அந்த வழக்­கினால் நான் நெருக்­­டிக்­குள்­ளாவேன். அதனால் நான் சிறை செல்ல வேண்­டியும் வரலாம். அதற்­காக சரஸ்­­தியை பழி­வாங்­கு­­தற்­கா­கத்தான் இவ்­வாறு செய்தேன். அதனாலேயே வித்­தி­யாவை கொலை செய்­­தற்கு ஒப்­பந்தம் செய்தேன்எனத் தெரி­வித்­துள்ளார்.

வித்­தி­யாவின் அயல் வீட்­டி­லுள்ள நபர் ஒரு­வரே திருட்டுச் சம்­பவம் ஒன்­றுடன் தொடர்­பு­பட்­டி­ருந்தான். அது தொடர்பில் வித்­தி­யாவின் தாய் சரஸ்­வதி சாட்­சி­­­ளித்­துள்ளார்.

அதனால் குறித்த நபர் சிறிது காலம் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்டு பின்னர் நீதி­மன்­றத்­தால் பிணை வழங்­கப்­பட்டு வெளியில் வந்­துள்ளான்.

பிணையில் வெளியில் வந்த அவன் சரஸ்­­தியை பழி­வாங்­கு­­தற்­கான உபா­யங்­களைத் தேடிக் கொண்­டி­ருந்தான். அந்­தப்­­ழி­வாங்கும் குணம் மிகவும் கொடூ­­மாக இருந்­தது.

தான் வழங்கும் தண்­டனை சரஸ்­­தியை (வித்­தி­யாவின் தாய்) மாத்­தி­­மல்­லாது அந்த குடும்­பத்­தையே பாதிக்க வேண்டும் என எண்­ணினான்.

அந்த வகையில் பதி­னெட்டே வய­தான பாட­சாலை மாணவி வித்­தி­யாவே அதற்­கான சிறந்த வழி­யாகக் கரு­தினான்.

அதனால் வித்­தி­யாவை கொலை செய்­யு­மாறு தனது நண்பர் ஒரு­­ரிடம் ஒப்­பந்தம் செய்­துள்ளான். வித்­தி­யாவை கடத்தி கொலை செய்­­தற்கு ஒப்­பந்தம் வழங்­கி­யவர் மாத்­தி­­மல்­லாமல் அவ­ரது இரு சகோ­­ரர்­களும் குறித்த சம்­­வத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ளனர்.

ஒப்­பந்தம் செய்­வதில் தொடர்­பு­பட்ட சந்­தேக நபர்கள் மூவ­ரையும் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலைய பொறுப்­­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் குவின்ஸ்டன் பெரேரா தலைமையிலான பொலிஸ் குழு கைது செய்­துள்­ளது.

கொலை செய்­யப்­பட்ட சிவ­லோ­­நாதன் வித்தியாவின் மரண விசாரணை நடத்திய யாழ். வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி யூ.மயூரன், பாலியல் பலாத்காரத் திற்குட்படுத்தி தலைப்பகுதி பலமாகத் தாக்­கு­­லுக்­குள்­ளா­னதால் மரணம் சம்­­வித்­துள்­­தாக மரண விசா­ரணை அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

வித்­தி­யாவை பாலியல் பாலாத்­கா­ரத்­திற்­குட்­­டுத்தி கொலை செய்­­தாக சந்­தே­கிக்­கப்­படும் சந்­தேக நபர்கள் ஐவரை புங்­கு­டு­தீவு பொலிஸ் நிலைய பொறுப்­­தி­காரி உப பொலிஸ் பரி­சோ­தகர் பி.எம்.ஹிரான் தலை­மை­யி­லான குழு கைது­செய்­துள்­ளது.

சுவிற்­சர்­லாந்தில் வசிப்பவர்

வித்­தி­யாவின் கொலை­யுடன் தொடர்­பு­டைய மற்­று­மொரு சந்­தே­­நபர் வெள்ளவத்தைப் பிர­தே­சத்தில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

சுவிற்­சர்­லாந்தில் காசா­­ராக தொழில்­பு­ரியும் குறித்த நபர், ஊர்­கா­வற்­றுறை பிர­தே­சத்தைப் பிறப்பிடமாகக் கொண்­டவர். சுவிற்­சர்­லாந்­தி­லி­ருந்து விடு­மு­றையில் இங்கு வந்­­போதே குறித்த குற்றச் செயலில் ஈடு­பட்­டுள்ளார்.

வித்­தியா பாலியல் பலாத்­காரம் செய்­யப்­­டும்­போது அதனை அவர் ஒளிப்­­திவு செய்­துள்­­தா­கவும் பொலி­ஸா­ருக்குத் தகவல் கிடைத்­துள்து..

பாட­சாலை மாணவி வித்­தியா பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் பிர­தான சந்­தே­­நபர் மேலும் குறிப்­பிட்­டுள்­­தா­வது,

குறித்த தினம் வேலைக்குச் செல்­­முன்னர் நாம் மது­பானம் அருந்­தினோம். அதனால் போதை நிலையி­லேயே இருந்தோம். சரஸ்­­தியின் மகள் வித்­தியா பாட­சா­லைக்கு போகும் வழியில் அவள் வரும்­வரை எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்தோம்.

அப்­போது வித்­தியா பாட­சா­லைக்குச் செல்­­தற்­காக சைக்­கிளில் வரு­வதைக் கண்டோம். உடன் பாய்ந்து அவளைப் பிடித்தோம்.

வித்­தியாஐயோ வேண்டாம்என சத்­தம்­போட ஆரம்­பித்தாள். நாம் அவளை காட்­டுக்குள் கொண்டு சென்றோம். எங்­­ளி­­மி­ருந்து தப்­பித்­துக்­கொள்ள அவள் முயற்­சித்தாள்.

எம்மைக் கடித்து தப்ப முற்பட்டாள். அதனால் அவள் தலையில் கட்டியிருந்த ரிபனை எடுத்து கையைக் கட்டினோம் அவ­ளது முயற்சி தோல்­வி­­டைந்­தது.

அப்­போது அவளை வெறு­மனே கொலை செய்து விடாமல் பாலியல் பலாத்­கா­ரத்­திற்­குட்­­டுத்தி கொலை செய்­யத்­தோன்­றி­யது.

துடிக்­காமல் இருப்­­தற்­காக அவ­ளது கால்­­ளையும் கைக­ளையும் இழுத்து மரங்­­ளில் ­கட்­டினோம்

ஐயோ மாமா என்னை கஷ்­டப்­­டுத்­தாமல் போக விடுங்கோநான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி செய்­றீங்கஎன்னை விட்­டி­டுங்கஐயோ என்னை போக விடுங்க மாமாஎன அவள் மன்­றா­டினாள்.

அப்­போது அவள் அணிந்­தி­ருந்த உள்­ளா­டை­களில் ஒன்றை களைந்து அவ­ளது வாய்க்குள் திணித்து மன்­றாட்­டத்தை அடக்­கினோம்.

அவ­ளது மன்­றாட்­டத்தை நாம் கணக்­கெ­டுக்­­வே­யில்லை. காலை 7.45 தொடக்கம் மு..11.30 வரை நாம் ஒருவர் மாறி ஒரு­­ராக வித்­தி­யாவை பாலியல் பலாத்­கா­ரம் செய்­து­கொண்­டி­ருந்தோம்.

வலியால் துடித்த அவள் அடிக்கடி நினைவிழந்து போனாள். அவ­ளது உயிர் அடங்­கி­யி­ருப்­பது விளங்கிய­போது அணிந்­தி­ருந்த பாட­சாலை சீரு­டையை சட­லத்­தின்­மீது போட்டு விட்டு காட்டுக்குள்ளிருந்து நாம் வெளி­யே­றினோம்.

பாட­சா­லைக்குச் சென்ற தனது மகள் வீடு திரும்­பா­ததால் கல­­ரப்­பட்­டுப்­போன சரஸ்­வதி தனது மகளைத் தேடு­­தற்கு ஆரம்­பித்தாள். கிரா­மத்­தி­லுள்ள அனை­வரும் அந்த தேடுதல் நட­­டிக்­கையில் ஈடு­பட்­டனர்.

ஊர் மக்­­ளுடன் இணைந்து நாமும் வித்­தி­யாவைத் தேடினோம்.எனினும் அடுத்த நாள்தான் சடலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

நாமும் மரண வீட்­டுக்குச் சென்று அவர்­­ளுக்கு சகல விதத்­திலும் ஒத்­தாசை வழங்­கினோம். வித்தியாவின் சடலம் வைக்­கப்­பட்­டி­ருந்த சவப்­பெட்­டிக்­­ருகில் சென்று அஞ்­சலி செலுத்­தினோம்.

வித்­தி­யா­வுக்கு நடை­பெற்­றுள்ள கொடுமை தொடர்பில் அவ­ளது குடும்­பத்­தா­ரிடம் அனு­தாபம் தெரி­வித்தோம். எங்கள் மீது எவ­ருக்கும் சந்­தேகம் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்பதனாலேயே இவற்றையெல்லாம் செய்தோம்.

சரஸ்­­தியின் மகளை கொலை செய்த பின்­னரே பணம் வழங்­கு­­தாக ஒப்­பந்தம் வழங்­கிய மூவரும் கூறி­யி­ருந்­தனர். எனினும் பணத்தின் தொகையை குறிப்­பி­­வில்லை.

எவ்­­ளவு கிடைத்­தாலும் பர­வா­யில்லை எனக்­­ரு­தியே வேலையை பொறுப்­பெ­டுத்தேன். எனது நண்­பர்­­ளையும் இந்த வேலைக்­காக இணைத்­துக்­கொண்டேன்.

ஆரம்­பத்தில் வித்­தி­யாவை பாலியல் பலாத்­காரம் செய்யும் திட்டம் எம்­மிடம் இருக்­­வில்லை.அவளை பார்த்த பின்­னர்தான் பாலியல் பலாத்­காரம் செய்யத் தோன்­றி­யது.

இவ்வாறு ஒப்­பந்­தத்தைப் பொறுப்­பேற்ற பிர­தான சந்­தேக நபர் பொலி­ஸா­ரிடம் மேலும் தெரி­வித்துள்ளார்.

கைது­செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் வித்­தி­யாவின் கிரா­மத்தில் கடல் மற்றும் கூலித்­தொழில் செய்து சீவியம் நடத்­து­­வர்­களே. அவர்களில் சிலர் திருமணமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

- See more at: http://www.jvpnews.com/srilanka/111344.html#sthash.FzfFxvmQ.Qg1Z2kTq.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.