Jump to content

அறிவியல் அறிவோம்: எமனை இனி மெல்லக் கொல்லலாம்


Recommended Posts

age_2448493g.jpg

 

age12_2448491g.jpg

டி.என்.ஏ எனும் சுருள வைத்த ஏணி

டி.என்.ஏ எனும் சுருள வைத்த ஏணி

 

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜஸ்டின் வெர்பில் (Justin Werfel), மற்றும் யானீர் பார்-யாம் (Yaneer Bar-Yam) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டொனல்ட் இங்பெர் (Donald E. Ingber) ஆகியோர் Programed death is favored by natural selection in spatial systems எனும் தங்களது கட்டுரையில் கணினி உதவியுடன் சிமுலேஷன் முறைப்படி பரிணாமத்தில் உயிரியின் உயிரியல் ஆயுள் தேர்வு எப்படி நடைபெறுகிறது என ஆராய்ந்துள்ளனர்.

எதிர்காலச் சந்ததியினருக்காக இயற்கை வளங்களை விட்டுவைக்கும் படியான பரிணாமத்தின் மரபணு ஏற்பாட்டின் வடிவமே முதுமை என்று அவர்களின் ஆய்வு தடாலடியாகக் கூறுகிறது. பரிணாம வளர்ச்சி ஏற்படுத்தியதே உயிரியல் ஆயுள் வரம்பு என்றும் முதுமை என்பது உடலின் தப்பிக்க முடியாத தேய்மானம் அல்ல என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கட்டாயம் பெரும் விவாதத்தை உருவாக்கக்கூடியது இந்த ஆய்வு. இது உண்மை என்றால் முதுமையும் ஒரு நோய்தான் என கருதப்படும். அதற்கு மருத்துவம் செய்யலாம். முதுமையைத் தூண்டும் மரபணுக்களின் செயல்பாட்டை நிறுத்தலாம். ஆயுளைப் பல மடங்கு நீட்டலாம்.

பிறக்கும் எல்லாம் இறப்பது இல்லை

டர்ரிடோப்சிஸ் டோஹ்ரினி (Turritopsis dohrnii) எனும் ஒரு வகை ஜெல்லி மீன் முட்டை போடும் பருவத்துக்கு வந்ததும் தன்னைத் தானே மறுபடியும் குழந்தை நிலைக்கு மாற்றிக்கொள்கிறது. டர்ரிடோப்சிஸ் நியூட்ரிகுலா (Turritopsis nutricula) என்பது இன்னொரு வகை ஜெல்லி மீன். அது இன்னும் ஒருபடி முன்னே செல்கிறது. ஒரு தடவை அல்ல, பலதடவை அது தன்னை மீண்டும் இளமையாக்கிக்கொள்கிறது. எதிரிகளால் வேட்டையாடப்பட்டோ நோய்வாய்ப்பட்டோ இறந்தால் தவிர இந்த ஜெல்லி மீன்கள் சாகாது.

நுண்ணுயிரி பாக்டீரியாவும் மறுபடி மறுபடி இரண்டிரண்டு புதிய செல்களாகப் பிரிந்து வளர்வதால் அதற்கும் மரணமே இல்லை எனலாம்.

அமெரிக்காவில் நெவேடாவில் உள்ள மெத்துசெலா மரம் சுமார் 5,000 ஆண்டுகள் பழமையானது.

நீண்ட நாள் வாழ்ந்தவர் எனும் உலகச் சாதனையை இன்றுவரை படைத்திருப்பவர் ஜீன் கல்மான் (Jeanne Calment) எனும் பிரெஞ்ச் பெண்மணி. அவர் 122 வயது வரை உயிரோடு வாழ்ந்தார்.

தாத்தா- பாட்டி காலம்

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஸ்வாசிலாந்து எனும் நாட்டில் மனிதரின் சராசரி ஆயுள் வெறும் 31.99 ஆண்டுகள்தான். ஜப்பானில் இது 82 ஆண்டுகள். 2011-ல் இந்தியரின் சராசரி ஆயுள் 66.8 ஆண்டுகள்.

சுமார் இரண்டு லட்சம் ஆண்டு கால மனிதப் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றில் மனிதரின் சராசரி ஆயுள் 30 ஆண்டுகளைத் தாண்டியது சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்கின்றனர் ரேஷேல் காஸ்பரி மற்றும் சங்-ஹீ லீ என்னும் ஆய்வாளர்கள். இந்தக் காலத்தில்தான் முதன்முறையாகப் பாட்டியையும் தாத்தாவையும் கொண்ட குடும்பங்கள் பரவலாக ஆகியிருக்கும் என்கிறார்கள். அதை ‘தாத்தா-பாட்டிகளின் பரிணாமம்’ என்று வகைப்படுத்துகிறார்கள்.

உயிரியல் ஆயுள்

கழுதையின் உயிரியல் ஆயுள் சுமார் 15 ஆண்டுகள். எறும்புக்கு 3. எருதுக்கு 28. யானைக்கு 70. முயலுக்கு 9. மனிதரின் ஆயுள் சுமார் 120 என மதிப்பிட்டுள்ளனர். மனிதரின் உயிரியல் ஆயுளை அதிகரிக்க முடியுமா? எவ்வளவுதான் மருத்துவம் உள்ளிட்டவை வளர்ந்தாலும் மனித ஆயுளுக்கு ஏதாவது அதிகபட்ச வரையறை உண்டா? என்ற கேள்வி எழுந்தது. உண்டு என்றுதான் சமீபகாலம்வரை விஞ்ஞானிகள் கருதினார்கள்.

கேட்டல், பார்வை உள்ளிட்ட உடலின் பல செயல்கள் வயது கூடக்கூட மெல்ல மெல்ல குன்றுகின்றன. இதைத்தான் முதுமை என்கிறோம். இளமைப் பருவத்தில் அழியும் செல்களுக்கு இணையாகக் கூடுதல் செல்கள் தோன்றுகின்றன. ஆனால், முதுமையில் புதிய செல்கள் தோன்றுவது குறைகின்றன. மேலும், திசுக்கள் வலுவிழந்துபோகின்றன.

மனிதர்கள் மட்டுமல்ல, ஆடு, மாடு முதலாக, மரம், செடி வரையிலான உயிரிகளில் முதுமை தெளிவாகத் தென்படுகிறது. முதுமையும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் இயற்கை மரணமும் உடலில் ஏற்படும் தேய்மானத்தால்தான்.

சாதாரண பென்சிலால் ஏறத்தாழ 56 கி.மீ. தொலைவுக்குக் கோடு போடலாம். அதன் பின் தேய்ந்து ‘மடிந்து' விடும். வாகனங்களின் டயர் குறிப்பிட்ட தொலைவு ஓடியதும் தேய்ந்துவிடும். அதேபோல உயிரிகளிலும் தேய்மானம் ஏற்பட்டுக் காலப்போக்கில் ‘நரை கூடிக் கிழப் பருவம் எய்திப் பெரும் கூற்றுக்கு இரையென’ உயிரிகள் மடியும்.

உடலின் புத்தாக்கம்

சக்கரம் தேயலாம், கருவிகள் பழுதாகலாம். ஆனால், உயிரியின் செல்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக்கொள்பவை. தினமும் ஒரு கோடி செல்கள் நமது உடலில் மடிகின்றன. மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடல்சுவர்ப் படலம் (mucosa) புதிதாக ஏற்படுகிறது. தோலில் உள்ள செல்கள் 30 நாட்களுக்கு ஒரு முறை புதிதாக உருவாகின்றன. எலி, திமிங்கிலம் போன்ற விலங்குகளின் பற்கள் தேயத் தேயப் புதுப் பற்கள் முளைக்கின்றன. எனவே, பென்சில் அல்லது டயருடன் நமது உடலை ஒப்பிட முடியாது.

முதுமை ஏன்?

அப்படியானால் முதுமை ஏன் ஏற்படுகிறது? ஒவ்வொரு செல்லும் சுமார் 50 முறை புதிய செல்களை உருவாக்கிவிட்டுப் பிறகு மடிந்து விடுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். அதன்பின் அந்தச் செல்கள் பிரிவது இல்லை. சிதைந்து மடிந்துவிடுகின்றன. குறிப்பிட்ட செல்தான் 50 முறை புத்தாக்கம் பெற்ற செல் என்பதை எப்படி அறிந்துகொள்வது? செல் மரணம் (cell death) எப்படி ஏற்படுகிறது? செல் மரணம் குறித்த மர்மத்தைச் சமீபத்தில் விஞ்ஞானிகள் அவிழ்த்துள்ளனர்.

கண்களில் உள்ள ரெட்டினா செல்கள் பார்வைத் திறன் பெற PDGF போன்ற புரதங்களை உமிழ வேண்டும். செல் முதுமை அடைய அடைய அது பழுதுபடும். முழுவதும் பழுதுபட்டுச் செயலிழக்கும் முன்பாக, அந்தச் செல் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் செயலே செல் பிரிதல் ஆகும்.

செல் பிரிந்து புதிய செல் உருவாகும்போது பழைய பழுதுகள் களையப்பட்டுச் செல்கள் புத்தாக்கம் பெறும். இந்தப் புத்தாக்கம்தான் உயிரிகளின் உடல் தேய்மானத்துக்கும் உயிரற்ற பொருட்களின் தேய்மானத் துக்குமான வேறுபாடாக இருக்கிறது.

செல் சிதைவு

டி. என்.ஏ. தொடரில் உள்ள டெலோமெர்ஸ் (பெட்டிச் செய்தியைக் காண்க) சங்கிலிகள் நாம் வயதாக வயதாக நீளத்தில் குறைந்துகொண்டே போகின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, ஒவ்வொரு முறையும் செல் பிரிதல் ஏற்படும்போது டெலோமெர்ஸ் தொடரின் நீளம் சற்றே குறைகிறது. ஆகவே, இந்த டெலோமெர்ஸ்கள் மிகவும் சுருங்கிய பின்னர், நம் உடலில் செல்கள் பிரியும்போது, டி.என்.ஏ-வின் முக்கியமான பகுதிகளைப் பாதிக்கத் தொடங்குகின்றன. இதனால், சரியாக டி.என்.ஏ. பிரதி எடுக்கப்படுவதில்லை. இது டி.என்.ஏ-வை கெடச் செய்கிறது. செல்களைப் பலவீனப்படுத்துகிறது. குறிப்பிட்ட கட்டத்தில் செல் பிரிந்து புத்தாக்கம் நடைபெறாமல் போகிறது. இதுவே முதுமை.

ஒருமுறை சாவி கொடுக்கப்பட்ட கடிகாரம் இயங்கி நின்றுபோவது போல டெலோமெர்ஸ் நீளம் சுருங்கச் சுருங்கச் செல் செயல்பாடு குன்றி இறுதியில் மடிந்துபோகிறது. இதுவே செல் மரணம். டெலோமெர்ஸ் நீளம் சுருங்குவதுதான் செல்களின் மெய்யான தேய்மானம்.

டெலோமெர்ஸ் மற்றும் அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் டெலோமெரேஸ் எனும் என்ஸைம் குறித்த ஆய்வுகளுக்காக எலிசபெத் ப்ளாக்பர்ன் (Elizabeth H. Blackburn) கார்ல் க்ரெய்டர் (Carol W. Greider) ஜேக் ஸோஸ்டக் (Jack W. Szostak) ஆகிய மூவருக்கும் 2009- ல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

தேர்வு இயற்கையா, செயற்கையா?

உயிரின் லட்சியங்கள் இரண்டு. ஒன்று நீண்ட நாள் வாழப் போராடுவது. இரண்டாவது அடுத்த தலைமுறையைப் பெற்று வளர்த்து ஆளாக்குவது. எனவே, ஒரு உயிரியின் உயிரியல் ஆயுள் அதன் குழந்தைப்பேறு வயதை விடச் சற்றே அதிகமாக இருக்க வேண்டும். அந்த உயிரியின் உடலால் எவ்வளவு காலம் பழுதின்றி இருக்க முடியுமோ அவ்வளவு காலம் அதன் உயிரியல் ஆயுள் இருக்க வேண்டும் அல்லவா?

இதுவரை பரிணாம ஆய்வாளர்கள் பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு உயிரிகளின் இயற்கை வரையறை அனுமதிக்கும் அதிகபட்ச உயிரியல் ஆயுளைத் தேர்வு செய்யும் என்றுதான் கருதியிருந்தனர். இயற்கை மரணம் பொதுவாக, அதிகபட்ச உயிரியல் ஆயுளில்தான் ஏற்படும் எனக் கருதினர்.

ஆனால், உள்ளபடியே உயிரியல் ஆயுள் என்பது ஒரு உயிரியின் இயல்புத் திறனுக்கு ஏற்ப இல்லாமல், அந்த உயிரி வாழும் குறிப்பிட்ட சூழலில் உள்ள வளங்களைப் பொருத்து, பரிணாமத்தால் செயற்கையாக அமைக்கப்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். பார்-யாம் முதலியோரின் ஆய்வு ஒரு உயிரியின் உடலின் அதிகபட்ச வாய்ப்புக்கும் குறைவாகவே யதார்த்தமான பரிணாமம் தேர்வு செய்யும் உயிரியல் ஆயுள் அமைந்துள்ளது என்று கூறுகிறது.

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை

பின்லாந்து நாட்டில் மொத்த மக்கள்தொகையில் இளைஞர்களின் பங்கு குறைவு. அங்கே 68 வயதில்தான் பணிமூப்பு. ஜெர்மனியில் 65. இந்தியாவில் மத்திய அரசில் 60 ஆக உள்ளது. பணிமூப்பு வயது உயர உயர, புதிதாகப் படித்துவிட்டு வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறையும். அதுபோலத்தான் அளவான இயற்கை வளம் மட்டுமே உள்ளபோது, குறிப்பிட்ட ஒரு உயிரி நீண்ட நாள் வாழ்ந்தால், அதுவே அதன் அடுத்த தலைமுறையின் வாய்ப்பைப் பறிக்கும். இறுதியில் அந்த உயிரினமே அழியும் ஆபத்து ஏற்படும்.

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போன்ற இந்த எதிரும் புதிருமான இக்கட்டான நிலையில் பரிணாம இயற்கைத் தேர்வு ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஏற்ப, உயிரியல் ஆயுளைத் தேர்வு செய்கிறது எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.

சலவை இயந்திரமா, தொடுதிரைக் கைபேசியா?

கணினியை நீண்ட நேரம் இயக் காமல் இருந்தால் அது தானாகவே உறக்க நிலைக்குச் சென்றுவிடும். தானியங்கி சலவை இயந்திரம் தனது பணியைப் பூர்த்தி செய்யத் தேவையான காலம் இயங்கிவிட்டுத் தானே நின்றுவிடும். தொடுதிரைக் கைபேசியின் (touch phone) திரை ஒளிர்வும் தானே அணைந்துவிடுகிறது. அது 30 விநாடியா, ஒரு நிமிடமா என்பதை நாம்தான் அமைக்கிறோம்.

இதுவரை, முதுமை என்பது சலவை இயந்திரம் போலக் குறிப்பிட்ட காலத்தில் தானே ஏற்படும் உள்ளார்ந்த இயல்பான, இயற்கை நிகழ்வு எனக் கருதினார்கள். ஆனால், இந்த ஆய்வு உள்ளபடியே முதுமையைத் தூண்டும் மரபணு முடுக்கிகளை நாமே ‘செட்’ செய்துகொள்ளலாம் எனக் காட்டுகிறது.

அதுபோலத்தான் பரிணாமமும் ஒரு உயிரி அடுத்த தலைமுறையைப் பெற்று ஆளாக்கத் தேவையான கால அவகாசம் தருகிறது. அது ஒருபுறமும், உயிரியின் வாழ்நாள் அதிகரிக்க அதிகரிக்க அது இயற்கைவளம் மீது தாக்கம் செலுத்தி அடுத்த தலைமுறைக்குப் பாதகம் செய்யும் வாய்ப்பை இன்னொரு புறமும் வைத்துக்கொள்கிறது. இந்த இரண்டையும் கணக்கிட்டு, பொருத்தமான அளவில் பரிணாம வளர்ச்சி இயற்கைத் தேர்வில் ஒவ்வொரு உயிரியின் உயிரியல் ஆயுளை அமைத்துள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நலிவுமில்லை, சாவுமில்லை!

அப்படி என்றால் என்ன பொருள்? மரணத்தையும் முதுமையையும் கூட்டலாம், குறைக்கலாம்தானே? கைபேசியில் ‘செட்டிங்ஸ்’ சென்று மாற்றுவது போல மரபணுக்குள்ளே போய் மாற்றம் செய்து ஆயுளைக் கூட்டலாம். முதுமை என்பது உள்ளார்ந்த இயல்பு இல்லை. பரிணாமம் ஏற்படுத்திய வரையறைதான்.

சுமார் 40 வயதில் கண்பார்வை மங்குவதும் பரிணாமம் ஏற்படுத்திய வரையறைதான். மூக்கு கண்ணாடி அணிந்து அல்லது கண் அறுவைச் சிகிச்சை செய்து கண் பார்வையை மீண்டும் பெறுவதுபோல உயிரியல் ஆயுளுக்குப் பரிணாமம் போட்ட எல்லைக் கோட்டை அழித்துப் புதிய இடத்தில் கோடு போடும் வாய்ப்பு உள்ளது என்கிறது இந்த ஆய்வு.

இப்போது இருக்கும் 100 முதல் 120 வயதுதான் வரம்பா? மனித உயிரியல் ஆயுளுக்கு ஏதாவது வரம்பு உண்டா? இருக்கலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். சாகா வரம் பெற முடியாது. ஆனாலும் உயிரியல் ஆயுளைப் பல மடங்கு கூட்டலாம் என்கின்றனர் இவர்கள்.

செல் புத்தாக்கம்

செல் பிரிந்து புத்தாக்கம் பெறுவது என்றால் என்ன?

மனித செல் கருவினுள் டி.என்.ஏ. எனும் மூலக்கூறு சற்றே சுருள வைத்த ஏணி போல இருக்கும். இந்த ஒவ்வொரு ஏணியிலும் குரோமோசோம் என அழைக்கப்படும் 23 ஜோடி (மொத்தம் 46 குரோமோசோம்கள்) இருக்கும்.

ஒவ்வொரு குரோமோசோமின் டி.என்.ஏ. மூலக்கூறுகளும் பிரதி எடுக்கப்பட்டுப் புதிய செல் கரு, செல் சுவர் முதலியவை உருவாக்கப்பட்டுப் புதிதாக இரண்டு செல்கள் பிரியும்.

இந்தச் செல் பிரிதல் செயலில் முக்கியமான பங்கு வகிப்பது டெலோமெர்ஸ் (telomeres) எனப்படும் குரோமோசோம்களின் முனைப் பகுதிகள்தான்.

பெண்களின் தலைப்பின்னலின் அடியில் குஞ்சம் அல்லது ரிப்பன் வைக்கவில்லை என்றால் பின்னலின் வடிவம் பிரிந்துவிடலாம் அல்லவா?

அதுபோல, ஒரு செல் தானே இரண்டாகப் பிரிந்து புதிய செல்களை உருவாக்கும்போது டி.என்.ஏ-வின் வடிவில் குலைவு ஏற்படாமல் தடுப்பவை இந்த டெலோமெர்ஸ்தான். மேலும், செல் பிரிதலில் இந்த டி.என்.ஏ மூலக்கூறுகள் தவறான முறையில் பிரதி எடுக்கப்படக் கூடாது.

பிரதி எடுக்கும் வேலையைச் சரிபார்த்துப் பழுது நீக்குவதில் டெலோமெர்ஸ் முக்கியமான பங்கு வகிக்கின்றன. சங்கிலியில் கண்ணிகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருப்பது போலக் குறிப்பிட்ட டி. என்.ஏ. தொடரில் மறுபடி மறுபடி அமையும் தொடராகத்தான் டெலோமெர்ஸ் இருக்கும்.

சராசரி ஆயுள்

பண்டைய கிரேக்கத்தில் சராசரி மனித ஆயுள் வெறும் 20-35 ஆண்டுகள்தான். கி.பி. 1500 முதல் 1800-கள் வரை ஐரோப்பாவில் சராசரி ஆயுள் 30-லிருந்து 40-ஆக உயர்ந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை, 1820- ல் சராசரி ஆயுள் 21 ஆண்டுகள். நாடு விடுதலை அடைந்த பிறகு, 1950-ல் 32- ஆக உயர்ந்தது.

பொதுச் சுகாதாரம், தடுப்பூசிகள், பொது மருத்துவம், நோய் எதிர்ப்பு நவீன மருந்துகள், வன்முறையில் நிகழும் இறப்பு குறைதல் முதலியன காரணமாக, சராசரி ஆயுள் காலம் கூடியுள்ளது.

எனவே, சராசரி ஆயுள் என்பது உள்ளார்ந்த உயிரியல் சார்ந்து அமைவதில்லை. உணவு, சமூக அமைப்பு, பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்ட சமூகம் சார்ந்த காரணங்களைச் சார்ந்தே அமைகிறது.

எனவேதான், சராசரி ஆயுள், நீண்ட காலம் உயிர்வாழ்ந்த சாதனை முதலியவை தவிர உயிரியல் ஆயுள் காலம் எனும் ஒன்றையும் விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.

உயிரியல் ஆயுள் காலம் என்பது உணவு இல்லாமை, எதிரிகளால் வேட்டையாடப்படுதல் போன்ற சாவுகள் இல்லையென்றால் அந்த உயிரியால் அதிகபட்சமாக எவ்வளவு நாள் வாழ முடியும் என்பதே.

500 ஆண்டு வாழ்க!

மனிதரின் உயிரியல் ஆயுளை ஐந்திலிருந்து 10 மடங்கு கூட்ட முடியும் என்கிறார் விஞ்ஞானி பார் - யாம். அதாவது, சுமார் 500 ஆண்டுகள் வாழ முடியும். மேலும் “நூற்புழுக்களில் (nematodes) மரபணு மாற்றம் செய்தபோது அவற்றின் வாழ்நாள் 5-லிருந்து 10 மடங்கு உயர்ந்துள்ளது” என்றும் அவர் கூறுகிறார்.

ஆயுளை அதிகரிக்க மரபணு மாற்றம் மட்டுமே ஒரே வழி என்பதையும் மறுக்கிறார் பார் - யாம். வைட்டமின்கள், குறிப்பிட்ட சுரப்பிகள் மீது செயல்புரியும் மருந்துகள் முதலியவையும் ஆயுளை அதிகரிக்க வழி செய்யும் என்கிறார் அவர். உதாரணமாக, குஞ்சு பொரித்ததும் இயல்பாக ஆக்டோபஸ் மடிந்துவிடும். ஆனால், அதன் குறிப்பிட்ட சுரப்பியை நீக்கிவிட்டால் தொடர்ந்து அது உயிர்வாழ்கிறது.

வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும் GDF11 எனும் புரதம் செலுத்தப்பட்ட சோதனை எலிகளுக்கு முதுமை வரவில்லை. நீண்ட காலம் இளமையாக இருந்தன. அதேபோல, சோதனைச் சாலையில் மனித செல்களின் டெலோமெர்ஸ் நீளத்தைச் செயற்கையாகக் கூட்டியபோது அந்தச் செல்கள் கூடுதல் காலம் முதுமை அடையாமல் இருந்தன.

ஏற்கெனவே பஞ்சமும் பசியும் உள்ள நிலையில் மனித ஆயுளை அதிகரிப்பது என்பது ஆபத்தானது என்ற கருத்து எழும். அதற்கும் பதில் தருகிறார் விஞ்ஞானி பார்-யாம். இன்றைக்கு உற்பத்தியாகும் உணவை எல்லோருக்கும் விநியோகிக்காததே பசி, பஞ்சத்துக்குக் காரணம். இன்றைய உற்பத்தி தொழில்நுட்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இப்போதுள்ள மனிதர்களைவிட இன்னும் பல மடங்கு மனிதர்களுக்கு உணவு தர முடியும் என்கிறார் இவர்.

இனிமேல் மனிதர்களின் உயிரை எடுத்துச்செல்ல வரும் எமனையும் நாம் மெதுவாகக் கொல்லத் தொடங்கலாம்.

கட்டுரையாளர் விஞ்ஞான் பிரச்சார் நிறுவன விஞ்ஞானி

star111_2321030a.jpg

தொடர்புக்கு: tvv123@gmail.com

http://tamil.thehindu.com/general/education/அறிவியல்-அறிவோம்-17-எமனை-இனி-மெல்லக்-கொல்லலாம்/article7345288.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்! ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும் இருந்த நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது இதேவேளை இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது களுத்துறை – 32% கம்பஹா – 25% கேகாலை – 15% நுவரெலியா – 30% இரத்தினபுரி – 20% அம்பாறை- 30% மன்னார்- 29% முல்லைத்தீவு – 25% வவுனியா – 30% கொழும்பு – 20% கண்டி – 20% காலி – 18% மாத்தறை – 30% மட்டக்களப்பு – 17% குருநாகல் – 30% பொலனறுவை – 38% மொனராகலை – 21% பதுளை – 21% https://athavannews.com/2024/1400397
    • லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தாக்குதல் - ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்டதளபதி பலி 21 SEP, 2024 | 07:00 AM   லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல்; மேற்கொண்ட தாக்குதலில்  ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். பெய்ரூட்டில் இடம்பெற்ற தாக்குதலில் இப்ராஹிம் அகில் உயிரிழந்துள்ளதை  ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் பல தளபதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகமாக வாழும் டஹியே என்ற பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதல் காரணமாக 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் தெரிவித்துள்ளது. லெபானின் புறநகரில் உள்ள இந்த ஹெஸ்புல்லாக்களின் வலுவிடம் என்பது குறிப்பிடதக்கது. தாக்குதலை தொடர்ந்து குழப்பமான நிலை நிலவியது,அந்த பகுதிக்கு விரைந்த அவசரசேவை பிரிவினர் காயமடைந்தவர்களையும் கட்டிடங்களின் கீழ் சிக்குண்டிருந்தவர்களையும் மீட்க முயன்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/194227
    • நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க 9ஆவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது  ஜனாதிபதி தேர்தல் இன்று Published By: VISHNU   21 SEP, 2024 | 10:05 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21)  இடம்பெறவுள்ளது. இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில்,  17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுதந்திரமானதும், நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சகல பிரஜைகளிடமும்  தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நாடளாவிய ரீதியில்  13421  வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தம் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்கு பெட்டிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆவணங்கள் நேற்று காலை கையளிக்கப்பட்டன. 22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தான் அதிகளவில் தேர்தல் தொகுதிகள் , கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3151 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டை மற்றும் தேசிய அடையாளர் அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திர அட்டை உட்பட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்லுமாறு வலியுறுத்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோட்டபய ராஜபக்ஷ 6,924, 255 வாக்குகளை பெற்று  52.25 சதவீத வாக்குகளுடன் நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.  அதேபோல் அத்தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,564, 239  வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க 41, 553 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிடுகையில்; வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை பிரஜைகள் அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையூறாக அமைய கூடாது. தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அத்துடன் சுதந்திரமாகவும்இ நியாயமானதாகவும் தேர்தலை நடத்த  சகல பிரஜைகளும் ஒத்துழைக்க வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு செல்லும் போது வாக்காளர் அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரம், ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்தில் அமைதியை பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.  தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு காரணியாக அமைவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்களித்ததன் பின்னர் அமைதியான முறையில் செயற்படுங்கள் . ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவை உங்களின் குடும்பமே எதிர்க்கொள்ள நேரிடும். ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது. ஆகவே தமது குடும்பத்தை நினைவில் வைத்துக் கொண்டு செயற்படுங்கள் என்று நாட்டு பிரஜைகளிடம் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/194220
    • பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, கடந்த ஆண்டு சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு முக்கியமான கட்டத்துக்கு நகர்கிறது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரயான் -4 திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மும்முரமாக இறங்கியுள்ளது. நிலவுக்கு சென்று அதன் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் கற்களை எடுத்து வருவதற்கான திட்டமே சந்திரயான் -4 ஆகும். இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. 2040-ல் நிலவில் மனிதர்களை தரையிறக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை நோக்கிய அடுத்தபடியாக இது பார்க்கப்படுகிறது. “சந்திரயான் -3 திட்டம் நிலவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்குவது சாத்தியம் என்று உணர்த்தியது. நிலவுக்கு பாதுகாப்பாக சென்று திரும்புவதே அடுத்தக்கட்ட திட்டமாகும். சந்திரயான்3 ஐ விட சிக்கலான தொழில்நுட்பங்கள் கொண்டது இத்திட்டம்” என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் கூறியுள்ளார். மனிதர்கள் இல்லாமல் ரோபோடிக் தொழில்நுட்பம் மூலம் நிலவின் மண் மாதிரிகளை எடுத்து வர வேண்டும் என்பதால் சவால்கள் அதிகமாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.   சந்திரயான்-4 திட்டம் என்ன? சந்திரயான் -4 திட்டத்தில் நிலவுக்கு அனுப்பப்படும் கருவிகள் இரண்டு தொகுப்புகளாக, LMV-3 மற்றும் PSLV ஆகிய இரண்டு ராக்கெட்டுகள் மூலம் தனித்தனியாக விண்ணில் செலுத்தப்படவுள்ளன. விண்கலம் நிலவில் தரையிறங்கி, தேவையான மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து, அவற்றை ஒரு பெட்டியில் அடைத்து, நிலவிலிருந்து புறப்பட்டு பூமிக்கு திரும்ப வேண்டும். அது வெற்றிகரமாக முடிந்தால், விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அரங்கில் இந்தியாவை அடுத்த நிலைக்கு இந்த திட்டம் கொண்டு செல்லும். இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செய்ய, தனித்தனி கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. படக்குறிப்பு, விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் இதுகுறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “முதலில் நமக்கு கிடைத்த தகவல்கள், நிலவை சுற்றி வந்த விண்கலத்திடம் இருந்து வந்தன. அதன் பின், நிலவில் தரையிறங்கிய போது, ஏற்கெனவே கிடைத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து, நமது புரிதலை மேம்படுத்திக் கொண்டோம். இப்போது அடுத்தக்கட்ட விரிவான ஆய்வுக்காக நிலவின் மண், பாறை மாதிரிகளை சேகரிக்கவுள்ளோம்.” என்றார். நிலவின் மாதிரிகளை சேகரிப்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியம் என்கிறார் அவர். “சர்வதேச அளவில், நிலவு ஒப்பந்தத்தின் படி (Moon Treaty 1967) நிலவை தனி ஒரு நாடு சொந்தம் கொண்டாட முடியாது. நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மாதிரிகள், அந்த மாதிரிகளை ஆய்வு செய்யும் திறன் கொண்ட நாடுகளிடையே பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். காலாவதியாகவுள்ள இந்த ஒப்பந்தத்துக்கு பிறகு, உலக நாடுகளின் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியாது. இந்நிலையில், இந்தியா தனது நிலவு ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்” என்றார்.   நிலவு மாதிரிகளை இதுவரை எடுத்த வந்த நாடுகள் எவை? நிலவை ஆராய்வது பல நாடுகளுக்கு முக்கியமான செயல். இது அறிவியல் ஆர்வத்தால், புதிய கண்டுபிடிப்புகளால், மற்றும் எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் வாழலாம் என்ற எண்ணத்தால் செய்யப்படுகிறது. சில நாடுகள் நிலவின் மேற்பரப்பிலிருந்து மண் மாதிரிகளை சேகரித்து வந்துள்ளன. இது நிலவு எப்படி உருவானது, அதன் உள்ளே என்ன இருக்கிறது மற்றும் அதன் வரலாறு பற்றி நமக்கு முக்கியமான தகவல்களைத் தருகிறது. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இதில் முன்னோடிகள். அமெரிக்கா 1969 முதல் 1972 வரை நிலவுக்கு மனிதர்களை அனுப்பி நிறைய மண் மாதிரிகளை கொண்டு வந்தது. 1970களில் சோவியத் யூனியன் தனது லூனா திட்டங்கள் மூலம் ரோபோக்களை கொண்டு, நிலவின் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்தது. சமீபத்தில் 2020ல், Chang’e-5 என்ற விண்கலத்தைக் கொண்டு சீனா நிலவிலிருந்து மண் மாதிரிகளை எடுத்து வந்தது. இந்தியா மட்டுமல்லாமல், ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளும் விரைவில் நிலவிலிருந்து மண் மாதிரிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் நிலவைப் பற்றி மேலும் புரிதல்களைப் பெற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் முதன் முதலாக தடம் பதித்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும்.   நிலவின் மண், நிலவைப் பற்றி என்ன சொல்கிறது? ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட நிலவின் மண் மாதிரிகள் மூலம் நிலவின் வயது, அதன் உள்ளே என்னென்ன இருக்கிறது என்பதைப் பற்றிய தகவல்கள் மனிதர்களுக்கு தெரியவந்தன. நிலா ஒரு பெரிய மோதலால் உருவானது, அதில் எரிமலைகள் இருந்தன, அதன் துருவப் பகுதிகளில் உறைந்த நிலையில் நீர் இருக்கிறது என்பது தெரிய வந்தது. இந்தத் தகவல்கள் எதிர்கால விண்வெளி ஆய்வுக்கு மிகவும் முக்கியம். நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி நமக்குச் சொல்கிறது. அங்கே பயனுள்ள பொருட்கள், கனிமங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டுபிடிக்கவும் உதவலாம். அமெரிக்காவின் நாசா பூமிக்கு கொண்டு வந்த மண், பாறை மாதிரிகள் நிலவின் மேற்பரப்புக்கு எத்தனை வயதாகிறது என்பதை கணிப்பதில் முக்கிய பங்காற்றின. அமெரிக்காவின் அப்பொலோ திட்டங்களின் மூலம் கிடைத்த மாதிரிகளை ஆராய்ந்த போது, நிலவில் இருக்கும் Basalt, (எரிமலை வெடிப்பின் காரணமாக உருவான கரும்பாறைகள்) 3.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று தெரிய வந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39l1kmvp3vo
    • இந்த இரண்டு கருத்தும் ஒன்றுக்கொன்று முரணானவை. தமிழ்க் கல்வியை வலியுறுத்தாமல் தமிழராக எவ்வாறு ஒன்றிணைய முடியும்???
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.