Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாநாகன் இனமணி 120

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாநாகன் இனமணி 120

https://app.box.com/s/rwnjfkj50s4aiujinqne292emenhg5xy

 

உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி

பொருள் வழங்கு செவித் துளை தூர்ந்து

அறிவு அழிந்து

வறம் தலை உலகத்து அறம்பாடு சிறக்க (கிறங்க)

சுடர் வழக்கு அற்றுத்

தடுமாறு காலை

ஓர் இள வள ஞாயிறு

தோன்றிய தென்ன நீயோ தோன்றினை!

நின் அடி பணிந்தேன்.....

.......அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை

ஓர் திறப்படற்கு ஏதுவா சேயிழை

செய்தேன்!

(மணிமேகலை - மந்திரம் கொடுத்த காதை-7-9)

பொருள்:-
தமிழர்கள் அறிவு இழந்தால் உலக உயிர்கள் எல்லாம் உணர்வு இழக்கும். தமிழர்களின் அறிவு புதுப்பிக்கப்பட்டால் உலகம் பயன் பெறும். தமிழைத் தூய்மைப்படுத்துவதன் மூலமாகவும், அதன் தூய்மையைக் காப்பாற்றுவதன் மூலமாகவும் கழி பேராண்மைக் கடன் இறுக்கும் பெரும் போராளிகளே அவ்வப்போது உயிர் ஈகம் செய்து தமிழர் மரபறிவை மீட்டுள்ளனர். மணிமேகலை துறவு, முத்துக்குமாரின் உயிர் ஈகம் போன்றவை அத்தகைய திருப்பு முனையை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகளே. இயற்கை தன்னைத் தமிழாகச் செதுக்கிக் கொண்டு அவ்வப்போது புதிதாக்கிக் கொள்கிறது.

...மையறு தொல்சீர் உலகம் அறியாமை

நெய் இலாப் பால் சோற்றின் நேர் (நாலடியார் 34-3-34)

பால் சோற்றில் நெய்த்தன்மை இருப்பது இயல்பானது போலவே தமிழர் உணர்வில் தமிழ்ப்புத்தாண்டு பற்றிய புரிதல் இருப்பதும் இயல்பானதே! இல்லை என்று தமிழர் கூறினால் அது அறியாமை. இல்லை என்று தமிழர் அல்லாதார் கூறினால் அது மறைப்பு முயற்சி. புரியும்படி விளக்கிச் சொல்ல வேண்டியது தமிழறிஞர்களின் கடமை.

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழின் உயர் ஆய்வுக்கான மரபு அறிவுச் செல்வத்தை தமிழர்கள் முன் 120 மாநாகன் இனமாணிகள் வழியாகத் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு அர்ப்பணித்திருக்கிறோம். அது பற்றிய கருத்தாக்கங்களை உலக தமிழர்களிடமிருந்து, அறிஞர்களிடமிருந்து, வல்லுநர்களிடமிருந்து, பாமரர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இதுவரை இது பற்றி எவரும் கருத்துக்களை முன் வைக்க அஞ்சுகிறார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே தற்காலிகமாக இதனை நாங்கள் வெளியிடுவதை மௌனிக்கிறோம். 120 இதழ்களையும் ஒரு நூலாக கோர்க்க ஆசைப்படுகிறோம். மற்றவை உங்கள் பின்னூட்டங்கள் கண்ட பின். அன்புடன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.