Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் 2014ம் ஆண்டு மகிந்த ஆட்சிக் காலத்தில் பல மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன – அமெரிக்கா!

Featured Replies

herry

 

 

இலங்கையில் கடந்தவருடம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் பல மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2014 மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பாரிய மனித உரிமை மீறல்கள்குறித்து தகவல்கள் வெளியாகின. சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என அரசாங்கத்தினால் கருதப்பட்டவர்கள்,தாக்கப்பட்டனர், துன்புறுத்தப்பட்டனர். பலவந்தமாக காணமற்போகச்செய்தல் காணப்பட்டது. இதேபோன்று கண்மூடித்தனமாக கைதுசெய்து தடுத்துவைத்தல்,இவ்வாறு தடுத்து வைக்கப்பட்வர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுதல், பாலியல் துன்புறுத்தல் போன்றவையும் காணப்பட்டன.

படையினரும், பொலிஸாருமே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்,மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தண்டனையின்பிடியிலிருந்து விடுவிப்பு வழங்கப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் காணப்பட்டதை விட படுகொலைகளும்,பலவந்தமாக காணமற்போகச்செய்யப்படுதலும் தற்போது குறைவடைந்துள்ளது.

எனினும் ஊடகவியலாளர்கள்,ஊடக நிறுவனங்கள்,சிவில் சமூக அமைப்புகள் அதன் உறுப்பினர்கள்,அரசாங்கத்தை விமர்சிப்பவர்களிற்கு எதிரான துன்புறுத்தல்களும், அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அரசாங்க ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக ஊடகநிறுவனங்களும் , ஊடகவியலாளர்களும் சுயசெய்தி தணிக்கையை பின்பற்றினர்.சிவில் அமைப்புகளின் செயற்பாடுகள் குறைவடைந்தன.

தமிழர்வாழும் பகுதிகளில் அரசபடையினரும், அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஆயுத குழுக்களும் மேற்கொண்ட படுகொலைகளே இன்னொரு பாரிய மனித உரிமை பிரச்சினையாக காணப்பட்டது. பொதுமக்களின் தனிப்பட்ட உரிமைகளிலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தலையிட்டது.கருத்துச்சுதந்தரம், அமைதியான முறையில் ஓன்றுகூடுதல்,போன்றவையும் தடுக்கப்பட்டன. அரசாங்கத்துடன் தொடர்புபட்ட தனிநபர்களும், அதிகாரிகளும் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படையினரில் சிறியஅளவிலானவர்களை கூட தண்டிக்கவில்லை. இதேவேளை உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் யுத்தகுற்றங்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களில் ஈடுபட்ட்டதற்காக இதுவரை எவரும் தண்டிக்கப்படவி;ல்லை.

அரச ஆதரவு ஆயுதகுழுக்களுடன் தொடர்புள்ள தனிநபர்கள் படுகொலைகள்,ஆள்கடத்தல்,தாக்குதல்கள், பொதுமக்களை மிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.ஆயுத குழுக்கள் மற்றும் படையினருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பது குறித்து பல அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது,மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களில் பொது பலசேனா அமைப்பு ஈடுபட்டுள்ளது. பொது பலசேனாவின் வன்முறைகளால் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த அறிக்கை வெளியிடப்பட்டதையடுத்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள், ஜனநாயகம், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி- சிறிலங்காவிலும், நைஜீரியாவிலும் மக்கள் தமது தலைவர்களை மாற்றும் உரிமையைப் பயன்படுத்திய தேர்தல்கள் நடைபெற்றதாகவும், இந்த பிந்திய மாற்றங்கள் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்

 

 

- See more at: http://www.canadamirror.com/canada/45231.html#sthash.ooVRMOPq.dpuf

இதைச் சிங்களச் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? புலிகளின் மீது குற்றச்சாட்டு வரும்போதுமட்டும் மாற்றுக்கருத்து கொண்ட தமிழர் உட்பட சிங்களச் சமூகமே வரவேற்று பரிசீலிக்க வேண்டும் என்று கூக்குரல் கொடுக்கின்றன

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.