Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதிக்கு பயப்பட மாட்டோம்அச்சுதானந்தன்

Featured Replies

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி மிரட்டல் விடுப்பது போல பேசியிருப்பதைக் கண்டு நானோ, கேரள அரசோ பயப்பட மாட்டோம் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையை கடற்படையை விட்டு கேரளா ஆய்வு செய்ய முயன்றதையடுத்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு அவசரக் கடிதம் அனுப்பினார்.

அதில், கேரள அரசின் செயல் சட்டவிரோதமானது, அப்பட்டமான அத்துமீறல். கேரள அரசின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் டெல்லி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டோம் என எச்சரித்திருந்தார்.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அச்சுதானந்தன் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையை கடற்படை வீரர்கள் ஆய்வு செய்யவிருந்தது குறித்து ஏற்கனவே தமிழகத் தரப்பிடம் தெரிவித்து விட்டோம். தேனி ஆட்சியாளருக்கு இதுகுறித்துத் தெரியும்.

அணை உள்ள இடம் கேரளாவுக்குச் சொந்தமானது. எனவே அணையைப் பார்வையிட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை.

கேரளாவின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துப் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியின் மிரட்டலுக்கு பிரதமர் போன்ற சிலர் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன், கேரள அரசும் பயப்படாது. கருணாநிதியின் பேச்சு ஆத்திரமூட்டுவதாக அமைந்துள்ளது என்றார் அச்சுதானந்தன்.

http://thatstamil.oneindia.in/news/2006/11/24/kerala.html

பஸ், ரயில்கள் முடக்கம்கேரளாவுக்கு 'பாடம்'ம்

நவம்பர் 24, 2006

தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்துக்கு எதிராக கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் வாகனங்களைத் தடை செய்து போராட்டம் நடத்தி வருவதால் கேரள மாநிலத்திற்கான போக்குவரத்து அடியோடு முடங்கிப் போயுள்ளது.

இதனால் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு பால், காய்கறிகள், கால்நடைகள், உணவு தானியங்கள் செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பொருட்களுக்கு கேரளாவில் விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கேரளத்தின் திமிர்த்தனம், முதுகில் குத்தும் செயலைக் கண்டித்து தமிழக விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைப் பகுதியில் விவசாயிகள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதால் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கும், அங்கிருந்து தமிழகத்திற்குமான வாகனப் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஆரம்பித்த இந்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது. தேனி மாவட்டம் கம்பம், குமுளி, லோயர் கேம்ப், போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் சாலை மறியலை மேற்கொண்டுள்ளனர்.

இதே போல கோவை மாவட்டம் வாலையாறு, பொள்ளாச்சி அருகே கோவிந்தாபுரம், வீரப்பன் சத்திரம் உள்ளிட்ட கேரள எல்லைப் பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வாகனப் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர்.

கோவை மாவட்டம் காக்காசாவடி அருகே உள்ள வேலாந்தவளம் பிரிவு என்ற இடத்தில் திமுக நகரச் செயலாளர் பழனிச்சாமி தலைமையில் சாலை மறியல் நடந்து வருகிறது.இவர்கள் நேற்று முதல் இங்கேயே கூடாரம் போட்டுத் தங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர். அவர்களோடு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.

கேரள பதிவு எண் கொண்ட வாகனங்களை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து அங்கிருந்து திருப்பி அனுப்பி வருகின்றனர். தமிழக எல்லையிலிருந்து 10 கி.மீ முன்பாகவே கேரளப் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பேருந்துகளில் வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சில வாகனங்கள் குறுக்கு வழியாக கோவைக்குள் நுழைவதை அறிந்த பெரியார் திராவிட கழக தொண்டர்கள் அந்தப் பாதைகளையும் அடைத்து மறியல் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கேரளாவுக்கு முன்பாக உள்ள எல்லை நகரான வாலையாறு வழியாக கேரளாவிலிருந்து ஒரு வாகனமும் வர முடியவில்லை. முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையிலிருந்து பாலக்காடு சென்ற பாசஞ்சர் ரயிலை பொள்ளாச்சி அருகே விவசாயிகள் மறித்து நிறுத்திப் போராட்டம் நடத்தினர். இதனால் ரயில் புறப்பட்டுச் செல்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. அந்த ரயில் தொடர்ந்து அங்கேயே நிற்கிறது.

இதேபோல திருப்பூரில் இன்று காலை திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டத்திலும் எல்லைப் பகுதியில் விவசாயிகள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருவதால் கேரளாவுக்கான வாகனப் போக்குவரத்து முடங்கிப் போயுள்ளது.

சில இடங்களில் கேரள அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

குமரி மாவட்டத்தின் சில பகுதிகள் வழியாக மட்டுமே கேரளாவுக்கான போக்குவரத்து பாதிக்கப்படாமல் உள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரள அரசு நியாயமாக நடந்து கொள்ளும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

கிளர்ச்சி வேண்டாம்: கருணாநிதி

இந் நிலையில் கேரளாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட வேண்டாம் என விவசாயிகளுக்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெ¶யாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவுக்குச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களையும், போக்குவரத்தையும் தடுப்பது இரு மாநில உறவுகளுக்கு ஏற்புடையதல்ல.

இப் பிரச்சினையில் நியாயப்படியும், சட்டப்படியும் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்பதில் நம்பிக்கை வைத்து யாரும் கிளர்ச்சியில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2006/11/24/bus.html

மத்திய போலீஸ் பாதுகாப்பு கோரும் தமிழகம்

நவம்பர் 24, 2006

சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் உள்ள கேரள போலீஸாரை நீக்கி விட்டு அங்கு மத்திய போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய அரசின் அனுமதியின்றி கடற்படை அலுவலர்களை கேரள அரசு அனுப்பியது.

முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையால் கேரள அரசின் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. எனினும் அணையின் பலத்தை சோதிப்பதற்காக காலரி பகுதியைத் திறந்து விட மறுத்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் கண்காணிப்பாளரை இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.

இதனால் அணைப் பகுதியில் உள்ள தமிழக அரசு அலுவலர்களின் உயிர்களுக்கும், உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது.

இந் நிலை தொடராமல் இருக்க அணைப் பகுதியில் தற்போது பாதுகாப்புக்கு உள்ள கேரள போலீஸாரை நீக்கி விட்டு, மத்திய ரிசர்வ் போலீஸை, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் துரைமுருகன்.

http://thatstamil.oneindia.in/news/2006/11/24/durai.html

கருணாநிதி எச்சரிக்கை: பிரதமர் தலையீடுதிரும்பிப் போன கடற்படை

நவம்பர் 24, 2006

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து கொண்டிருந்த கடற்படையினரை உடனடியாக திரும்பிச் செல்லுமாறு பிரதமரும் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சரும் உத்தரவிட்டதால் அவர்கள் அணையை ஆய்வு செய்யம் பணியை பாதியிலேயே கைவிட்டு விட்டு கொச்சி திரும்பினர்.

கேரள அரசின் வேண்டுகோளுக்கேற்ப தென் பிராந்திய கமாண்டர் எம்.கே.ரெட்டி தலைமையில் 17 நீச்சல் வீரர்கள் அடங்கிய கடற்படைக் குழு நேற்று பெரியாறு அணைக்கு வந்தது.

அவர்கள் அணைக்கட்டுக்குள் செல்லாமல் படகில் இருந்தபடி அணையை கேரள பகுதியில் ஆய்வு செய்தனர். பின்னர் தமிழக பகுதிக்கு வந்தனர். ஆனால், அவர்களை தமிழக அரசின் செயற் பொறியாளரான பாஸ்கரன் உள்ளே விட அனுமதிக்க மறுத்துவிட்டார்.

இதனால் அவருக்கும், கேரள அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கேரள அதிகாரிகளின் அத்துமீறலை தமிழக அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்தனர்.

அப்போது பாஸ்கரன், கண்காணிப்பாளர் சுந்தரராஜன் ஆகியோரது கேமராக்களை கேரள அதிகாரிகளும் கடற்படை வீரர்களும் பறித்து கலாட்டா செய்தனர்.

அணைப் பகுதியில் நீர்க்கசிவு ஏற்படும் அளவைக் குறிக்கும் காலரி பகுதியை பார்வையிட கடற்படையினர் முயன்றனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியாக மறுத்து விட்டனர்.

இந் நிலையில் கடற்படையின் ஆய்வு தொடர்ந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்ற முதல்வர் கருணாநிதியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பெரியாறு அணைக்குச் சென்ற கடற்படையினரைத் திரும்பப் பெறுமாறு கேரள அரசுக்கு உத்தரவிடுமாறு மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சைபுதீன் சோஸுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து கேரள நீர்ப்பாசன அமைச்சர் பிரேமச்சந்திரனை, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முல்லைப் பெரியாறு ஆய்வுப் பணிக்கு அனுப்பப்பட்ட கடற்படை வீரர்களையும், வண்டிப் பெரியாறில் நிலை கொண்டுள்ள நான்கு மூத்த ராணுவ அதிகாரிகளும் உடனடியாக அங்கிருந்து கிளம்ப வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து முதல்வர் அச்சுதானந்தனிடம் ஆலோசனை மேற்கொண்ட பிரேமச்சந்திரன், பின்னர் கடற்படை வீரர்களை உடனடியாகத் திரும்புமாறு கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து கடற்படை வீரர்களும், ராணுவ அதிகாரிகளும் திரும்பிச் சென்றனர்.

முன்னதாக அணைக்குள் செல்லாமல் படகில் இருந்தபடி அணையை முழுமையாக சுற்றிப் பார்த்த கடற்படை வீரர்கள் சிறிய அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.