Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாராயணன், மேனன் சென்னையில் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை

Featured Replies

நாராயணன், மேனன் சென்னையில் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை

[25 - November - 2006]

இலங்கையின் போர்ச்சூழல் தொடர்பாக தனது வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் மூலம் கொழும்புக்கு கடும் கவலையைத் தெரிவித்திருக்கும் இந்தியா, மேனன் எடுத்துவரும் செய்தியை தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் கலந்தாராய்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை நேற்று வெள்ளிக்கிழமை சென்னைக்கு அனுப்பியுள்ளது.

கொழும்பிலிருந்து நேற்றுக்காலை சென்னைக்குச் சென்ற சிவ்சங்கர் மேனனும், எம்.கே. நாராயணனும் இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக கருணாநிதியுடன் கலந்தாலோசனை நடத்தினர்.

சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இலங்கைத் தலைவர்களுடன் தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்பாக கருணாநிதிக்குத் தெரிவித்ததாக சிவ்சங்கர் மேனன் `இந்து' பத்திரிகை நிருபருக்கு நேற்று கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், கருணாநிதிக்கும் இடையில் இலங்கை விவகாரம் தொடர்பாக இடம்பெற்ற கலந்தாலோசனையின் ஒரு பகுதியாகவே தமிழக முதல்வருடனான தனது சந்திப்பு இடம்பெற்றதாக மேனன் குறிப்பிட்டார்.

`இது அவர்கள் இருவருக்குமிடையிலான கலந்துரையாடலின் ஒரு அங்கமாகும். இதனை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்' என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான இந்தியாவின் கவலைகள் தொடர்பாக கொழும்பின் நிலைப்பாடு எவ்வாறு இருந்தது என்று சிவ்சங்கர் மேனனிடம் கேட்கப்பட்டபோது, `கொழும்புதான் இது தொடர்பாக செயற்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் சகல இனக் குழுக்களினதும் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டையே இந்தியா தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகிறது என்று அவர் பதிலளித்திருக்கிறார். அதுவே எமது இலக்கு, அதனை எவ்வாறு சென்றடைவது என்பது எமக்கிடையே எதனை நாம் கலந்தாராயப் போகின்றோம் என்பதைப் பொறுத்தது என்று தெரிவித்திருக்கிறார் மேனன்.

இது இவ்வாறிருக்க, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அங்குரார்ப்பணம் செய்யவுள்ள ஆசிய மேயர்கள் மாநாட்டை தமிழக மேயர்கள் பகிஷ்கரிக்கவுள்ளதாக வெளியான செய்திகளையடுத்தே இந்தியப் பிரதமர் நாராயணனை தமிழகத்திற்கு கருணாநிதியுடன் ஆராய்வதற்காக அனுப்பிவைத்திருக்கலாமென இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன.

சர்வதேச மட்டத்திலான மாநாட்டை வெளிநாட்டுத் தலைவர் ஆரம்பித்துவைக்கும்போது தமிழக மாநில மேயர்கள் பங்கேற்காமலிருப்பது மத்திய அரசாங்கத்திற்கு அகௌரவமானதென கருதியே தமிழக முதல்வரிடம் பேச்சு நடத்த நாராயணனை பிரதமர் மன்மோகன் அனுப்பிவைத்திருக்க முடிவு செய்திருக்கலாமென்ற ஊகத்தை அந்த வட்டாரங்கள் வெளியிட்டன.

http://www.thinakkural.com/news/2006/11/25...s_page15993.htm

ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கும் மாநாட்டில் தமிழக மேயர்கள் பங்கேற்கமாட்டார்கள்

[25 - November - 2006] [Font Size - A - A - A]

இந்தியாவின் புதிய மாநிலமான உத்தராஞ்சலின் தெஹ்ராடூன் நகரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைக்கவிருக்கும் ஆசிய மேயர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டு மேயர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவே ஜனாதிபதி ராஜபக்ஷவினால் அங்குரார்ப்பணம் செய்யப்படவிருக்கும் மாநாட்டை பகிஷ்கரிக்கப்போவதாக தமிழக மேயர்கள் ஆறு பேரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஆயினும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்தினாலேயே அவர்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றுவதில்லையென முடிவெடுத்ததாக தென்படுகிறது.

அகில இந்திய மேயர்கள் சபை இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் தாங்கள் கலந்து கொள்ளாததற்கு தமிழக மேயர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான காரணங்களைக் கூறுகின்றனர்.

வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருப்பதால் தாங்கள் பங்கேற்க முடியாதென சென்னை மாநகர மேயர் எம். சுப்பிரமணியனும் திருநெல்வேலி மேயர் ஏ.எல். சுப்பிரமணியமும் கூறியுள்ளனர்.

தனது குடும்பத்தில் மரணம் சம்பவித்திருப்பதால் தன்னால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாதிருப்பதாக அகில இந்திய மேயர்கள் சபைக்கு மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதன் கடிதம் அனுப்பியுள்ளார். தான் வருகை தர முடியாதிருப்பதற்கு வேறு அலுவல் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டிருப்பதாக சேலம் மேயர் ரேகா பிரியதர்சினி தெரிவித்திருக்கிறார். இந்த நான்கு மேயர்களும் கருணாநிதியின் தி.மு.க. வைச் சேர்ந்தவர்களாகும்.

இரு காங்கிரஸ் கட்சி மேயர்களான திருச்சிராப்பள்ளியின் சாருபாலா தொண்டைமானும் கோயம்புத்தூரின் சி. வெங்கடாசலமும் இத்தகைய காரணங்களையே சமுகமளிக்காதிருப்பதற்காகக் கூறியுள்ளனர்.

மேயர் மாநாடு நடைபெறும் தினத்தில் தான் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்க வேண்டியிருப்பதாக சாருபாலா தொண்டமான் கூறியுள்ளார். நவம்பர் 30 இல் மாநகர சபை கூட்டத்திற்கு தலைமை தாங்கவிருப்பதாக தெஹ்ராடூனுக்கு போக முடியாதென்கிறார் வெங்காடச்சலம்.

இந்த மேயர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக மேயர்கள் சுயாதீனமாக முடிவெடுக்கலாம் என்று வியாழக்கிழமை தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருந்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினால் அங்குரார்ப்பணம் செய்யப்படும் மேயர்கள் மாநாட்டை தமிழக மேயர்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க. உட்பட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.