Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்கின் பெறுமதியை உணராவிடின் சமூகத்தின் இருப்பு கேள்விக்குறி

Featured Replies

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமக்குரிய பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வார்களா? இழந்தவற்றை மீட்டுக்கொள்வார்களா அல்லது இருந்தவற்றையும் இழந்துவிடுவார்களா என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியிலே உருவாகியுள்ளது.  

பெரும்பான்மையினத்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற வரிந்துகட்டிக்கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், தமிழ் மக்கள் தமது இருப்பை உறுதிப்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேண்டிய நிலையில் பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர்.

ஆனால் வழமைபோன்று தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை தன்னினத்திற்கு சகுனப் பிழையாக வேண்டும். தனக்குக் கிட்டாத மக்கள் பிரதிநிதித்துவம் என்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவி இன்னுமொரு தமிழனுக்குக் கிட்டக்கூடாது என்ற சிந்தனையுடனும் தேர்தல் களமாடப் பல தமிழர்கள் முன்வந்துள்ளமையை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். வாக்குச் சீட்டுக்களைச் செல்லுபடியற்றதாக்க வேண்டுமென்ற குரலும் காலத்திற்குக் காலம் தமிழர் மத்தியிலே பரப்புரைக்கப்பட்டு வந்துள்ளன. அதன் பலாபலன்களை அனுபவரீதியாக அனுபவித்தவர்கள், கண்டவர்கள் தமிழர்கள்.

தமிழர்களது அரசியல் பிரதிநிதித்துவங்களுக்கான தடைகள் பலவற்றை இந்நாடு கண்டுள்ளது. முதலாவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமைகளை இல்லாதொழித்த சட்டம் அதற்கோர் எடுத்துக்காட்டு. அது சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட இனவெறிப் பயங்கரவாதச் செயற்பாடு என்பது வரலாற்றுப் பதிவாகும்.

குறித்த பொதுத்தேர்தலில் தமிழர்கள் பிளவுபட்டுச் செயற்பட்டதாலும் மாற்றினத்தவருக்கு வாக்களித்ததாலும் மட்டக்களப்பு, அப்புத்தளை, பலாங்கொடை மற்றும் கொழும்பு மத்தி ஆகிய தொகுதிகளில் பெறவேண்டிய தமிழர் பிரதிநிதித்துவங்கள் இழக்கப்பட்டமையும் வரலாற்றில் ஒருபக்கமாயுள்ளது.

கடந்துவந்த பாதையில் அதாவது பொதுத்தேர்தல்களில் தமக்கிழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் தம்மால் விடப்பட்ட தவறுகள், தப்பிதமான வாக்களிப்புகள் மூலம் இடிக்கப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவங்கள், இழப்பினால் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றி சற்றும் கவனத்தில் கொள்ளாது இன்றும் முன்னைய பாணியில் தமிழர் வாக்குகளைப் பிளவுபடுத்தி தமிழர் பிரதிநிதித்துவங்களுக்கு ஆப்புவைக்கும் அற்பத்தனமான செயற்பாடுகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலாவது பொதுத்தேர்தலில் ஏழு தேர்தல் தொகுதிகளிலிருந்த ஏழு தமிழர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அது பதினொன்றாக அதிகரிக்கப்பட்டு பத்தாகவும் ஒன்தாகவும் குறைக்கப்பட்டு அடுத்த பொதுத்தேர்தலில் ஏழாகப் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எக்கட்சியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டாலும் அனைவருமே தமிழர்களாக இருப்பர் என்று உறுதி கூறமுடியாத நிலையில் தமிழர்கள் வாக்களிப்பை பகிஷ்கரித்த காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தமிழரல்லாதவர் தெரிவாவதை மறைத்துவிட முடியாது.

அதேபோல் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்திலிருந்து ஆறு பிரதிநிதிகள் தெரிவாகும் நிலையில் தமிழர்கள் வாக்களிப்பில் ஈடுபடாததாலும் பிளவுபட்டு செயற்பட்டதாலும் இரு பெரும்பான்மை இனத்தவர்கள் வன்னியிலிருந்து தெரிவானதையும் அதேபோல் ஆறு பேரில் ஐந்து தமிழர்கள் தெரிவாகக் கூடிய வாக்களார் தொகையிலிருந்தும் தமிழர்களே தமிழர் வாக்குகளைப் பிரித்தமையால் ஏற்கனவே தெரிவான தமிழர் எண்ணிக்கையான ஐந்து மூன்றாகக் குறைவடைந்தது.

கிழக்கிலங்கையில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து அங்குள்ள மக்களில் தனிப்பெரும்பான்மையான தமிழர்கள் இரு தமிழர்களைத் தெரிவு செய்யும் வல்லமை இருந்தும் இன்று ஒரு தமிழ்ப் பிரதிநிதியே தெரிவாகியிருந்தார். மூதூர் மற்றும் திருகோணமலைத் தொகுதிகளிலிருந்து இரு தமிழர்களும் அதேபோல் மூதூர் தொகுதியிலிருந்து (இரு அங்கத்தவர் தொகுதி) ஒரு முஸ்லீமுமாக மூன்று தமிழ் பேசும் பிரதிநிதிகள் தெரிவான திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பிளவுபட்டு வாக்களித்ததாலும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாததாலும் ஒரு தமிழர் கூட பாராளுமன்றத்திற்குத் தெரிவாகாத நிலை இருந்தமையையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அவ்வாறான நிலை இருந்த நிலையில் அடுத்துவந்த பொதுத்தேர்தலில் தமிழர்கள் ஒன்றுபட்டு வாக்களித்தமையினால் மீண்டும் இரு தமிழ்ப் பிரதிநிதித்துவங்கள் திருகோணமலையில் தமிழருக்குக் கிட்டின. கிட்டியதைத் தக்கவைத்துக்கொள்ளும் சாதுர்யம் இல்லாததால் இருந்த இரண்டில் ஒன்று கடந்த பொதுத்தேர்தலில் இழக்கப்பட்டதும் தேர்தல் வரலாற்றின் பக்கமாயுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலையும் அதுவாகவேயுள்ளது. ஐந்து பிரதிநிதிகளில் நான்கு தமிழர்கள் தெரிவாகும் நிலையில் ஏற்கனவே தெரிவாகியிருந்தும் கடந்த பொதுத் தேர்தலில் தமிழர் மத்தியிலே நிலவிய போட்டிகளும் பிளவுகளும் நான்கை மூன்றாகத் குறைத்துவிட்டன.

அதுமட்டுமல்ல மேலும் சில ஆயிரம் தமிழர்கள் வாக்களிக்காது விட்டிருந்தால் விகிதாசார முறையில் கிட்டிய மூன்று ஒன்றாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். தமிழர்கள் தமக்குரிய வாக்குரிமையை அதன் பெறுமதியை, சமூக இருப்பை உறுதிப்படுத்தும் வல்லமையைப் புறந்தள்ளி செயற்படுவதால் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுகமே வேதனையில் ஆழ்த்தப்படுகின்றது.

திகாமடுல்ல என்கின்ற அம்பாறை மாவட்டத்தில் தெரிவாகும் ஏழு பிரதிநிதிகளில் நிச்சயமாக ஒருவர் தமிழர்களின் ஒன்றிணைந்த வாக்குகளால் தெரிவாகும் நிலையுள்ளது. தவாறான தெரிவால் தடுமாறும் நிலைக்கு அம்பாறை மாவட்ட தமிழர்கள் தள்ளப்பட்டதும் வரலாறு.

பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் தமிழர்கள் எதைச் சாதிக்கப் போகின்றார்கள் என்போரும் உள்ளனர். பாராளுமன்றத்தினூடாக எதையும் சாதிக்க முடியாது என்பது உண்மையானாலும் கூட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழரின் இருப்பை நாட்டுக்கு, உலகிற்கு வெளிப்படுத்தும் வாய்ப்பாகப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் உள்ளன என்ற யதார்த்த நிலையை மறந்துவிடக்கூடாது.  

கட்டுக்கோப்பான, விலைபோகாத வரலாறு கொண்ட காட்டிக்கொடுக்காத சமூக நலனை மட்டும் மையப்படுத்தி செயற்படும் வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழ் மக்களை ஒரணியில் உள்வாங்கும் ஆற்றல் கொண்ட அணி எது என்பதை பகுத்துணர்ந்து ஆதரவு வழங்கி அமோகமாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யும் பொறுப்பு தமிழ் வாக்காளர்களுக்கு மட்டுமே உள்ளது.  

இதுவரை காலமும் தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றி கிஞ்சித்தும் சிந்தியாதோர், மக்கள் மத்தியிலே அறிமுகமற்றவர்கள், மாற்றாரிடம் மறைமுகமாக மண்டியிட்டுக் கிடந்தவர்கள், தேர்தல் காலங்களில் தமிழர் வாக்குகளைப் பிரிப்பதற்கென்றே தமிழர் அல்லாதவர்களால் கையூட்டு வழங்கப்பட்டு களமிறக்கப்பட்டவர்கள், தம்மை பிரபல்யப்படுத்திக் கொள்ள முயல்பவர்கள் என்று பல்வேறு வகைப்பட்டோர் பொதுத்தேர்தலில் களமிறங்குவார்கள். சிறப்பாக மக்களைக் கவரும் முறையில் அரங்காடுவார்கள்.

தமிழ் வாக்காளப் பெருமக்களுக்கு தேர்தல் அரங்காடிகளின் நடிப்பை, நகைச்சுவையை ரசிக்கத் தடையில்லை. நன்கு ரசிக்கலாம். ஆனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள தமிழ் சமூகத்தின் இருப்பை, ஒற்றுமையை வெளிப்படுத்தும் தார்மீகக் கடமையை மட்டும் மறந்துவிடாது சிந்தித்து செயற்படவேண்டும். பகுத்தறியும் ஆற்றலிருந்தால் உண்மையை, யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளலாம்.

613_content_manoharan.jpg

 http://www.thinakkural.lk/article.php?article/bqs5tasywt78212d5d4cf93c16255qkpmjcf992b3fe617b32b8296a3lczpb#sthash.GudGRivk.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.