Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு

Featured Replies

post-2794-1164533571.jpgஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு: இளந்திரையன்

[ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 06:24 ஈழம்] [கொழும்பு நிருபர்]

ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் திறக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வார ஏட்டுக்கு இளந்திரையன் தெரிவித்துள்ள கருத்து:

நீண்டகாலமாக ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பட்டினிச் சாவை நோக்கி உள்ளனர். ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

எதிர்வரும் வாரங்களில் அரசாங்கம் இதுவிடயத்தில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கவும் நாம் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினோம்.

ஒரே ஒரு வாகனத் தொடரணிக்காக நாங்கள் ஏ-9 பாதையை திறக்க முடியாது. எந்த விலை கொடுத்தாலும் நாங்கள் திறக்கமாட்டோம். ஐ.நாவே கேட்டுக்கொண்டாலும் திறக்க முடியாது. யாழ்ப்பாண குடாநாட்டுக்கு தொடர்ச்சியாக உணவுப் பொருட்கள் விநியோகம் சென்றடைய வேண்டும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் இளந்திரையன்.

"ஏ-9 பாதையை திறந்து உணவுப் பொருட்கள் வாகனத் தொடரணியை அனுப்புவது குறித்து சிறிலங்கா சமாதான செயலகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம்" என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் தெரிவித்தார்.

  • தொடங்கியவர்

திங்கள் 27-11-2006 02:15 மணி தமிழீழம் [செந்தமிழ்

யாழ் அதி வணக்கத்துக்குரிய ஆண்டகை சிறீலங்கா ஐனாதிபதிக்கு கடிதம்

யாழ் அதி வணக்கத்துக்குரிய ஆண்டகை சிறிலங்கா ஐனாதிபதிக்கு யாழ் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும் மக்கள் மத்தியில் உண்மையான நம்பிக்கையை கட்டியெழுப்பவும் தங்களது உத்தேச திட்டத்தின் அடிப்படையில் ஏ 9 ஊடாக பொருட்களை அனுப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்பாணத்துக்கு தாங்கள் ஏ-9 பாதையூடாக ஓரே தடவையில் பொருட்களை கொண்டு செல்வதற்கு தயாராக இருப்பதாக நாங்கள் பத்திரிகை மூலம் அறிந்து கொண்டோம். நாங்கள் தங்களது இந்த நடவடிக்கையை மிகவும் வரவேற்கின்றோம்.

காலநிலையை கருத்தில் கொண்டு நோக்கும் போது கடல் மூலமாக உணவுப் பொருட்களை கொண்டு செல்வது மிகவும் சிரமமானதும் காலதாமதமானதாகவும் உள்ளது. யாழ் மக்கள் சார்பாக நாம் மீண்டும் மீண்டும் வலித்திக் கேட்டுக் கொள்கின்றோம் ஏ-9 பாதையை திறந்து மக்களுக்கு தேவையான உணவுப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் இவ்வாறு செய்யும் பட்சத்தில் அங்கிருக்கும் தனியார் வர்த்தகர்களும் தங்களது வழமையான வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தங்களது அரசாங்கத்தின் உத்தேசத் திட்டம் இணைத்தலைமை நாடுகளினை திருப்தி படுத்துமுகமாக பிரச்சார நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக நாம் கருதவில்லை எனவும் தமிழ் மக்களது உண்மையான மனிதாபிமான பிரச்சனையை கருத்தில்கொண்டு நம்பிக்கையை கட்டியெழுப்பு முகமாக மேற்கொள்ளப்பட்டதாகவே கருதுவதாகவும் அவர் மேலும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.