Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழைப்பழம் சாப்பிடும் குரங்குகளுக்கு சுவிஸில் இடம் இல்லை: கருப்பின நபரை சரமாரியாக தாக்கிய அதிகாரி

Featured Replies

வாழைப்பழம் சாப்பிடும் குரங்குகளுக்கு சுவிஸில் இடம் இல்லை: கருப்பின நபரை சரமாரியாக தாக்கிய அதிகாரி
[ ஞாயிற்றுக்கிழமை, 19 யூலை 2015, 11:19.12 மு.ப GMT ]
ticket_checker_001.jpgசுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணம் செய்த கருப்பின நபரை டிக்கெட் பரிசோதிக்கும் பெண் அதிகாரி ஒருவர் இனவெறி தாக்குதல் நடத்தியதற்காக நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

சுவிஸில் உள்ள பெர்ன் மண்டலத்தில் வசித்து வரும் கருப்பின நபர் ஒருவர் அண்மையில் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, பயணிகளிடம் டிக்கெட்களை பரிசோதனை செய்ய இரண்டு பெண் அதிகாரிகள் வந்துள்ளனர். அவர்களில் ஒரு பெண் அதிகாரி அந்த கருப்பின நபரிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார்.

ஆனால், அந்த கருப்பின நபரிடம் சரியான டிக்கெட் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அதிகாரி அவரை சரமாரியாக வசை பாடியுள்ளார்.

உச்சக்கட்டமாக, அந்த கருப்பின நபரை நோக்கி ‘Switzerland is not a country for banana-eaters’ (அதாவது, வாழைப்பழம் சாப்பிடும் குரங்குகளுக்கு சுவிட்சர்லாந்தில் இடம் இல்லை) என மறைமுகமாக இனவெறிக்கொண்டு தாக்கி பேசியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் இருவரும் ரயிலை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டு, இந்த சம்பவம் தொடர்பாக அந்த நபர் பெர்ன் மண்டல பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த புதன் கிழமை பெர்ன் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. குற்றவாளியாக நிறுத்தப்பட்ட அந்த பெண் அதிகாரி, ‘அந்த நபர் தன்னை வேண்டும் என்றே பழி வாங்குவதற்காக’ இந்த புகாரை அளித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால், அந்த பெண் அதிகாரியுடன் வந்த மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘இருவரும் வாக்குவாதத்தில் இருந்தபோது அந்த பெண் அதிகாரி கருப்பின நபரை நோக்கி ‘Back in the bush’ (காட்டிற்கே திரும்ப போ’) என கூறியதை தானும் கேட்டேன் என நீதிபதியிடம் கூறினார்.

இந்த சாட்சியத்தை அடிப்படையாக வைத்து பெண் அதிகாரி இனவெறி பாகுபாடு பார்த்து அந்த நபரை நடத்தியது உண்மை என நிரூபனம் ஆவதால், அவருக்கு 1600 பிராங்குகள் அபராதம் விதித்து தீர்ப்பளிப்பதாக உத்தரவிட்டார்.

மேலும், தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தது மற்றும் பரிசோதனை அதிகாரியிடம் தகராறில் ஈடுப்பட்ட காரணத்திற்காக புகார் அளித்த நபருக்கும் 500 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

http://www.coolswiss.com/view.php?22eOld0bcOa0Qd4e3yMC302cBnB3ddeZBnp303egAA2e4K0asacb3lOS43

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.