Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் தீர்வு குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடு

Featured Replies

TNA_18.jpg

 

 

 

 

 

 

நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒன்றுபட்ட இலங்­கைக்குள் சமஷ்­டிக்­கட்­ட­மைப்பின் அடிப்­ப­டை­யி­லான அதி உச்ச அதி­கா­ரப்­ப­கிர்வே தீர்­வாக அமையும் என தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அத்­துடன் தமிழ் பேசும் மக்­களின் வர­லாற்று ரீதி­யான வாழ்­விடப் பகு­தி­க­ளான வடக்கு, கிழக்கில் சுய­நிர்­ணய உரி­மையின் பிர­காரம் இந்தத் தீர்வு அமை­ய­வேண்­டு­மென்றும், இதுவே நாட்டின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்­வாக அமையும் என்றும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

புவி­யியல் ரீதி­யாக பிணைக்­கப்­பட்­டதும் தமிழ் பேசும் மக்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்­ட­து­மான வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தமிழ் மக்­க­ளதும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்­க­ளதும் பூர்­வீக வாழ்­வி­டங்­க­ளாகும். ஐக்­கிய நாடுகள் அமைப்பின் குடி­யியல் உரிமை மற்றும் அர­சியல் உரிமை தொடர்­பான சாசனம், பொரு­ளா­தார சமூக சாசனம் ஆகி­ய­வற்றின் பிர­காரம் தமிழ் மக்கள் ஒரு தனித்­து­வ­மான மக்கள் என்­ப­துடன் சுய­நிர்­ணய உரி­மைக்கு உரித்­து­டை­ய­வர்­க­ளா­கவும் இருக்­கின்­றனர் என்றும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பகி­ரப்­பட்ட இறை­யாண்­மையின் அடிப்­ப­டையில் உரு­வாக்­கப்­படும் அதி­கா­ரப்­ப­கிர்வு ஏற்­பா­டா­னது நிலத்தின் மீதும் தமிழ் மக்­களின் பாது­காப்பை உறுதி செய்யும் வகை­யிலும் அமை­ய­வேண்டும். குறிப்­பாக சட்டம் ஒழுங்கு, சட்ட அமு­லாக்கம் என்­ப­வற்­றிலும் சமூகப் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியின் அங்­கங்­க­ளான சுகா­தாரம், கல்வி, உயர்­கல்வி, தொழில் பயிற்சி, விவ­சாயம், மீன்­பிடி, கைத்­தொழில், கால்­நடை அபி­வி­ருத்தி, வெளி­வி­வ­கா­ரத்­துறை மற்றும் நிதி அதி­காரம் என்­ப­வற்­றிலும் அதி­கா­ரப்­ப­கிர்வு ஏற்­பா­டுகள் அமை­ய­வேண்டும் எனவும் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

வடக்கு, கிழக்கில் வாழும் இளை­ஞர்­க­ளுக்கு நேரடி வெளி­நாட்டு முத­லீ­டு­களின் மூலம் புதிய கைத்­தொழில் துறை­களும், வேலை­வாய்ப்­புக்­களும் உரு­வாக்­கிக்­கொ­டுக்­கப்­படல் வேண்டும். இவை அனைத்து விட­யங்­களும் ஒன்­று­பட்­டதும், பிள­வு­ப­டா­த­து­மான இலங்­கைக்குள் நிறை­வேற்­றப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் போட்­டி­யிடும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை கடந்த சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் வெளி­யிட்­டது. அத­னூ­டா­கவே இனப்­பி­ரச்­சினைக்கான தீர்வு தொடர்­பாக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு மிகவும் தெளி­வா­கவும், திட்­ட­வட்­ட­மா­கவும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு கூட்­ட­மைப்பு தேசி­யப்­பி­ரச்­சினைக்கான தீர்வு தொடர்­பான நிலைப்­பாட்டை மிகவும் உறு­தி­யான முறையில் வெளி­யிட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­வி­ட­ய­மாகும். தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற பிர­தான அர­சியல் கட்சி என்ற ரீதியில் இந்த நிலைப்­பாடு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஆனால், தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பிளவு படாத இலங்­கைக்குள் சமஷ்டி முறை­மையில் தீர்வைக் கோரி­யி­ருந்­தாலும், தீர்வை வழங்­கு­வ­தற்­கான அதி­கா­ரத்தை வைத்­துக்­கொண்­டுள்ள தென்­னி­லங்­கையின் இரண்டு பிர­தான கட்­சி­களும் சமஷ்டி அல்­லது ஐக்­கிய இலங்கை என்ற பதத்தை விடுத்து ஒற்­றை­யாட்­சிக்குள் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கப்­படும் என்றே கூறி­வ­ரு­கின்­றன. கடந்­த­வாரம் ஐக்­கிய தேசி­ய முன்னணியின் தேர்தல் விஞ்­ஞா­பனம் வெளி­யி­டப்­பட்ட நிலையில் அதிலும் கூட ஒற்­றை­யாட்சி முறை­மை­யி­லேயே தீர்வு காணப்­படும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது.

அதா­வது நாட்டின் இனப்­பி­ரச்­சி­னைக்கு அனைத்து தரப்­பி­னரதும் ஒத்­து­ழைப்­பு­டனும் இணக்­கப்­பாட்­டு­டனும் ஒற்­றை­யாட்சி முறை­மையின் கீழ் அதி­யுச்ச அதி­கார பகிர்­வுக்கு செல்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் இன்­றைய தினம் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தாக கரு­தப்­ப­டு­கின்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் பெரும்­பாலும் ஒற்­றை­யாட்­சியின் அடிப்­ப­டை­யி­லேயே தீர்வு அணு­கு­மு­றைக்­கான யோசனை முன்­வைக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்த நாட்டின் தமிழ் பேசு­கின்ற மக்­களின் அர­சியல் அதி­காரப் பிரச்­சி­னைக்கு நியா­ய­மான தீர்வு ஒன்றை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான அர­சியல் தீர்­வுக்­காக பல்­வேறு வழி­களில் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போதும் இது­வரை எந்­த­வொரு முயற்­சியும் கைகூ­ட­வில்லை. தீர்வு செயற்­பாட்டைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் பேசு­கின்ற மக்கள் தொடர்ச்­சி­யாக ஏமாற்­றங்­க­ளையும், தோல்­வி­க­ளையும் சந்­தித்­த­வர்­க­ளா­கவே இருந்து வரு­கின்­றனர்.

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் போன­மைக்கு தென்­னி­லங்­கையை மட்டும் குறை­கூ­றி­விட்டு இருந்து விட முடி­யாது. காரணம் கடந்த காலங்­களில் இரண்டு தரப்­புக்­க­ளி­லி­ருந்தும் சில தவ­றுகள் இழைக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். கடந்த 2001முதல் 2004 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் பத­வி­யி­லி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வை காண்­ப­தற்­கான சந்­தர்ப்­பங்­களை உரு­வாக்­கி­யி­ருந்­தது. ஒரு கட்­டத்தில் சமஷ்டி அடிப்­ப­டையில் தீர்வைக் காண்­ப­தற்­குக்­கூட அப்­போ­தைய அர­சாங்கம் தயார் என அறி­வித்­தி­ருந்­தது.

ஆனால் தமிழ் பேசும் தரப்­பி­லி­ருந்து அதற்கு உரிய பதில் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் அந்த முயற்­சியும் தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­தது. மேலும் யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும் பத­வி­யி­லி­ருந்த அர­சாங்­கத்­தினால் இனப்­பி­ரச்­சினைக்கான தீர்­வு தொடர்பான ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அர­சாங்­கத்­திற்கும் தமிழ் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்­ப­மான இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­களும் குறு­கிய காலத்தில் தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­தன. அந்தப் பேச்­சு­வார்த்­தை­களின் இறு­தியில் எந்த அறி­விப்பும் இல்­லாமல் ஆளும் தரப்பு கலந்து கொள்­வதை தவிர்த்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யி­லேயே கடந்த ஜன­வரி மாதம் 08 ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் ஊடாக நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது. இத­னை­ய­டுத்து தமிழ் பேசும் மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­படும் வகை­யி­லான ஆக்­க­பூர்­வ­மான சில நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன. இது இவ்­வாறு இருக்க எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லின் பின்னர் அமைய­வுள்ள அர­சாங்­கத்தின் ஊடாக இனப்­பி­ரச்­சி­னைக்­கான நியா­ய­மான அர­சியல் தீர்வு நிச்­சயம் பெறப்­படும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் அடிக்­கடி கூறி­வ­ரு­கின்றார். சிரேஷ்ட அர­சியல் தலைவர் என்ற ரீதியில் மிகவும் ஆழ­மான ஆய்­வு­களை செய்த பின்­னரே கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் இந்த விட­யங்­களை கூறி­வ­ரு­கின்றார் என்­பதை அனை­வரும் புரிந்து கொள்­ளலாம்.

குறிப்­பாக இரா. சம்­பந்தன் கூறு­வது போன்று எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் அமை­ய­வுள்ள புதிய அர­சாங்­கமானது தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்­கான தீர்வை முன்­வைக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். பிரி­வு­ப­டாத இலங்­கைக்குள் அனைத்து மக்­களும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­யதும், தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்­யக்­கூ­டி­ய­து­மான அர­சியல் தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டி­யது முக்­கி­ய­மாகும்.

வர­லாற்றில் இந்த அர­சியல் தீர்வு விவ­காரமானது நீண்டகாலம் இழுத்­த­டிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. எனவே இதற்குப் பின்­னரும் இவ்­வா­றான இழுத்­த­டிப்­புக்­க­ளுக்கு இடம் கொடுக்­காமல் விரை­வாக அர­சியல் தீர்­வைக்­காண்­ப­தற்கு பதவிக்கு வருகின்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செயற்பாட்டில் தமிழர் தரப்பு உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தமது ஆக்கபூர்வமான பங்களிப்பை உரிய முறையில் செலுத்தவேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டுமக்கள் புதிய மாற்றமொன்றுக்காக தமது ஆணையை வழங்கியிருந்தனர். அவ்வாறானதொரு மாற்றமான சூழலிலாவது தமது பிரச்சினைக்கான தீர்வு கிட்டுமா என்பதில் தமிழ் பேசும் மக்கள் ஏக்கத்துடனும் ஆர்வத்துடனும் இருக்கின்றனர். எனவே இதற்கு உரிய தரப்புக்கள் ஆரோக்கியமான பதிலை வழங்க வேண்டும். எனவே தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்தும் அரசியல் ரீதியில் அநீதிக்கு உட்படாத வகையில் அவர்களது அரசியல் அதிகாரங்களை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தீர்வானது சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு அடுத்த அரசாங்கத்திலாவது முன்வைக்கப்படுவதற்கான சூழலை அனைத்துத் தரப்பினரும் உருவாக்கவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.

http://www.virakesari.lk/articles/2015/07/27/அர­சியல்-தீர்வு-குறித்த-கூட்­ட­மைப்பின்-நிலைப்­பாடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.