Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழமே தீர்வு:-பிரபாகரன்....!

Featured Replies

தமிழீழமே தீர்வு: பிரபாகரன்....!

----------------------------

தமிழீழமே தீர்வு. வேறு வழி யில்லை என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். தமிழ் ஈழத்திற்கு அனைத்துலக சமூகமும் தமிழ் நாடும் ஆதரவு தர வேண்டும் என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்தார்.

சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு அனைத்துலக சமூகத்தினை யும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக் கொள்கின்றோம். தங்களது ஆதரவுக் குரலினை வழங்கி வரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது முயற்சிகளைத் தொடர்ந்தும் வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் படியும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம் என்று தமது மாவீரர் நாள் உரையில் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

தமிழீழத் தேசிய மாவீரர் எழுச்சி நாளை முன்னிட்டு நேற்று திரு பிரபாகரன் தமது ஆண்டு கொள்கை உரையை நிகழ்த்தினார்.

எமது விடுதலை வரலாற் றில் முக்கியமான ஒரு திருப்பு முனையில் நாம் தற்போது நிற்கின்றோம். எமது போராட்டப்பாதை மிகவும் நீண்டது, கடினமானது, பல கஷ்டமான கட்டங்களைக் கொண்டது. இதுவரை எந்தவொரு விடு தலைப் போராட்டமும் சந்தித்திருக்காத சவால்களை, எதிர் பாராத திருப்பங்களை நாங்கள் எதிர்கொண்டிருக்கின்றோம். வரலாற்றில் முன்னொரு போதுமே நடந்திருக்காதவாறு நாங்கள் போரையும் அமைதிப் பேச்சுக்களையும் ஒரே நேரத்தில் சந்தித்து வருகின்றோம் என்றார் அவர்.

எமது விடுதலை அமைப்பும் சரி, எமது மக்களும் சரி ஒரு போதுமே போரை விரும்பியதில்லை என்று சொன்ன அவர், எமது மக்களது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் அமைதிவழி அணுகுமுறை யினையே எப்போதும் விரும்பி னோம். அமைதி வழியில் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க நாம் எப்போதும் தயங்கியதில்லை. இதனால்தான் திம்புவில் ஆரம்பித்து ëஜனீவா வரை பல்வேறு தடவைகள், பல்வேறு நேரங்களில், பல்வேறு நாடுகளில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறோம். நோர்வேயின் அனுசரணை யோடும், அனைத்துலக சமூகத்தின் ஆசீர் வாதத்தோடும் பல்வேறு நாட்டுத் தலைநகரங்களில் நடைபெற்றுவரும் தற்போதைய அமைதி முயற்சிகள் முற்றிலும் வித்தியாச மானவை என்றார்.

தமது படைபலத்தினைப் பயன்படுத்தி தமிழ்த் தேசத் தின் தலைவிதியைத் தீர் மானிக்கலாம் என ராஜபக்ச அரசு எண்ணுகின்றது. தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து, அரைகுறைத் தீர்வை தமிழர் மீது திணிப்பதற்கு அது விரும் புகின்றது. ராஜபக்ஷ அரசின் இந்தத் தந்திரோபாயத் தினால்தான், யுத்த நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்துபோய்க் கிடக்கின்றது என்று தமது உரையில் பிரபாகரன் குறிப்பிட்டார்.

--TAMILMURASU-SINGAPORE--

26 இரவு, சிங்கபூர் வசந்தம் செய்தி சேவையில் தலைவர் பிறந்த நாளை, வீரர்கள் தினமாக (மாவீரர் தினமாக)கொன்டாடுவதாக சொன்னார்களாம். உன்மையா? :angry:

  • தொடங்கியவர்

இலங்கையில் மீண்டும் மோதல்????

--------------------------------

தமிழீழமே தீர்வு, இருபதாண்டு போரை தொடரவிருக்கிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அறிவித்ததைத் தொடர்ந்து இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நேற்று மீண்டும் உக்கிரமான மோதல் முழு வீச்சில் தொடங்கியிருக்கிறது.

மட்டக்களப்பு பகுதியில் ராணுவத் தினரின் முன்னணி தற்காப்புப் பகுதியைக் குறி வைத்து முதன்முறையாக 153மிமி பீரங்கிகளை புலிகள் பயன்படுத்தி தாக்கி வருவதாக ராணுவத் தரப்பு கூறியுள்ளது. இத்தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ராணுவத்தின் தற்காப்பு படையினர் புலி களால் கடுமையாகத் தாக்கப்பட்டு வருவ தாகவும் மிகவும் சக்திவாய்ந்த துப்பாக்கி களையும் ஆயுதங்களையும் புலிகள் பயன் படுத்தி சண்டை போடுவதாகவும் இலங்கை பாதுகாப்பு ஊடக மைய பேச்சாளர் மேஜர் உபாலி ராஜபக்சே கூறியிருக்கிறார்.

இந்நிலையில் சுமார் 600 டன் எடை யுள்ள உணவுப் பொருட்களை ஏற்றிய 60 டிரக் வாகனங்கள் வாகரையில் தடுத்து நிறுத்தப்பட்டன. இவ்வாகனங்கள் தங்கள் பகுதிக்குள் செல்ல திங்களன்று விடுதலைப் புலிகள் அனுமதி தந்தனர்.

ஆனால் இரு தரப்பிலும் தொடங்கி யிருக்கும் உக்கிரத் தாக்குதல் காரணமாக வாகனங்கள் செல்லும் திட்டம் ரத்தாகக் கூடும் என்று முன்னதாக மேஜர் உபாலி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், மட்டக்களப்பு, வாகரை யில் மருத்துவ வசதியின்றி குழந்தையைப் பிரசவித்து கர்ப்பிணித் தாய் மடிந்து போன அவலம் நிகழ்ந்துள்ளது.

இந்த அவலம் தொடர்பாக மட்டக்களப்பு கரிட்டாஸ் நிறுவன இயக்குநர் {தரன் சில்வெஸ்டர் கூறியதாவது;

வாகரையில் பெரும்பாலான மக்கள் தற்காலிக முகாம்களில் வாழ்கின்றனர். வீதியோரங்களிலும் மரங்களின் கீழும் தான் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

வாகரையில் உணவுப் பொருட்கள் இல்லாத நிலையில் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளும் முற்றாக முடங்கிப் போயுள்ளன.

வீடுகளில் தங்கியுள்ளோருக்கு மின்சாரம் இல்லை. தீப்பெட்டியோ, மெழுகுவர்த்தி களோ, மண்ணெண்ணெயோ எதுவுமே அந்த மக்களுக்கு கிடைக்கவில்லை.

உணவுத் தட்டுப்பாட்டுக்கு அப்பால் மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடும் உள்ளது. மேலும் மழை தொடர்ந்து பெய்வ தால் தொற்று நோய் பரவும் சூழலும் உள்ளது என்றார் அவர்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

TAMILMURASU-SINGAPORE.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேறு வழியில்லை.......................!!!!!

  • தொடங்கியவர்

உன்மையா????

NழுஇஇஇNழு வுர்யுவு'ளு Nழு வுசுருநு.ஐ றுயுவுஊர் வுர்நு ஏயுளுயுNவுர்யுஆ ஊநுNவுசுயுடு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.