Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிவிட்டனரா? நோர்வேயிடம் இலங்கை அரசாங்கம் கேள்வி?

Featured Replies

புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிவிட்டனரா? நோர்வேயிடம் இலங்கை அரசாங்கம் கேள்வி?தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகி விட்டனரா என்பது தொடர்பாக அறிய தருமாறு இலங்கை அரசாங்கம் நோர்வே ஏற்பாட்டாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக நோர்வே ஏற்பாட்டாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக அமைச்சர் கேலிய ரம்புக்வெல்ல கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது. எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென தாம் தீர்க்கமாக முடிவுசெய்திருப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அரசாங்கம் நோர்வே தரப்பிடம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளதாக அமைச்சர் கேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் உரை தொடர்பில் பெரிதுப்படுத்தவில்லை அரசாங்கத்தை பொறுத்த வரையில் சமாதான முனைப்பில் தொடாந்தும் உறுதியாக உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரபாகரனின் உரையை அடுத்து போர் நிறுத்த கண்காணிப்பு குழு மற்றும் நோர்வே ஏற்பாட்டாளர் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் காலத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கை வரும் போது அவர்களின் தனிப்பட்ட தொடர்புகள் குறித்து ஆராயப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் நாடுகளின் உயர் பிரதிநிதிகளுக்கு மாத்திரமே ஜனாதிபதியை சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியான அலன் ரொக் இலங்கை அரசாங்கம் குறித்து வெளியிட்ட கருத்துக்களை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • தொடங்கியவர்

யுத்த நிறுத்த உடன்படிக்கை செயலிழந்து செத்துவிட்டதா? - பிரபாவின் அறிவிப்பால் கொழும்பு தடுமாற்றம்

Wednesday, 29 November 2006

--------------------------------------------------------------------------------

நிலைமையைத் தெளிவுபடுத்த பகீரத முயற்சி

இலங்கையில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்து, உக்கிப்போய் வெறும் தாளாகிக் கிடக்கின்றது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமது மாவீரர் தின உரையில் பகிரங்கமாக அறிவித்திருப்பதில் அந்த உடன்படிக்கை முற்றாக கைவிடப்பட்டுவிட்டது என்று புலிகளின் தலைவர் அர்த்தப்படுத்துகின்றாரா? இதனை உறுதிப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றது கொழும்பு அரசு.

தலைவர் பிரபாகரனின் அறிவிப்பின் அடிப்படையில், புலிகளின் இயக்கம் யுத்த நிறுத்த உடன் பாட்டிலிருந்து விலகிவிட்டது என்று கொள்ளலாமா என்பதைப் புலிகளிடமே நேரடியாகக் கேட்டறிந்து தெரிவிக்கும்படி இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணும் முயற்சியில் அனு சரணைப் பணி வகிக்கும் நோர்வேயையும், இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவையும் இலங்கை அரசு அவசரமாகக் கோரியிருக்கின்றது.

போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து தமது மாவீரர் தின உரையில் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்ட விடயங்கள், கொழும் பில் ஒவ்வொரு வார்த்தையாக, வார்த்தை யாகப்பிரித்து, வேறுபடுத்தி அதனடிப்படையில் ஆராயப்படுகின்றன.

""...(மஹிந்த அரசின்) இந்த போர் முனைச் செயற்பாட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துச்செயலிழந்து போய்க் கிடக் கின்றது. ஒப்பந்தம் கிழிக்கப்படாமலேயே உக்கிப்போன தாளாகி உருக்குலைந்து

கிடக்கிறது. புலிகளின் இலக்குகளுக்கு எதி ராக மும்முனைகளிலும் தாக்குதல் தொடரும் என அறிவித்து, மஹிந்தவின் அரசு ஒப் பந்தத்திற்கு ஈமக்கிரியைகளையும் நடத்தி முடித்திருக்கின்றது.'' என்று அறிவித்துள்ள தலைவர் பிரபாகரன், அதற்கு அப்பாலும் போய் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருக்கின்றா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.