Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகை மிரட்டும், ஐ.எஸ். தீவிரவாதிகளை எய்ட்ஸ் விரட்டுகிறது….

Featured Replies

உலகை மிரட்டும் ஐ.எஸ். தீவிரவதிகளை தற்போது எய்ட்ஸ் நோய் விரட்டிவருகிறது. இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் பரிசோதனை செய்துக் கொள்ளவேண்டும் என்று தலைமை உத்தரவிட்டு உள்ளது.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இயங்கி வருகிறது. அதன் தீவிரவாதிகள், உலகின் பல நாடுகளில் வேரூன்றி உள்ளனர். ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை போரிட்டு வருகிறது. உலக நாடுகளின் படையானது, போராடியும் இதுவரையில் அவர்களை அடக்கமுடியவில்லை. தொடர்ந்து இருதரப்பு இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

ஐ.எஸ். தீவிரவாதிகள், தங்களிடம் சிக்கியவர்களை தலையை வெட்டியும், வெடிகுண்டு வைத்து வெடித்தும், தண்ணீருக்குள் மூழ்கடித்தும், தீயிட்டு கொழுத்தியும் கொன்று வெறியாட்டம் ஆடிவருகின்றனர். பெண்களில் நிலையானது மிகவும் மோசமாகும். இருப்பின் இத்தகைய தீவிரவாதிகளுக்கு உதவி, சேவை செய்வதற்காக உலக நாடுகளில் இருந்து பெண்கள் சிரியா மற்றும் ஈராக் செல்வதும் காணப்படுகிறது. இவ்வாறு முயற்சி செய்யும் பெண்கள் தடுக்கப்பட்டும் உள்ளனர். இதற்கிடையே அங்கு தீவிரவாதிகள் கையில் சிக்கும் சிறுபான்மையின பெண்கள், சிறுமிகளின் நிலையோ மிகவும் மோசமானது.

இவ்வாறு சிக்கியவர்களை பாலியல் அடிமைகளாக மாற்றிவரும் தீவிரவாதிகள் அவர்களை மிகவும் கொடூரமாக உயிருடன் சித்தரவதைசெய்து வருகின்றனர். வாழவும், சாவவும் முடியாமல் அவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களுடைய நிலைகுறித்து தப்பிஓடிவரும் பெண்கள் கூறும்போது கல் நெஞ்சும், கரையும் விதமாக உள்ளது.

ஆனால் பெண்களை ஏலமிட்டு அவர்களை துன்புறுத்தும் செயலை ஐ.எஸ். தீவிரவாதிகள் இதுவரையில் செய்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு மரண பயத்தை காட்டும் விதமாக இயற்கையின் படைப்பான எய்ட்ஸ் எழுந்து உள்ளது.

மொரோக்கானை சேர்ந்த இரண்டு பெண்களிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்ட ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவிஉள்ளது. அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கும் எய்ட்ஸ் நோய் பரவி வருகிறது என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான செய்திகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரையில் 16க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மொரோகன் பெண்கள், தீவிரவாதிகளிடம் சிக்கியினால் கொலை செய்துவிடுவார் என்று பயந்து துருக்கிக்கு தப்பி ஓடிவிட்டனர்.

இதற்கிடையே எய்ட்ஸ் வேகமாக பரவி வருகிறது என்ற பீதி ஐ.எஸ். தீவிரவாதிகள் இடையே எழுந்து உள்ளது. இதனையடுத்து அனைத்து தீவிரவாதிகளும், எய்ட்ஸ் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.எஸ். தலைமை உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதம், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை தற்கொலைப்படை தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்த முன்வந்து உள்ளது. விரைவில் இவர்கள் தற்கொலை தாக்குதலில் மடியஉள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் இந்தோனேசியாவை சேர்ந்த ஜிகாதி கொலை செய்யப்பட்டான். இரத்தம் வழங்கியபோது, அவனுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவன் கொலை செய்யப்பட்டான். சிறுபான்மையின பெண்கள் துன்புறத்தப்பட்டு, அவர்களிடம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதால், நோயின் பாதிப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சமும் தீவிரவாதிகள் மத்தியில் எழுந்துஉள்ளது

.ISIS AIDS

- See more at: http://www.canadamirror.com/canada/48099.html#sthash.RRJXXQJt.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.