Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்கு வருட போர் நிறுத்தம் புலிகளை பலமுள்ள போர்ப்படையாக்கிவிட்டது!

Featured Replies

நான்கு வருட போர் நிறுத்தம் புலிகளை

பலமுள்ள போர்ப்படையாக்கிவிட்டது!

அமெரிக்காவில் இலங்கை இராணுவத் தளபதி தெரிவிப்பு.

வாஷிங்டன் வந்திருந்த இலங்கையின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, கடந்த செவ்வாய்க்கிழமை, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நிக்கலஸ் பேர்ன்ஸ் உட்பட சிரேஷ்ட அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலரைச் சந்தித்துப் பேசி, இலங்கையின் நிலைவரங்களை, குறிப்பாக பாகாப்பு மற்றும் அரசியல் நிலைவரங்களை எடுத்துக்கூறினார்.

தனிநாடு கேட்டுப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள்மீது சமீப சில காலமாக கடும்போக்கை வெளிப்படையாகவே தெரிவித்துவரும் நிக்கலஸ் பேர்ன்ஸுடன் இராணுவத் தளபதி நடத்திய பேச்சுகள் மிக ஆக்கபூர்வமாக இருந்தன என்று இலங்கை ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

""சமாதானத் தேடலுக்காக விடுதலைப் புலிகளின் இராணுவப் பலம் அதிகரிக்கப்படுவதை அனுமதிக்கமுடியாது. அவர்களது இராணுவப் பலம் கூடுமானால், இலங்கையின் பாதுகாப்பு பலவீனப்படும்'' என்று இராணுவத் தளபதி தெரிவித்ததாகவும் தெரியவருகிறது.

அமெரிக்க ராஜங்க அமைச்சின் கட்டடத்தின் 7ஆவது மாடியில் நடந்த இந்த சிரேஷ்ட அதிகாரிகள் மட்ட சந்திப்பின்போது, இலங்கையின் தூதுவர் பெர்னாட் குணதிலகவும் உடனடிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

""நாலு வருட யுத்தநிறுத்த உடன்படிக்கைக் காலத்தில் விடுதலைப் புலிகள் தமது இராணுவப் பலத்தைக் கணிசமான அளவு கட்டி வளர்த்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்த ஆட்லரிகள் இப்பொழுது பத்திலிருந்து 100ஆக அதிகரித்திருக்கிறது. 122 மி.மி. ரக பீரங்கிகளின் தொகையும் இரண்டிலிருந்து 20ஆக உயர்ந்துள்ளது. கனரக மோட்டார்களும் இருபதிலிருந்து 80ஆக உயர்ந்துள்ளது'' என்று பேச்சின்போது தெரிவித்த இராணுவத்தளபதி ""இந்த நாலுவருடகால யுத்த நிறுத்த காலத்தில் புலிகள் தங்களை ஒரு போர்ப்படையாகவே மாற்றிக்கொண்டுவிட்டார்கள்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிரபாகரனின் இராணுவப் பலத்தைப் பலவீனப்படுத்தாதவரை, சர்வதேச சமூகம் வலியுறுத்தி நிற்கும் வழியிலான தீர்வோ, சமாதானமோ கிட்டப்போவதில்லை என்பதே இராணுவத் தளபதியின் கருத்தாக இருந்துவருகிறதுபோலவே தெரிகிறது.

www.uthayan.com

:unsure: 9- 11 இன்பின்பு இவன்கலெல்லாம் நல்லா புத்திபேதலித்துப் போணாண்கள். 1999 நான்

கனடாவினில் ஒரு அபூர்வ புத்தகம் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. 1854 ஆம் ஆண்டு ஒரு இத்தாலிய தீர்க்கதரிசி எழுதியது....

2000 ஆண்டிற்கு பின்பு சுணாமி வரும் என்டும் அதன் பின் இப்படியாக பல இடங்களில் வந்து 2013 மட்டில் அமெரிக்காவின் பெரும் பசிமிக் பக்க பகுதிகள் கடலினுள் தாழும் என்டு......என் இனிய தமிழ் மக்களும் பல புலம் பெயர் அப்பாவி சனமும் வாழும் இப் பெரிய பூமி கடலினுள் தாளும் என்பது நினைத்து பார்க்க அடி மனம் ஏதோ இடம் கொடுக்கவில்லை.....

இவன் இப்பிடி அனியாயம் செய்வவனுடன் உறவுகளினை வெட்டுவது தான் இயற்கைக்கும் பிடிக்கும். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான தீர்வு வழங்கப்பட்டால் ஏன் ராணுவ பலம் அதிகரிக்கப்பட போகிறது?

படை பலத்தில் பலம் அல்ல மனோபலத்திலும், லட்சிய உறுதியிலும்தான் பலம் இருக்கிறது? இலங்கை ரானுவத்தால் சேர்கமுடியாத ராணுவபலமா?

சிந்தி செயற்படு. ;)

என்ன புலிகள் சம்பளத்துக்கு மாரடிக்கும் கப்பு ஆரய்சியோ அல்லது பெனாண்டோவோ அல்ல இலட்சியத்தின் பால் நம்பிக்கைவைத்து தமிழ்ழீழ அன்னை மீது விசுவாசம் வைத்து உயிரினை தமிழீழ சுதந்திர அரசுக்காக நன்கொடையாக கொடுக்க எப்போதும் தயாராக இருப்பவர்கள்

:unsure: ஆமா சார் சரியாய்ச்சொண்ணீங்க.....

மனோபலம் என்பது தூய் எண்ணம் அடக்கம் ஒழக்கமான வாழ்க்கை முறைகளினால்

உருவாவது.......

போரிடும் மன ஆற்றல் மண் மீட்பு என்பன பாதிப்பவனுகுதான் விளங்கும்....

ஆகவே எம்மட்ட ஒரு பழமொழி ஒண்டு உண்டு....

பண்டி யோட சேர்ந்த பசுவும் பீ.......பீ என்டால் கக்கூஸ் .......அல்லது பூ...பூ...

திண்ணும்......அததான் டக்லஸ் அன்ட் கருணா திண்ணிரீணம். :unsure::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.