Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எபோலா நோயினால் குடும்பத்தை இழந்த வாலிபர்: நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

eboloattack_player_002.jpg

கொடிய உயிர்க்கொல்லியான ‘எபோலா’ நோயினால் குடும்பத்தை இழந்து பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்துள்ள வாலிபர் ஒருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சிரா லியோன். 2013ம் ஆண்டு உலகையே உலக்கிய ‘எபோலா’ நோய்க்கு இந்த நாட்டில் வசிப்பவரே அதிக எண்ணிக்கையில் பலியாகியுள்ளனர்.

இதே நாட்டை சேர்ந்த ஜிம்மி தொரோன்கா(20) என்பவர் அந்நாட்டில் தடகள விளையாட்டு போட்டியில் முன்னணியில் உள்ள ஒரு வாலிபர் ஆவர்.

ஆனால், துரதிஷ்டவசமாக எபோலா நோய் தாக்கியதில் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 நபர்கள் பரிதாபமாக பலியாகினர்.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பிரித்தானியா நாட்டிற்கு வந்துள்ளார்.

பிரித்தானியாவில் அடைக்கலம் அடைந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் அந்நாட்டு அரசு முறையான விசா வழங்கியிருந்தது.

ஆனால், விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நேரத்தில், அதில் பங்கேற்காமல் திடீரென மாயமாக காணாமல் போயுள்ளார்.

இந்த குற்றத்திற்காக கடந்த மார்ச் மாதம் லண்டன் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட ஜிம்மியை பொலிசார் கைது செய்தனர்.

பிரித்தானியாவில் தொடர்ந்து தங்குவதற்கு தனது விசா காலத்தை நீடித்து கொள்வதற்காக விண்ணப்பம் செய்துள்ளார்.

ஜிம்மியின் விண்ணப்பத்தை சரி பார்த்த அதிகாரிகள், புலம்பெயர்வு விதிமுறைகளுக்கு எதிராக ஆவணங்கள் இருப்பதாக கூறி அவருக்கு விசா வழங்க மறுத்துள்ளனர்.

மேலும், திங்கள் கிழமைக்குள்(இன்று) நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், அவர் பலந்தவமாக நாடுகடத்தப்படுவார் என குடியமர்வு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எபோலா நோயினால் குடும்பத்தை இழந்திருக்கும் இந்த நேரத்தில், தன்னை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பினால் அங்கே தனக்கு ஆதரவாக எவரும் இல்லை என்றும், விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்ற தனது லட்சியமும் நிறைவேறாது என கூறியுள்ளார்.

பிரித்தானிய நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்றும் அதிகாரிகள் தன்னை நாடுகடத்த முயன்றால் அதனை எதிர்க்கொள்ள தயாராக இருப்பதாக ஜிம்மி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

 

http://world.lankasri.com/view.php?20eAlndbd82063403cMQ3222Zn53bdcdBPp40eMgAAaec6o8E4ce3JOm23

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.