Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நானும் ரௌடிதான் - படம் எப்படி?

Featured Replies

நானும் ரௌடிதான் - படம் எப்படி?

 

காதலும் காதல் நிமித்தத்தால் ஏற்படும் காமெடி கலந்த ஆக்‌ஷனும் தான் நானும் ரவுடிதான்.

ரவுடிக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையையும் பார்த்து போலீசாக வேண்டும் என்ற தனது லட்சியத்தை மாற்றிக்கொண்டு ரௌடியாக வேண்டும் என்ற கனவுகளோடு வளர்கிறார் ஒரு சிறுவன். அந்தக் குழந்தையே விஜய் சேதுபதிதான் என்கிற ரீதியில் தன்னை மிகப்பெரிய ரௌடியாக நினைத்துக்கொண்டு வாழ்ந்தும் வருகிறார். எனினும் செய்யும் அத்தனையும் ரவுடியாகக் காட்டிக்கொள்ள வேண்டி செய்யும் வெட்டி பில்டப்புகளாகவே இருக்கின்றன.இதற்கிடையில் போலீஸ் செலக்‌ஷன் தேர்வுகளும் நடந்தேறுகின்றன.

இந்நிலையில் அவரது கண்களில் படுகிறார் அழகிய, அதே சமயம் சோகமான  நயன்தாரா. காது கேக்காத நயன்தாராவைப் பார்த்தவுடனேயே காதல் பற்றிக்கொள்கிறது விஜய் சேதுபதிக்கு. காதல் மலரும் தருவாயில் நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய பிரச்னையையும் மிகப்பெரிய இழப்புமாய் விஜய் சேதுபதிக்கு ஒரு பொறுப்பைக் கொடுக்கிறார் நயன். அது என்ன அதை விஜய் சேதுபதி நிறைவேற்றினாரா இல்லையா என்பதை காமெடி கலந்த களேபரப் பின்னணியில் க்ளைமாக்ஸ் வைக்கிறது இந்த நானும் ரவுடிதான் .

121017.jpg

நயன்தாரா படம் முழுவதும் வியாபித்துள்ளார். ராஜாராணி, மாயா, இப்படி நயன்தாராவின் நடிப்புக்கான மைல்கற்கள் லிஸ்டில் இந்தப் படத்தையும் இணைத்துக்கொள்ளலாம். ’கிஸ் பண்ணப் போறியா , அப்போ நான் சொல்றத செஞ்சிட்டு அப்பறம் கிஸ் பண்ணு’ என சொல்லி ரொமான்ஸ் உணர்வில் நெருங்கும் விஜய் சேதுபதியை குழப்பிவிடுவதும், அவ்வப்போது கத்த வைத்துவிட்டு அமைதியாக தரையைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு ’என்கிட்ட பேசினீங்களா சாரி லைட்டா காது, யார்கிட்டயும் சொல்லிடாதீங்க’ எனக் கெஞ்சுவதுமாய் நயன்தாராவின் நடிப்பு அடுத்தக் கட்டம் . இனி டப்பிங் பேசுவோருக்கும் வேலையில்லை. நயனின் குரல் அவரது டப்பிங் குரலை விடவும் நன்றாக இருக்கிறது.

விஜய் சேதுபதி பாண்டி பாத்திரத்தில் நயன்தாராவை நினைத்து உருகுவதும், அவரை ரசித்து ஏங்குவதுமாய் குமுதாவின் ஹேப்பிக்காக நடித்தவர், இந்தப் படத்தில் காதம்பரி(நயன்தாரா) ஹேப்பிக்காக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். காட்சிக்கு காட்சி இருவரும் கை கோர்த்து கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.இருவருக்கும் இடையில் அப்படி ஒரு பொருத்தம்.

ஆர்.ஜே.பாலாஜி அளவான டைமிங் காமெடிகள், பன்ச்கள் என தன் பங்கை படத்திற்கு சிறப்பாக அளித்துள்ளார். பார்த்திபன் படத்தின் மற்றுமொரு சிறப்புப் பாத்திரம். வில்லன் ரோலில் மீண்டும் ஒருமுறை மனதில் நின்றுவிட்டார்.

“ அடேய் நான் இப்படியெல்லாம் ஒளிஞ்சுக்கிட்டதே இல்லடா,

போங்கடா உங்கள மன்னிச்சுட்டேன்”,

என அட்ராசிட்டி அலப்பரையைக் கொடுத்திருக்கிறார். ராதிகா போலீஸ்  என்றாலும் அதைக் காட்டிலும் விஜய்சேதுபதிக்கு அம்மாவாக ‘என் புள்ள கொத்தமல்லிக் கொழுந்துடி எனச் சொல்லிக்கொண்டே சில காட்சிகளே வந்தாலும் பாராட்டுகளைப் பெற்றுவிடுகிறார்.ராகுல் தாத்தா பார்ப்பவர்கள் மனதில் நிற்கும் பிடித்தமான கதாப்பாத்திரம்.

121028.jpg

சிக்கலான கதையோ, மர்ம முடிச்சுகளோ, த்ரில் வேட்டைகளோ இப்படி எதுவும் கிடையாது. எனினும் எதார்த்தமான பாண்டிச்சேரி , சென்னை பின்னணியை அப்படியே வைத்துக்கொண்டு ஆக்‌ஷன் காமெடி, காதல் படம் கொடுத்துள்ள விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுகள் என்றாலும் முதல் பாதியில் இருந்த மெதுவான காட்சி ஓட்டத்தை குறைத்திருக்கலாம். பின்பாதி நல்ல வேகம் சீரியஸ் கலந்த காமெடிகள் என ஆரம்பித்த வேகத்தில் முடிந்துவிடுகிறது.

ஒரு பத்து செகண்ட் யோசிச்சா , விட்டுப்போயிடுவியா, போனா நாங்க விட்ருவமா. இப்படி காதல் ஆதங்கமான வசனங்கள் படம் முழுமைக்கும் பலம். அதற்கேற்ற அனிருத்தின் பின்னணி இசை. தங்கமே உன்ன நான் பாடல் அரங்கத்தை அதிரச் செய்துள்ளது. நீயும் நானும் பாடல் மென்மையான வருடல். எதார்த்தமான படத்திற்கு காட்சிகளை அழகாக படம்பிடித்துள்ளது ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு.

மொத்தத்தில் நயன்தாரா – விஜய்சேதுபதி கெமிஸ்ட்ரிக்காவே படத்தைக் பார்க்கலாம்.முக்கியமாக இளைஞர்கள் சாய்ஸ் ரகம் ’இந்த நானும் ரவுடிதான்’.

http://www.vikatan.com/cinema/article.php?aid=54046

  • தொடங்கியவர்

திரை விமர்சனம்: நானும் ரவுடிதான்

 
 
 
nanum_jpgr_2595622f.jpg
 

காவல் துறை ஆய்வாளர் மீனா குமாரிக்கு (ராதிகா) மகன் பாண்டியையும் (விஜய் சேதுபதி) காக்கிச் சட்டையில் பார்க்க ஆசை. மகனோ, ‘ரவுடியாக வேண்டும்’ என்னும் ‘உயர்ந்த’ லட்சியம் கொண்ட வர். நண்பர்களுடன் சேர்ந்து ‘நானும் ரவுடிதான்’ என்று சொல்லிக் கொண்டு திரிகிறார். செவித் திறன் குறைபாடுடைய காதம்பரியை (நயன் தாரா) பார்த்ததும் பாண்டிக்குக் காதல். அந்தக் காதலை ஏற்க காதம்பரி ஒரு நிபந்தனை விதிக்கிறார். தாதா கிள்ளி வளவனை (பார்த்திபன்) கொல்ல வேண்டும் என்பதுதான் அது. ரவுடிக்கான எந்தத் தன்மையும் இல்லாத விஜய் சேதுபதி ரவுடி ஆனாரா, இல்லையா, நயன்தாராவின் நிபந்தனையை ஏற்று வெற்றி பெற்றாரா, இல்லையா என்பது தான் கதை.

பாவனைகளிலேயே வாழும் மனிதர் களைப் பற்றிய பகடிதான் படத்தின் அடிநாதம். வாழ்வின் அபத்தத்தை அங்கதத்தின் மூலம் வெளிப்படுத்தும் நகைச்சுவையை திறமையாகப் பயன் படுத்தியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். விஜய் சேதுபதி குழு மட்டுமல்லாமல் அவர்களை மிரட்டும் அசல் ரவுடிகளும் கேலிப்பொருளாக் கப்படுவது சிறந்த உதாரணம். பெரிய தாதாக்களாகக் காட்டப்படும் பார்த்திபன், மன்சூர் அலிகானும் விலக்கு அல்ல. ஆனால் இந்த தாதாக்கள் இடையே நடக்கும் போட்டி, பொறாமையில் தெறிக்கும் வன்முறை வெறியையும் பதிவுசெய்திருக்கிறார். அங்கதக் காட்சிகளுக்கு நடுவே நயன்தாராவின் சோகத்தைச் சற்றும் மலினப்படுத்தாமல் கையாண்டிருப்பதும் பாராட்டத்தக்கது.

தன் மகனை போலீஸாக்க ராதிகா செய்யும் முயற்சிகள், ஆனந்தராஜ் கோஷ்டி - விஜய் சேதுபதி கோஷ்டியை எதிர்கொள்ளும் காட்சி, இந்த இரண்டு கோஷ்டிகளும் சேர்ந்து போடும் திட்டங்கள் ஆகியவை வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. செவித் திறன் குறைந்தவராக நயன்தாராவைக் காட்டி னாலும் அதில் கழிவிரக்கத்தை ஏற்றி விடாமல் இயல்பாகக் காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர். நயன் தாராவை ஒரு ரவுடி துன்புறுத்தும் காட்சியில் விஜய் சேதுபதி பாத்திரத்தின் தன்மை மாறுகிறது.

சாது நாயகனை ஒரே காட்சியில் வீரத் திருமகனாக மாற்றவே இதுபோன்ற காட்சிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படும். விக்னேஷ் சிவன் இதிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். காதலுக்காக நயன் தாரா நிபந்தனை விதிக்கும் காட்சியும் நிபந்தனையை விஜய் சேதுபதி ஏற்றுக் கொள்ளும் காட்சியும் நன்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. முத்தம் கொடுக்க வரும் காதலனிடம், காதலி நிபந்தனை விதிக்கும் காட்சியில் உதடுகளுக்கு மட்டும் குளோஸப் வைப்பதன் மூலம், வசனத்தின் வீரியத்தைத் துல்லியமாகக் காட்டிவிடுகிறார் இயக்குநர்.

நகைச்சுவை தாராளமாக இருந்தும் முதல் பாதி சற்று மந்தமாகவே நகரு கிறது. பார்த்திபனைக் கொல்ல எந்த ஏற்பாடும் இல்லாமல் நிராயுதபாணியாக நயன்தாரா வரும் காட்சியில் வலிந்து திணிக்கப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள்.

விஜய் சேதுபதி துறுதுறுவென இருக் கிறார். இதுவரை கிராமத்து இளைஞ னாக, லோக்கல் பையனாக வந்தவ ருக்கு மாடர்ன் இளைஞன் வேடம். அளவான வசனங்கள், அழகான மேக்கப் என பாத்திரத்துக்கு கச்சித மாகப் பொருந்திவிடுகிறார். வசன உச்சரிப்பிலும் தேறியிருக்கிறார். ரவுடி யாக இல்லாவிட்டாலும் ரவுடி போல பில்டப் கொடுப்பது, ரவுடியாவதற்கு ‘நான் கடவுள்’ ராஜேந்திரனிடம் பயிற்சி எடுப்பது, நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு தாதா அளவுக்கு திட்டம் போடுவது, காதலி நயன்தாராவுக்காக உருகி மருகுவது என அசத்தியிருக் கிறார். தன் பாத்திரத்தின் அடியோட்ட மான அப்பாவித்தனத்தை நன்கு புரிந்து கொண்டு வெளிப்படுத்தியிருக்கிறார்.

வயது ஆகஆக நயன்தாராவுக்கு அழகு கூடிக்கொண்டே போகிறது. பாத் திரத்தில் அப்படியே ஒன்றிவிடுகிறார். அப்பா உயிரோடு இருப்பதாக நினைத் துக் கொண்டிருக்கும்போது, அவர் இறந்த விஷயம் தெரியவருகிறது. அடக்க முடியாத அழுகையையும், நம்பிக்கை பொய்த்துப்போன விரக்தியையும் ஒருசேர வெளிப்படுத்தும் நயன்தாரா, நடிப்பில் சிக்ஸர் விளாசிவிடுகிறார். முதல்முறையாக சொந்தக் குரலில் பேசி நடித்திருப்பதும் நன்றாக உள்ளது.

பார்த்திபன் முழு நீள வில்லனாக வந்தாலும் அவருக்கே உரிய நக்கல், நையாண்டியுடன் கலக்குகிறார். ராதிகா, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், ஆர்ஜே பாலாஜி என ஒவ்வொரு பாத்திரமும் கச்சிதம். அவர்களும் தம் பங்கை நன் றாகவே செய்திருக்கிறார்கள். அனிரூத் இசையில் ‘கண்ணான கண்ணே’, ‘வரவா வரவா’ பாடல்கள் கேட்கும்படி உள்ளன.

நயன்தாராவை மட்டுமல்லாமல் புதுச்சேரி, வடசென்னை கடலோரப் பகுதிகளையும் அழகாகக் காட்டியிருக் கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ்.

‘அது ஏன் அப்படி? இது ஏன் இப்படி?’ என்று காரண காரியங்களையும் சாத்தியங்களையும் யோசிக்காமல் பார்க்கும்போது ரசிக்க வைக்கிறான் ரவுடி!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-நானும்-ரவுடிதான்/article7799770.ece?homepage=true

  • தொடங்கியவர்

'நானும் ரவுடிதான்' - இயக்குநர் பகிரும் 7 தகவல்கள்

 

 
nayan_2403414f_2598951f.jpg
 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'நானும் ரவுடிதான்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். லைக்கா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படம் உருவாக்கத்தில் நிகழ்ந்தவை குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவம் பகிர்ந்தவை:

* இந்தக் கதையின் நாயகனாக 18 வயது இளைஞன் நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என தீர்மானித்தேன். பிறகு, சூழல் எல்லாவற்றையும் மாற்றியது.

* முதலில் இந்தக் கதையில் அனிருத் நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால், இசையில் மட்டுமே முழு கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்ததால் அவர் நடிக்க முன்வரவில்லை.

* கதையின் நாயகி நயன்தாரா என்பது முதலிலேயே முடிவாகிவிட்டது. ஏற்கெனவே இக்கதை விஜய் சேதுபதிக்கு தெரியும் என்பதால் அவரும் 2 புதுமுகங்களை சிபாரிசு செய்தார். அதுவும் சரியாக அமையவில்லை. கெளதம் கார்த்திக்கும் பரிசீலனையில் இருந்தார்.

* தனியார் தொலைக்காட்சி விருது வழங்கு விழாவில் விஜய் சேதுபதி - நயன்தாரா பேசியதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தனுஷ் சாரும் அந்த நேரத்தில் தயாரிப்பதாக முன்வந்தார். உடனே விஜய் சேதுபதி உள்ளிட்ட அனைவருமே இப்படத்துக்குள் வந்தார்கள்.

* படத்தின் டப்பிங்கிற்காக நயன்தாரா நிறைய கஷ்டப்பட்டார். முதல் முறையாக டப்பிங் பேசுவதால் சரியாக இருக்க வேண்டும் என நிறைய மெனக்கெட்டார். அழுதுகொண்டே பேசும் காட்சிக்கு கிளசிரின் போட்டு அழுதுகொண்டே பேசினார். படத்தில் எப்படி உட்கார்ந்து கொண்டு வசனங்கள் பேசி இருக்கிறாரோ, அதேபோல டப்பிங் தியேட்டரிலும் உட்கார்ந்து கொண்டு பேசினார். அவருடைய அர்ப்பணிப்பு பார்த்து நான் வியந்துவிட்டேன்.

 

* தனுஷுக்கு இப்படத்தை தயாரிக்கும் முன்பு ஒரு வரிக் கதைதான் சொன்னேன். அதற்கு பிறகு அவர் எதிலுமே தலையிடவில்லை. படம் முழுமையாக முடிந்தவுடன் பார்த்துவிட்டு, மிகவும் பாராட்டினார். ரொம்ப நன்றாக வந்திருக்கிறது, இப்படியிருக்கும் என எதிர்பார்க்கவில்லை என வியந்தார்.

* இதுவரை தான் நடித்து வெளியான படங்கள் எதையுமே நயன்தாரா திரையரங்கிற்கு சென்று பார்த்ததே இல்லையாம். அவர் திரையரங்கிற்கு சென்று பார்த்த முதல் படம் 'நானும் ரவுடிதான்'தானாம்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/நானும்-ரவுடிதான்-இயக்குநர்-பகிரும்-7-தகவல்கள்/article7810001.ece?homepage=true&ref=tnwn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.