Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தபாயவின் நிறுவனம் ஆயுத விற்பனையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவின் நிறுவனம் ஆயுத விற்பனையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது: தமிழில் குளோபல் தமிழ்செய்திகள்:-

09 நவம்பர் 2015

கோத்தபாயவின் நிறுவனம் ஆயுத விற்பனையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது:  தமிழில் குளோபல் தமிழ்செய்திகள்:-
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தனியார் துறைநிறுவனமான ரக்னா ஆரக்சக லங்கா நிறுவனத்திடம் காணப்பட்ட ஆயுதங்களை கணக்கிலெடுத்த வேளை இலங்கையில் திட்டமிடப்பட்ட முறையில் ஆயுதவியாபாரம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
 
குறிப்பிட்டநிறுவனங்களிடம் உள்ள 320 ஆயுதங்களில் தொடர் இலக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதும் இந்த கணக்கெடுப்பின்போது தெரியவந்துள்ளது,ஆயுதங்களின் உண்மையான உரிமையாளரை கண்டுபிடிப்பதை தடுப்பதற்காகவே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
 
மேலும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள அவன்ட்கார்டே கப்பலில் மேலதிக ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன.
 
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட ரக்னா ஆரக்சக லங்கா நிறுவனத்தினால் காலியில் உள்ள ஆயுத களஞ்சியத்தில் இந்த ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.
 
இதேவேளை அவன்ட்கார்டே கப்பலில்  கப்பலில் தொடர் இலக்கங்கள் மாற்றப்பட்ட 59 ஆயுதங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
ஆயுதங்கள் குறித்த உரிய ஆவணங்கள் இன்றி, செங்கடல் ஊடாக பயணம்செய்ததாக அதிகாரிகள் தெரிவிக்கும் அவன்ட்கார்டே கப்பலில் பொலிஸார் தேடுதல் நடத்திய பின்னர் ஆயுதங்கள் குறித்த கணக்கெடுப்பு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
அவன்ட் கார்டேயின் சட்டத்தரணியான பாதுகாப்பு அமைச்சர் திலக்மாரப்பன, குறிப்பிட்ட நிறுவனத்தின் செயற்பாடுகளில் தவறில்லை என பாராளுமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் ரக்னா ஆரக்சக லங்காவுடன் இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
குறிப்பிட்ட துப்பாக்கிகளின் தொடர் இலக்கங்களில் ஏன் மாற்றம் செய்யப்படவேண்டும் என அதிர்ச்சி வெளியிட்டுள்ள அதிகாரிகள், சில துப்பாக்கிகளில் தொடர் இலக்கங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன, ஆயுதங்களின் உண்மையான உரிமையாளரை கண்டுபிடிப்பது கடினமாகவுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்,
 
மேலும் இந்த அயுதங்கள் எதற்காக பயன்படுத்தப்பட்டன என்பது தெரியமாலுள்ளது. இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ ஏதாவது குற்றச்செயல்களிற்காக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பதும் முக்கியகேள்வியாக காணப்படுகின்றது.
 
மிதக்கும் ஆயுத களஞ்சியங்களிற்கு சொந்தமான அவன்ட்கார்டே நிறுவனம் ரக்னா ஆரக்சக லங்கா நிறுவனத்திடமிருந்தே ஆயுதங்களை பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஏற்பாட்டிலேயே இந்த கூட்டு முயற்சி ஆரம்பமாகியது.
 
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் அவன்ட்கார்டே நிறுவனத்தின் கப்பலில் காணப்பட்ட 816 ஆயுதங்களில் 203 ஆயுதங்களே ரக்னா ஆரக்சக லங்காவினுடையது என தெரியவந்துள்ளது. ஏனையவை மர்மமான இடத்திலிருந்து வந்த ஆயுதங்கள்.ஏனைய 613 துப்பாக்கிகளும் இலங்கை அரசாங்கத்திற்கோ அல்லது அதன் முகவர் அமைப்புகளிற்கோ சொந்தமானவையல்ல.
 
ஆயுதமேந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகள்( சீ மார்சல்) அவர்களது ஆயுதங்களை கப்பலிலேயே விட்டுவிட்டு செல்வது வழமை. ஆனால் அவ்வாறனா கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பிலேயே தரித்து நிற்கும்.
 
நாடொன்றின் கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு அந்த கப்பல் விசேட அனுமதியை பெறவேண்டும். அவன்ட் கார்டே கப்பலில் உள்ள ஆயுதங்கள் வெளிநாட்டு சீ மார்சல்களுடையவையா என்பது தெரியவில்லை.
 
ஆனால் ஆனால் துப்பாக்கிகளுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு குறிப்பிட்ட கப்பலிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்கிறனர் பொலிஸார்.
 
குறிப்பிட்ட கப்பல் ஆயுதங்களுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதற்கான அனுமதியை கொண்டிருக்கவில்லை என கடற்படையினரும் தெரிவிக்கின்றனர்.
 
ஓக்டோபர் 5 ம் திகதி கடற்படையினர் இந்த கப்பலை இடைமறித்து சோதனையிட்ட பின்னரே பாதுகாப்பு அமைச்சசு அனுமதிகடிதத்தை வழங்கியுள்ளது.
 
இதேவேளை பாதுகாப்பு அமைச்சக அதிகாரி,குறிப்பிட்ட கப்பலிற்கு அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டப்படும் மேலதிக செயாளர்,ஆகியோர் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
 
எனினும் முன்னைய அரசாஙகத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் தற்போதைய அமைச்சர்கள் சிலரிடமிருந்து குழப்பமான சமிக்ஞைகள் வெளியாகின்றன.
 
தற்போதைய அரசாங்கத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆரம்பித்த ரக்னா ஆரக்சகா லங்கா, அவன்ட்கார்டே நடவடிக்கைகள் சட்டபூர்வமானவை என தெரிவித்து வருகின்றனர்.
 
 பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரட்ண ரக்னா ஆரக்சகா லங்கா தொடர்பில் பிழையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக விசாரணை ஆணைக்கு  முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
 
ஆயுதங்கள் அனுமதிப்பத்திரமின்றி வழங்கப்பட்டன. இது ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளிற்கு முரணாணது என்றார் அவர். ரக்னா ஆரக்சகா லங்காவிற்கு 3473 ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 89 ஆயுதங்கள் மாத்திரமே உரிய அனுமதிப்பத்திரங்களுடன் வழங்கப்பட்டுள்ளன, என அவர் தெரிவித்துள்ளார்.
 
ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஸ்திரதன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அவன்ட் கார்டே விவகாரத்தினை இந்த ஆயுதகணக் கெடுப்பு  இன்னமும் நெருக்கடியானதாக மாற்றியுள்ளது.
 
தேசிய  பாதுகாப்பு அடிப்படையில் பார்க்கும்போதும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினால் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சுவதற்கு இடமுண்டு.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125732/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.