Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரீஸில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பலி 140-ஆக அதிகரிப்பு

Featured Replies

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் | படம்: ராய்ட்டர்ஸ்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் | படம்: ராய்ட்டர்ஸ்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் பல இடங்களில் நடத்திய தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து பிரான்ஸில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டு அதிபர் ஹாலந்தே பிறப்பித்தார். மேலும், பிரான்ஸ் எல்லைகளில் சீல் வைத்து பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு பாரீஸில் உள்ள கால்பந்து மைதனாத்தில் பிரான்ஸ் - ஜெர்மன் அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே இரண்டு இடங்களில் குண்டு வெடித்ததாகத் தெரிகிறது. அசோசியேடட் பிரஸ் செய்தியாளர் ஒருவர் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததை தான் கேட்டதாகக் கூறியுள்ளார்.

கால்பந்து நிகழ்ச்சியைக் காண மைதானத்தில் அதிபர் ஹாலந்தேவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிணைக் கைதிகள் விடுவிப்பு:

இதேபோல் பாரீஸில் உள்ள பட்டாக்லான் திரையரங்கிலும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்களில் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு, பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாரும் பொறுப்பேற்கவில்லை:

பாரீஸ் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே ட்விட்டர் தளத்தில் ஜிகாதிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக பிரான்ஸ் படைகள் தாக்குதல் நடத்தி வருவதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.

ஒபாமா கண்டனம்:

பாரீஸ் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒபாமா செய்தியாளர்களி சந்திப்பின்போது, "பயங்கரவாதிகள் மீண்டும் ஒருமுறை அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் பிரான்ஸ் மீதானது மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான தாக்குதல்.

இத்தருணத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஹாலந்தே மிகவும் பரபரப்பாக இருப்பார் என்பதால் இப்போதைக்கு நான் அவருடன் தொலைபேசியில் பேசுவதில்லை என முடிவெடுத்துள்ளேன்.

இருப்பினும், பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து நீதியை நிலைநாட்ட அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது" என்றார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம்

பாரீஸில் நடந்துள்ள பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரான்ஸ் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். பிரான்ஸுக்கு இந்தியா துணை நிற்கும். தாக்குதலில் சிக்கியவர்கள் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Paris_2_2620146a.jpg

பாரீஸில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின் அருகே போலீஸார் அணிவகுப்பு: படம்: ராய்ட்டர்ஸ்.

ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்:

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், "பாரீஸில் பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதற்கு என் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன், பட்லாகா தியேட்டரின் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி பொது மக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி கண்டனம்:

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கால்பந்து மைதானம் உட்பட பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரீஸில் இருந்து வந்துள்ள பயங்கரவாத தாக்குதல் செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அச்சுறுத்துவதாகவும் உள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மோசமான தருணத்தில் இந்தியா பிரான்ஸுக்கு துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இந்திய தூதரகம் உதவி எண் அறிவிப்பு

பிரான்ஸில் உள்ள இந்தியர்கள் உதவிக்காக இந்திய துணைத் தூதரகம் சார்பில் 0140507070என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் பக்கம் துவக்கம்:

பாரீஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் தங்கள் உறவுகள், நட்புகள் பத்திரமாக இருக்கின்றனரா என்பது குறித்த தகவல்களைப் பறிமாறிக் கொள்ள ஏதுவாக ஃபேஸ்புக் நிறுவனம் பிரத்யேக பக்கத்தை உருவாக்கியுள்ளது. Paris Terror Attacks என்ற பக்கத்தை ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அதில் "Mark them safe if you know they’re OK" என்ற ஒரு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை பாரீஸ் மக்கள் பயன்படுத்தி உறவுகளுக்கு தங்களது நலனையும், தங்கள் உறவுகள் நலனையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த ஜனவரியிலும் தாக்குதல்:

பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ என்ற வார பத்திரிகை அலுவலகத்தினுள் கடந்த ஜனவரி மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அலுவலகத்துக்குள் புகுந்த முகமூடி அணிந்த 3 நபர்கள் அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியாக சென்று கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் பத்திரிகையின் அசிரியர், 4 கார்ட்டூனிஸ்டுகள் உட்பட 12 பேர் பலியாகினர்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%9

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.