Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

30 வருடகால யுத்தம் முடிந்துவிட்டது: இரண்டு உயிர்களை தாரைவார்த்தும் நெல்வேலிக்குளம் மக்களின் அவலம் தீரவில்லை!

Featured Replies

 

யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களாகியும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை. அதிவேக நெடுஞ்சாலைகள், யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் என அளவில்லாமல் வாய் கிழியும் அளவுக்கு மேடைகளில் பேசிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் கண்களுக்கு வவுனியா, நெல்வேலிக்குளம் மக்களின் அவலம் எட்டவில்லை.

இந்தப் பெரும் தலைவர்களின் அசமந்தப் போக்கினால் இரு சிறார்களின் உயிர்களை தாரை வார்த்துள்ளனர் இக்கிராம மக்கள். தற்காலிக வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து சிறுவர் ஒருவர் மரணம். கட்டுக்கட்டப்படாத கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் மரணம் என அடுத்தடுத்து இரு உயிர்கள் பலியாகியுள்ளன.

இரண்டு உயிர்கள் பறிபோயுள்ள நிலையிலும் இவர்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் தேடிப்பார்க்கவோ அல்லது இவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யவோ இதுவரை எவரும் முன்வரவில்லை. இப் பகுதியில் இன்று வரை கையில் குப்பி விளக்குடன் மழை பெய்யும் நேரங்களில் ஒழுக்கில்லா இடம் தேடி படிக்கும் நிலையில் தான் இக்கிராம சிறுவர்கள் உள்ளார்கள்.

வவுனியா பிரதேச செயலகர் பிரிவில் உள்ள ஓமந்தை, மருதமடு கிராம அலுவலர் பிரிவின் சிறிய கிராமமே நெல்வேலிக்குளம். விவசாயத்தைப் அடிப்படையாக கொண்ட இக் கிராமத்தில் நெற் கதிர்கள் வேலியை மூடி வளர்ந்து சாய்ந்திருந்ததால் அன்று வெள்ளையர்களால் நெல்வேலிக்குளம் என அழைக்கப்பட்டது என்பது வரலாற்றுக்கதை.

  • 20150904_131924

விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியுள்ள இம் மக்கள் யுத்த சூழ்நிலையினால் 1997 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி இப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். அன்று முதல் 2009 வரை யுத்த சூனியப் பிரதேசமாக ஓமந்தை முன்னரங்க காவல் நிலையை இக் கிராமம் கொண்டிருந்தது. இதனால் இக் கிராமத்தின் கிணறுகள், கட்டடங்கள் அனைத்துமே முற்றாக அழிவடைந்து போரின் வடுக்களாகவே இன்றும் உள்ளன.

இந் நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு இம் மக்கள் அடர்ந்த வனமாக இருந்த நெல்வேலிக்குளம் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டனர். தமது வீடு இருந்த இடங்களையும், கிணறுகள் இருந்த இடங்களையும் தேடிக் கண்டுபிடித்து தற்காலிக கொட்டகைகள் அமைந்து 40 குடும்பங்கள் வரை குடியேறினர். விரைவில் வீட்டுத் திட்டம், மின்சாரம் என அனைத்தும் செய்து தரப்படும் என அப்போது கூறப்பட்ட போதும் அவை இன்று வரை இம் மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

ஆறு வருடங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றப்பட்ட தற்காலிக வீடுகள் தற்போது மழையைத் தாக்கிப் பிடிக்க முடியாத நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. அந்த ஓட்டைக் கொட்டகைக்குள் இருந்து தான் மழை ஒழுக்குப்படாத இடம்தேடி மாணவர்கள் குப்பி விளக்குடன் கல்வி கற்கும் அவல நிலை தொடர்கிறது. பட்டி தொட்டியெங்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதும் இக் கிராமத்திற்கு மட்டும் அந்த கொடுப்பனை இன்னும் இல்லை. மின்சாரம் வழங்குமாறு இம் மக்கள் தொடர்ச்சியாக கேட்டு வந்த நிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் இப் பகுதியில் மின்சாரத் தூண்கள் போடப்பட்டு விட்டன. ஆனால் மின் விநியோகம் கொடுக்கப்படவில்லை. மின்சாரம் இல்லாத தூண்கள் காட்டில் இருந்து வரும் குரங்களின் விளையாட்டு கம்பங்களாக மாறியிருக்கின்றன.

  • 20150904_132431

யுத்தத்தின் கொடூரத்தை முழுமையாக சுமந்த கிராமம் எமது கிராமம். ஆனால் எமக்கு ஒரு வீட்டுத் திட்டமோ, மின்சார வசதியோ தரப்படவில்லை. யுத்ததத்தால் பாதிப்படையாத பல கிராமங்களுக்கு இவை அனைத்தும் வழங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகின்ற நிலையில் எமக்கு மட்டும் ஏன் இந்த பராபட்சம் என யுத்தத்தின் கொரூரத்தை முழுமையாக சுமந்த இம் மக்கள் கண்ணீர் விடுகின்றனர்.

வடக்கின் வசந்தம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் மின்சாரம் பெறுவதற்கு முன்னர் விண்ணப்பிக்காதவர்கள் 23,000 ரூபாய் வரை பணம் செலுத்தினால் தான் மின்விநியோகம் வழங்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். தூண் நிறுவிய பின்னர் நாம் விண்ணப்பத்தை கொடுக்கச் செல்லும் போது பணம் கேட்கிறார்கள். முன்னர் விண்ணப்பதை தருமாறு அவர்கள் கோரவில்லை. இலவச மின் விநியோகம் என கூறிவிட்டு ஆட்சி மாற்றத்தின் பின் எம்மிடம் பணம் பறிக்கப் பார்கிறார்கள். நாம் உழைத்து மின்சாரம் பெறுவது என்றால் இன்னும் கொஞ்சக் காலம் நாம் இருட்டில் தான் இருக்க வேண்டும் என்கின்றனர் இம் மக்கள்.

இங்குள்ள மக்களில் பலருக்கு நுளம்புகள் குத்தாத வகையில் மலசலகூடம் கட்டிக் கொடுக்கப்பட்ட போதும் ஏனைய அடிப்படை வசதிகள் இன்று வரை கேள்விக்குறியே? வீடுகள் இல்லாது தற்காலிக ஓட்டைக் கொட்டில்கள் மட்டும் இருப்பதால் விளைந்த நெல்லினை களஞ்சியப்படுத்தக் கூட முடியாத நிலையில் இவர்கள் வாழ்கின்றனர். அரசாங்கமும் ஒருவரிடம் இருந்து 2,000 கிலோ நெல்லினை பெற்றுக் கொள்வதாலும், அதையும் களஞ்சியப்படுத்த வசதி இல்லை எனக் கூறி கொஞ்சம் கொஞ்சமாக பெறுவதாலும் அவ்வப்போது பெய்யும் மழைக்குள் நெல்லினை வைத்திருக்க முடியாது குறைந்த விலைக்கே தனியாருக்கு கொடுக்க வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

  • 20150904_134720

இதனால் கஸ்ரப்பட்டு செய்த விவசாயத்தில் கூட இலாபம் பெற முடியாத நிலையில் தனியாருக்கு உழைத்து கொடுக்கும் நிலையே தொடர்வாதாக இம் மக்கள் கூறுகின்றனர்.

கடந்த காலங்களில் பெய்த மழைக்கு இடம்பெயர்ந்து பாடசாலையில் இருந்த போது அரசியல்வாதிகள் சிலர் சென்று இம் மக்களை பார்வையிட்டனர். அதன் பின் தேர்தலின் போதே அந்த அரசியல்வாதிகள் இம் மக்களை சந்தித்தனர். இந்த நிலை ஏன்…? இவர்கள் இக் கிராம மக்களுக்கு இவற்றை பெற்றுக் கொடுக்க முடியாதா..? என்பதெல்லாம் இம்மக்களிடம் எழும் வினாக்கள்.

எனவே, மக்கள் இவ்வாண்டு தமது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜனவரி 8 ஆம் திகதியும்இ ஓகஸ்ட் 17 ஆம் திகதியும் வாக்களித்துள்ளார்கள். அதன் மூலம் எதிர்பார்த்த வெற்றியையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். மக்கள் தமது கடமையை செய்து விட்டார்கள். ஆனால், இந்த மக்களின் ஏக்கத்தையும் அவலத்தையும் போக்க அரசியல்வாதிகள்இ மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

http://vannimedia.com/site/news_detail/1016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.