Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆகமம் யாது?? என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆகமம்

ஆர் வீட்டு அப்பன் சொத்து?
கோயில்களைக் கட்டுவது
படிமைகளை நிறுவுவது
வழிபாடு நடத்துவது
இவை அனைத்தும் ஆகமங்களின் படி இருக்க வேண்டும்
என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியிருக்கிறது.
ரஞ்சன் கோகாய்
என் வி இரமணா என்ற
இரு நீதியரசர்கள் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக் கிறார்கள்.
இந்த இரு மேதைகளும் ஆகம விதிகளை எந்தச் சட்டக் கல்லூரியில் படித்தார்கள் என்று தெரியவில்லை.
தமிழர்களை இழிவு படுத்தும் தீர்ப்பு இது.

Agamas ie .treatises pertaining to matters like
Construction of temples
Installation of idols
Conduct of worship of the deity
என்று பட்டியலிடுகிறது.
உண்மையில் ஆகமங்களின் படி கோயில் கட்ட முடியுமா ?
ஆகமங்களின் படி சிலை வடிக்க
முடியுமா ?
வாய்ப்பே இல்லை.
இது அந்தக் கால மோசடி முயற்சி.
பெருந்தச் சு நூல் மரபின் படி தான்
கோயில் கட்டப்பட்டு வருகிறது.
ஒவிய நூல் மற்றும் படிமக் கலை நூல் மரபுகளின் படி சிலை வடிக்கப் படுகிறது.
ஆக மங்கள் இவற்றைக் களவாடி மொழிமாற்றம் செய்து எழுதிக் கொண்டன.
இவை மட்டும் தானா ?
கீற்றுக் கொட்டகை கட்டுவது பற்றிக் கூட எழுதி வைத்துள்ளனர்
எங்கே ஆக ம விற்பன்னர்களிடம் ஒரு கொச்சைக் கயிறைக் கொடுத்து ஓரே ஒரு சுருக்குப் போடச் செய் யுங்கள் பார்க்கலாம்.
இன்றும் ஆகம எழுத்தர்கள் தொடர்ந்து தொழில் செய்தால்
அணுவைப் பிளப்பது பற்றியும்
ஏவுகனை செலுத்துவது பற்றியும் கூட எழுதிச் சேர்த்துக் கொண்டு
இவை இவை யெல்லாம் ஆக மத்தின் படி தான் என்று அடம் பிடிப்பார்கள்.
இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்கத் தமிழர்கள் ஏமாளிகள்.

மஞ்சு விரட்டைத் தடை செய்த போது கோட்டை விட்டது
தமிழர்களின் கையாலாகாத் தனம்.
இன்று கோயில் களைக் கொள்ளையடிக்கக் கிளம்பி விட்டது இந்த
உச்ச தம ந்யாயாலய
அது என்ன
சவுச் சாலய மோ
இந்திக் காரன் என்ன சொல்ல
வருகிறானோ தெரியவில்லை.

ஆக ம நூல் மரபு
பழந்தமி ழில் இருந்தது உண்மை..
ஆனால் அது மீட்க முடியாத அளவுக்குச் சிதைக்கப் பட்டு விட்டது.
மீட்கும் ஆற்றலும் தமிழர் அல்லாத வர் களுக்கு வாய்க்காது..
இன்று வடமொழியில் உள்ள
சைவ ஆகமங்கள்
பாஞ்ச ராத்ர ஆகமங்கள்
வைகான ச ஆகமங்கள்
ஜினா க மங்கள்
பவுத்த . ஆகமங்கள்
அனைத்தும் கோயில் கட்டுமானங்களையும்
அழகிய பாவைச் சிலைகளையும்
எந்த உள்ளூர் அ.ரசுக்கும் எதிராக
ஏவல் செய்வினைக்குப் பயன்படுத்தும்
பில்லி சூனிய உரை நூல்கள்
அன் றி வேறில்லை.
இந்த ஆகமப் பம்மாத்து வேலை எதுவும் இனிமேல் எடுபடாது.

இதைச் சொல்ல இவனுக்கு என்ன
தகுதி என்ற ஐயம் ஏற்படுவோருக்காக இத் தகவல்.
திருவாடானை ஐ யாமணி சிவம் அவர்களிடம் சைவ ஆகமங்கள் பற்றியும்
பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு
நிறுவனத்தின் வரதாச்சாரியார் அவர்களிடம் பாஞ்ச ராத்ர ஆகமங்கள் பற்றியும்
மீஞ்சூர் சேஷ பட்டர் அவர்களிடம்
வைகான ச ஆக மங்கள் பற் றியும்
திருச் சிற் றம்பலம் மு அருணாச்சலம் ஐயா அவர்களிடம் ஆக ம வரலாறு பற்றியும்
காரைக்குடிக் கம்பன் அடிப்பொடி
ஐயா சா. கணேசன் அவர்களிடம் தமிழ் மரபு பற்றியும் இளங்கலைக்
கோயிற் கட்டடக் கலைப் படிப்பில் பாடம் கேட்ட ஏழு மாணாக்கருள்
இந்த த் தென்னன் மெய்ம்மனும் ஓருவன்'
இன்று அருச்சகர்களை விட மறுக்கிறார்கள் என்பது தான்
தமிழக அரசுக்குப் புரிகிறது.
கோயிற் கட்டடக் கலை ஞர்களையே விடவில்லை என்பது
தெரியாதா ?
இருக்கட்டும் இருக்கட்டும்.

இந்தத் தீர்ப்பை அறிஞர்கள் நன்கு அலசும் போது உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்..
பிறப்பு அடிப்படையில் எந்த அறிவுத் துறையும் தமிழர் மரபில் இல்ல வே இல்லை.
இந்த வழக்கைத் தொடுத்தவர் களும் தீர்ப்புச் சொன்னவர்களும்
தமிழ்ர்களே இல்லை.

அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவது சமூக நீதி
என்று கூறும் திராவிடம்
ஏமாற்றுகிறது.
நான் திருட மாட்டேன்.
எவன் திருடினாலும் பங்கு கேட்பேன் என்று கூறுவது போல உள்ளது.
கடவுளே இல்லை பிறகு எதற்கு அருச்சனை ?

உண்மையில் அழகிய திரு மேனிப் படிமை களின் மீது இனிமையான
தமிழ்ப் பாக்களால் திருப் பதியம் விண்ணப்பம் செய்த
யாக்கை மாநூல் மரபு வழியே
ஏதாவது நன்மை செய்ய எவரேனும் விரும்பினால்
ம ரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் முன்னெடுக்கும்
தமிழ்ப் புத்தாண்டு மீட்பு முயற்சியில் தம்மை இணைத்துக் கொண்டு அடுத்த தலைமுறை அடிமைப் படாது இருக்க
அடிப்படை வேலை
செய்யலாம் .

 

ஆகமங்கள் என்பது கோயில் கட்டுவதா??? இந்திய உச்ச நீதிபதி யாரிடம் ஆலோசித்தார்???? கட்டடக்கலை நிபுணர்கள் யாரையெல்லாம் கலந்தாலோசித்தார். வெளியிட்டால் மக்கள் புரிந்து கொள்ளலாமே????

எந்த ஆகம ஆட்கள் அவர்களுக்கு வழிகாட்டினார்கள்????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.