Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னை அருகே கார்- லாரி பயங்கர மோதல்: 10 பேர் நசுங்கி சாவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அருகே கார்- லாரி பயங்கர மோதல்: 10 பேர் நசுங்கி சாவு

சென்னை, டிச.16-

16accidentqt2.jpg

சென்னை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டதில், 10 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். அவர்களில் 9 பேர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

நெஞ்சை உருக்கும் இந்த கோர விபத்து, சென்னையை அடுத்த கோவளம் அருகே நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், வேர்கோடு இந்திரா நகரை சேர்ந்தவர், அந்தோணியார் அடிமை. அவருடைய மைத்துனர், ராஜசேகர். தங்கச்சி மடத்தை சேர்ந்த இவருடைய தம்பி ரமேசுக்கு, கொரியா நாட்டில் வேலை கிடைத்துள்ளது. இதற்காக நேற்று, அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார்.

அவரை வழியனுப்புவதற்காக, ராஜசேகர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காரில் சென்னை வந்து இருந்தனர். ரமேஷ் விமானத்தில் புறப்பட்டுச்சென்றதும், நேற்று பிற்பகல் அவர்கள் அதே காரில் ராமநாதபுரத்துக்கு சென்று கொண்டு இருந்தனர். மகாபலிபுரம் வழியாக செல்ல அவர்கள் விரும்பினார்கள். தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த வீரபோஸ் (வயது 31) என்ற டிரைவர் காரை ஓட்டினார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது, வட நெம்மேலி முதலைப்பண்ணை அருகில் கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு, டிப்பர் லாரி கோவளம் நோக்கி வந்து கொண்டு இருந்தது.

கோவளம் சோதனைச்சாவடி அருகே, அந்த லாரியும் காரும் நேருக்கு நேர் பக்கவாட்டில் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று காருக்குள் சிதைந்து கிடந்தவர்களை தூக்கினார்கள்.

இந்த விபத்தில், காரில் பயணம் செய்தவர்களில் 9 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். அவர்களில் 3 பேர் பெண்கள். 3 பேர் குழந்தைகள். 6 பேர் படுகாயம் அடைந்தனர். கார் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

லாரியில் இருந்தவர்களில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் கேளம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

காயம் அடைந்த அனைவரும் உடனடியாக கானத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

பலியானவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. அந்தோணியார் அடிமை (வயது 45).

2. ராஜசேகர் (35) அந்தோணியார் அடிமையின் மைத்துனர்.

3. காட்சன் (8).

4. டெரிக் (4) இருவரும் அந்தோணியார் அடிமையின் மகன்கள்.

5. இம்மாகுலேட் (25) கன்னியாஸ்திரியான இவர், அந்தோணியார் அடிமையின் தங்கை.

6. விமலம்மா (30).

7. இருதயமேரி (50).

8. வின்சென்ட் (36).

9. மெமோயன் (3).

10. லாரியில் பயணம் செய்த ஏழுமலை. வயது 35. காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த கடல மங்கலத்தை சேர்ந்தவர்.

காயம் அடைந்தவர்களில், மெல்பா, கிளாடினா(13), கோல்டா(35) அவருடைய மகன் ஐசக் (3), ஆகியோர், கானத்தூர் தனியார் ஆஸ்பத்திரியிலும் ஸ்டெல்லா(50), ஜெஸ்மி (22) இருவரும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காயம் அடைந்த கோல்டா, விபத்தில் பலியான வின்சென்டின் மனைவி ஆவார்.

லாரியில் வந்த டிரைவர் ராமமூர்த்தி (ஈஞ்சம்பாக்கம்), காயமின்றி தப்பினார். ரவி (உத்திரமேரூர்), பழனி (ஈஞ்சம்பாக்கம்), சுந்தரம் ஆகிய 3 பேர் காயம் அடைந்து கானதத்தூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 3 வயது சிறுவன் ஐசக், விபத்து பற்றி எதுவும் தெரியாமல், "அம்மா கால் எரியுதே, எல்லோரும் எப்போ வருவார்கள்?'' என்று கேட்டது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமல்ராஜ், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இந்த விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவளம் கடலோர பாதுகாப்பு படை செக்போஸ்ட் அருகே வந்த போது, முன்னால் போய் கொண்டிருந்த பஸ்சை முந்தி செல்வதற்காக டிரைவர் காரின் வேகத்தை கூட்டி இருக்கிறார். அவர் பஸ்சை முந்தி சென்று கொண்டிருக்கும் போதுதான் எதிரே வந்த டிப்பர் லாரி அவருக்கு தெரிந்தது. உடனே விபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள காரை ரோட்டுக்கு வெளியே வலதுபக்கமாக கொண்டு செல்ல முயற்சித்தார். அதேநேரத்தில் திடீரென எதிரே கார் வந்ததும், லாரியை நிறுத்த லாரி டிரைவர் முயற்சித்தார்.

ஆனால் முடியவில்லை. இதனால் லாரியும், காரும் நேருக்கு நேர் இடதுபுற பக்கவாட்டில் வேகமாக மோதிக்கொண்டன. இதில் கார் ரோட்டில் இருந்து 20 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டது.

இதனால் வலப்பக்கம் இருந்த இருவாகன டிரைவர்களும் காயமின்றி தப்பினர்.

இந்த விபத்து நடந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கூறியதாவது:-

வீட்டில் இருந்த போது திடீர் என சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த போது, கார் சுக்கு நூறாக உடைந்து கிடந்தது. காருக்குள் இருந்தவர்களில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பிணமாக கிடந்தார்கள். இந்த பகுதியில் இதுவரை 4, 5 முறைகள் இது போல் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளுக்கு கடலோர பாதுகாப்பு படையினரால் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் தான் காரணம். எதிர் எதிரே வரும் வாகனங்கள் வேகத்தடுப்பு அருகே வரும்போது, முந்தி சென்று விடலாம் என்ற தவறான எண்ணத்தில் வேகமாக வருகிறார்கள்.

அப்போதுதான் விபத்து ஏற்படுகிறது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் வைக்கும் வேகத்தடுப்புகளுக்கு இடையே உள்ள தூரத்தையாவது அதிகரிக்கவேண்டும் அப்போதுதான் விபத்துகள் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.