Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் அவலமும் கோரமும் தொடர்கிறது உடன் பிறப்புக்களையும் உறவுகளையும் இழக்கிறோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் அவலமும் கோரமும் தொடர்கிறது உடன் பிறப்புக்களையும் உறவுகளையும் இழக்கிறோம்

[saturday December 16 2006 06:32:49 PM GMT] [virakesari.lk]

vakaraiavalamwe7.jpg

கிழக்கில் தொடரும் அவலமும் அழிவும் கோரமான முறையில் கடந்த ஏப்ரல் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் ஆரம்பமானது. அப்போது ஆரம்பமான அலைச்சலும் அவலமும் கோரமும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான எமது உடன் பிறப்புக்களையும் உறவுகளையும் இழந்துள்ள÷õம். இந்தப் பயங்கரவாதத்துக்கு முடிவு வராதா என்றுதான் பலரும் ஏங்கித்தவிக்கின்றனர்.

இவ்வாறு வாகரையில் இருந்து கடல் வழியாக வாழைச்சேனைக்கு தப்பிவர முயன்று கடலுடன் சங்கமமான தமிழ் உடன்பிறப்புக்கள் நிலைமை பற்றி கருத்து வெளியிட்ட மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த அரச ஊழியர் ஒருவர் தெரிவித்தார்

அவர் தொடர்ந்து கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி மூதூர் கிழக்கில் உள்ள சம்பூர் பகுதி மீது கடல், தரை, ஆகாயமென மும்முனைகளில் இருந்தும் முப்படைகளின் கோரத் தாக்குதல் ஆரம்பமானது. அது மறுநாளும் தொடர்ந்தது. அதன் போது ஐந்துக்கும் மேற்பட்ட உறவுகள் உடல் சிதறி உருக்குலைந்து போயின. பல வீடுகள், பாடசாலைகள், கால்நடைகள் என பலவும் சிதறி சின்னாபின்னமாகின. அன்றோடு வீடுகள், உடைமைகள், சொத் துகளை விட்டு உயிரை மட்டும் காப்பாற்றினால் போதும் என்ற எண்ணத்துடன் பிள்ளைகளையும் உறவுகளையும் கூட்டிக் கொண்டு ஓடத் தொடங்கினோம். இன்றுவரை அங்குமிங்கும் தொடர்ந்தும் ஓடிய வண்ணமே உள்ளோம்.

இந்தச் சம்பவங்களின் பின்னர் தண்ணீருக்கும் வசதியற்ற பாட்டாளிபுரம் என்ற பகுதிகளில் மர நிழல்களிலும் கொட்டும் பனியிலும் காலத்தைக் கழித்தோம். அங்கும் இந்த ஷெல்களும் மல்ரி பரல்களும் குண்டுகளையும் ஷெல்களையும் தொடர்ந்து அனுப்பிய வண்ணமே இருந்தன. ஒருசமயம் அங்கும் 20க்கும் மேற்பட்ட மக்கள் உடல் சிதறினர். காயமடைந்தவர்களுக்கு கூட மருத்துவ வசதியில்லை. அவர்களைக் கொண்டு செல்லவும் வழியுமில்லை. இந்த நிலையில் பலரது உயிர்கள் வஞ்சகமாக பறிக்கப்பட்டன.

இது பொருத்தமில்லை என ஈச்சிலம்பற்றில் உள்ள புன்னையடி எனும் கிராமத்திற்கும் இடம்பெயர்ந்தோம். அங்கும் இவ்வாறே பின்னர் நடந்த ஷெல், விமானத் தாக்குதல்களில் உயிரிழப்புக்களைச் சந்தித்தோம். மேலும் தாக்குதல்கள் ஈச்சிலம்பற்று பொதுமக்கள் வாழும் இடங்கள் நோக்கியும் விரிந்தன. அங்கும் எமது கண்ணின் முன்னே பல பொதுமக்கள் கொலையுண்டனர். இந்த நிலையில் அங்கு இருக்க முடியாது என்றே வாகரை வந்தோம். அங்கு நடந்த கோரங்களில் இதுவரை பல நூறு பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. பெண்கள், குழந்தைகள் என உடல் சிதறி வீதியில்

வாகனத்தில் அகப்பட்ட நாய்களைப் போன்று அழிந்த அவலம் மாறாத வடுவாகவுள்ளது.

பொதுமக்கள் வாழும் இடங்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு

இடமென அலைந்து உணவு இன்றி குடிக்க போதுமான நீரும் இன்றி அலைந்தோம். வெளியேறுவதற்கு பாதையுமில்லை. கடந்த நவம்பர் 20 ஆம் திகதி மட்டில் ஏ 15 பிரதான வீதியை படையினர் மூடி விட்டனர்.

இந்த நிலையில் மக்கள் வேறு வழியின்றி உயிராபத்தையும் பொருட்படுத்தாது வெளியேறி வருகின்றனர். நாங்கள் ஏன் தமிழர்களாக அதுவும் இந்த நாட்டில் பிறந்தோம் என்றே தெரியவில்லை.

இன்று கிட்டத்தட்ட 8 மாதங்களாக இந்த அழிவுகளையும் அவலங்களையும் சந்தித்த வண்ணம் உடைமை, உறவு, இல்லிடம் என பலவற்றையும் விட்டு அலைந்த வண்ணம் உள்ளோம். இன்னமும் இப்பயணத்திற்கு முடிவு இல்லை என விபரித்தார்.

இந்த நிலையிலேயே வெளியேறும் மக்கள் ஒவ்வொருவரும் எரிச்சலுடனும் விரக்தியுடனும் பேசுகின்றனர். படையினர் புலிகளின் இலக்குகள் மீது தானே தாக்குதல் நடத்துவதாக கூறுகின்றனர்? அல்லவா என்ற போது, அப்படியானால் அகதி முகாம்களிலும் மதகுகளுக்குள்ளும் பதுங்கியிருந்த 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள். அதற்கும் மேலான தொகையினர் எவ்வாறு காயங்களுக்குள்ளானார்கள்.

நான் அறிந்த காலம் தொட்டு மாறி, மாறி வந்த அரசுகள் ஒவ்வொன்றும் இப்படித்தான் கூறி வந்திருக்கின்றன. ஆனால் புலிகள் ஒழிந்ததனை விட மேலும் பெருகியதுதான் வரலாறு. அப்பாவிகள் அழிந்ததே நடந்திருக்கின்றன. இன்றும் இதனால்தான் அழிகின்றன. அச்சம்பவங்களை நேரடியாக பார்த்தால்தான் உங்களுக்கும் புரியும். இதனால்தான் தமிழ் மக்கள் இந்த அரசுகளை நம்புவதில்லை என கனத்த குரலில் கூறினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.