Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரச்சினைக்கு சமாதான தீர்வுகாண தவறினால் தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் - தொல்.திருமாவளவன்

Featured Replies

ஈழப்பிரச்சினைக்கு சமாதான தீர்வுகாண தவறினால் தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் - தொல்.திருமாவளவன்

வீரகேசரி நாளேடு

ஈழத்தில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக மனிதாபிமானப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். ஈழத்தமிழர்களின் பிரச்சினை எந்த வகையிலும் தீர்ந்தபாடில்லை. எனவே, தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரித்து அங்கு வாழும் தமிழர்களின் அடிப்படை பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித் தார்.

இலங்கை விவகாரத்தில் தமிழகம் வெகுவாக விழித்தெழுந்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அனைத்து தமிழகத் தலைவர்களும் ஒருமித்து குரல் கொடுத்து வருகின்றனர். எனவே, இதனை மத்திய அரசு புரிந்து கொண்டு ஈழத் தமிழர்களை காக்க முன்வர வேண்டும் என்றும் அவர் சொன்னார். வீரகேசரி நாளிதழுக்கு நேற்று அவர் வழங்கிய விசேட பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் தமிழ் மக்களை நசுக்கி வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆயுத உதவிகள் எதனையும் வழங்குவதில்லை என இந்திய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்திய காங்கிரசின் தலைவியான சோனியா காந்தி இது விடயத்தில் தெளிவாக உள்ளார்.

இலங்கையில் வாடும் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இலங்கைக்கு ராணுவ உதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று கூறியிருக்கிறார். இது ஒரு நல்ல முன்னேற்றகரமான விடயம் ஆகும்.

முன்னர் ஒரு போதும் இல்லாதவாறு மீண்டும் இலங்கை விவகாரத்தில் இந்தியா கூடிய அக்கறை கொண்டுள்ளதை இது காட்டுகின்றது. ஈழத் தமிழர்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் குறித்து தமிழகம் மாத்திரம் அல்ல, மத்திய அரசும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி மிகவும் சாதகமான போக்கை கொண்டிருக்கிறார். ஈழத் தமிழர்களை காக்க வேண்டும் என்பதற்காக அண்மையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒன்றையும், ஏகமனதாக நிறைவேற்றியுள்ளார். அத்துடன் ஏற்கனவே இலங்கை ராணுவத்திற்கு கோவையில் அளிக்கப்பட்டு வந்த ராணுவப் பயிற்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு அவர்கள் வெளியேற்றப்படும் நிலைமை உருவாகி உள்ளது.

தமிழக அரசு, ஈழத் தமிழர்களை காக்க வேண்டும் என்பது குறித்து தொடர்ச்சியாக மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. தமிழகத் தலைவர்களும் இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்குமிடத்து இலங்கையில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கும் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் தமிழக அரசும் மத்திய அரசும் ஒரே நோக்கத்தை கொண்டிருப்பதை காண முடிகிறது.

அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், லண்டனில் காலமானது தொடர்பாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி உட்பட அனைத்து தலைவர்களும் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டு இருந்தனர். இது ஒரு பெரும் மாற்றத்தையே எடுத்துக் காட்டுகின்றது.

ஈழத்தில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கும் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் தமிழகம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது. எனவே மத்திய அரசு, ஈழத்தமிழர்களின் துயரத்தைத் துடைத்து அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். அதே வேளை இழுத்தடிக்கப்பட்டு வரும் தேசிய இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் தீர்வு காண இலங்கை அரசு, தவறும் பட்சத்தில் தமிழ் ஈழத்தை அங்கீகரித்து ஈழத்தமிழர்களை பாதுகாக்க இந்திய அரசு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=3380

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.