Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்துலக சமூகத்தின் பதில் என்ன?: விடுதலைப் புலிகள்

Featured Replies

அனைத்துலக சமூகத்தின் பதில் என்ன?: விடுதலைப் புலிகள்

[திங்கட்கிழமை, 18 டிசெம்பர் 2006, 16:22 ஈழம்] [பூ.சிவமலர்]

வாகரையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிறிலங்கா அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு எவரும் ஏவுகணை விஞ்ஞானம் படிக்க வேண்டியதில்லை. வாகரையைத் தன்வசமாக்கும் திட்டத்தில் சிறிலங்கா அரசு, அனைத்துலக விதிமுறைகளை மீறியதுடன், மனிதாபிமான வேண்டுகோள்களையும் நிராகரித்துள்ளது என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் அறிக்கை விடுத்துள்ளது.

வாகரையில் உள்ள மக்கள் நல சேவை புரியும் இடங்களை மட்டக்களப்புக்கான அனைத்துலக செஞ்சிலுவகைச் சங்கப் பிரதிநிதி காசேசி மார்யத்தை, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கடந்த ஒக்ரோபர் மாத நடுப்பகுதியில் அழைத்துச் சென்று காண்பித்தார்.

வாகரை மருத்துவமனை, வம்மிவெட்டுவான் பாடசாலை, பற்சேனை பாடசாலை, கதிரவெளி பாடசாலை, வெருகல் கோயில் ஆகிய இடங்கள் வாகரையில் தங்கியுள்ள அகதிகளுக்கான நலசேவை இடங்கள் இவற்றைப் பாதுகாப்பானதாக ஆக்க வேண்டும் என எழிலன் காகேசி மார்யத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் குறிப்புக்களை காகேசி மார்யம், சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைத்து இவை பாதுகாப்பு வலயங்களாகப் பேணப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அப்படியிருந்தும் குறிப்பாக இந்தப் பகுதிகளில் இராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தாக்குதல்களில் 89 மக்கள் பலியாகியுள்ளனர். இவை போர்நிறுத்த உடன்பாட்டைக் கடுமையாக மீறுவதாகும் என அந்த அறிக்கை விளக்கியுள்ளது.

வாகரையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் பொதுமக்களும் சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த பொதுமக்களும் தற்போது வாகரையில் வாழ்ந்து வருகின்றனர். இராணுவம் தனது பயங்கரவாத கொடுந் தாக்குதல்களால் வாகரை மக்களையும் அங்கிருந்து இடம்பெயரத் தூண்டுகிறது.

பொதுமக்களை வாகரையிலிருந்து முற்றாக வெளியேற்றுவதே இராணுவத்தின் நோக்கம். போர் தொடர்புடைய காரணங்களுக்காக தங்களது சொந்த இடத்திலிருந்து பொமக்கள் வெளியேற கட்டாயப்படுத்தக்கூடாது என்ற போர்நிறுத்த உடன்பாட்டில் 17.2 ஆவது சரத்தை சிறிலங்கா அரசு மீறி விட்டது என அறிக்கை கூறுகிறது.

இராணுவத்தினரின் பகுதிகளுக்குள் செல்ல வாகரை பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். குறிப்பாக துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் மீது பொதுமக்கள் பீதி கொண்டுள்ளனர். ஏனெனில் வாகரை பொதுமக்கள் விடுதலைப் புலிகள் என்ற நோக்கிலேயே பார்க்கப்படுவார்கள். இராணுவத்தின் எறிகணை தாக்குதல்களுக்கு அஞ்சி வாழ்ந்த பொதுமக்கள் இப்போது மீண்டும் இடம்பெயரக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர

<_< திருவாளர் எழிலன் அவர்களே......நீங்களும் சொல்லுறியல் அவன்களும் கேட்க மாட்டான்கள் என்றும் உங்களுக்கும் தெரியும்....ஆனா ஒன்று மட்டும் விளங்குது...

நீங்கள் உலக அபிப்பிராயத்த திசை திருப்பலாம்.....இப்படி அறிக்கைகள் மாறி மாறி விடுவதால் என்று.....ஒரு கணமும் நினைக்க வேண்டாம்....உங்களை அடியோட அழிக்க எதிரி முன்பு நீங்கள் பாவித்த அதே பாணியில் ஒவ்வொறு அங்குலமாக உங்களை தள்ளுறான்.....நீங்களும் அமைதி காக்கிறமாதிரி ஒரு காரணத்தோடு இருக்கிறீயல் எண்டும் புரிய முடிகிறது.....ஆனால் உலகம் உங்களை என்றுமே கருத்தில் எடாது என்பது தான் எனி வரப்போகின்ற உண்மை.....நீங்கள் முன்பு மாதிரி தொடங்கி ஒங்கி அடிக்கும் போது தான் உங்களுக்கும் உலகம் மரியாதை தரும்.....எனக்கு விளங்குது நீங்கள் என்ன யோசிக்கிறீயல் எண்டு.....ஆணா ஒருக்கா கெட்டவன் என்று பெயர் எடுத்தா பின்பு எப்படித்தான் நாம் நல்ல மாதிரி நடந்தாலும் இந்த பாலாய்ப் போன உலகம்...

ஏற்றுக்கொள்ளாது....ஆகவே....நீங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:o திருவாளர் எழிலன் அவர்களே......நீங்களும் சொல்லுறியல் அவன்களும் கேட்க மாட்டான்கள் என்றும் உங்களுக்கும் தெரியும்....ஆனா ஒன்று மட்டும் விளங்குது...

நீங்கள் உலக அபிப்பிராயத்த திசை திருப்பலாம்.....இப்படி அறிக்கைகள் மாறி மாறி விடுவதால் என்று.....ஒரு கணமும் நினைக்க வேண்டாம்....உங்களை அடியோட அழிக்க எதிரி முன்பு நீங்கள் பாவித்த அதே பாணியில் ஒவ்வொறு அங்குலமாக உங்களை தள்ளுறான்.....நீங்களும் அமைதி காக்கிறமாதிரி ஒரு காரணத்தோடு இருக்கிறீயல் எண்டும் புரிய முடிகிறது.....ஆனால் உலகம் உங்களை என்றுமே கருத்தில் எடாது என்பது தான் எனி வரப்போகின்ற உண்மை.....நீங்கள் முன்பு மாதிரி தொடங்கி ஒங்கி அடிக்கும் போது தான் உங்களுக்கும் உலகம் மரியாதை தரும்.....எனக்கு விளங்குது நீங்கள் என்ன யோசிக்கிறீயல் எண்டு.....ஆணா ஒருக்கா கெட்டவன் என்று பெயர் எடுத்தா பின்பு எப்படித்தான் நாம் நல்ல மாதிரி நடந்தாலும் இந்த பாலாய்ப் போன உலகம்...

ஏற்றுக்கொள்ளாது....ஆகவே....நீங்க

Edited by Puthiyavan_au

போர்நிறுத்த உடன்பாட்டில் 17.2 ஆவது சரத்தை சிறிலங்கா அரசு மீறி விட்டது என அறிக்கை கூறுகிறது

ஏற்கனவே தலைவர் ''சிறிலங்கா அரசு, ஈமைக்கிரியைகளைச் செய்து முடித்து விட்டது'' என்று மாவீரர் தின உரையில் குறிப்பிட்டு இருக்கின்ற வேளையில், இது போன்ற அறிக்கைகள் தலைவரின் உரையின் வீரியத்தை குறைத்துவிடாதா?

போர்நிறுத்த உடன்பாட்டில் 17.2 ஆவது சரத்தை சிறிலங்கா அரசு மீறி விட்டது என அறிக்கை கூறுகிறது

ஏற்கனவே தலைவர் ''சிறிலங்கா அரசு, ஈமைக்கிரியைகளைச் செய்து முடித்து விட்டது'' என்று மாவீரர் தின உரையில் குறிப்பிட்டு இருக்கின்ற வேளையில், இது போன்ற அறிக்கைகள் தலைவரின் உரையின் வீரியத்தை குறைத்துவிடாதா?

மேலே சந்தியா இணைத்த செய்தி முழுமையாக்கப்பட்டதுடன் தலைப்பும் திருத்தப்பட்டுள்ளது.

தவறு சந்தியாவினது அல்ல. அவர் வேறொரு இடத்தில் இருந்த செய்தியை அதே தலைப்புடன் இங்கு இணைத்திருந்தார். செய்திக்கும் தலைப்புக்கும் பொருத்தமிருப்பதாகத் தெரியவில்லை என்பதால் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.

:huh: அனைத்துலகத்தின் பதிலும் நீங்கள் ஒரு இனத்தின் கீழ் ஒற்றுமையாய் இருந்து தொலையுங்கோ...தான்...நாங்கள்..வெள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைதி அமைதி நன்பர்களே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சமாதாணத்தை நம்பி நாங்கள் ஏமாத்து இருக்களாம் ஆனா உலக விடுதலை போராட்டங்களின் வரலாறை தெரிந்த எமது புலிகள் இந்த சமாதாண காலத்தில் என்ன என்ன எல்லாம் செய்து இருப்பார்கள்?

இப்போது நாங்கள் வீரம் காட்டும் நேரம் இல்லை அனுதாபம் அதாவது அனுதாபம் என்ற பெயரில் இந்த சர்வதேச நாடுகளை வரும் காலங்களில் எமது புலிகளின் தாக்குதல்கள் கடுமையாக இருக்கும் போது சண்டை வேண்டாம் பேசுங்கள் பேசுங்கள் என்ற போலி சாட்டுக்களை விதைக்க விடாமல் இருப்பதுக்கே,,,,,,,

இலங்கை அரசுடன் தமிழர்களுக்கு பேசி தீர்வு கிடைக்காது என்ற என்னம் இந்த சர்வேதேச நாடுகளில் வாயில் இருந்து வரும் காலம் வெகு தூரம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.