Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெயில்

Featured Replies

சிரபுஞ்சியில் வெயில் அடித்தால் எப்படியிருக்கும். அப்படியொரு அபூர்வமாய்... காதல் உள்ளிட்ட அத்தனை உறவுகளின் உன்னதங்களை உயில் எழுதி வைத்திருக்கும் படைப்பு இது.

தலைப்பு வெயில் என்றாலும் பல காட்சிகளில் கண்கள் என்னவோ சிரபுஞ்சியாய் மாறுவதை எந்த கைக்குட்டை கொண்டும் தடுத்துவிட முடியாது.

கால் சட்டை பருவத்தில் அப்பாவால் கண்டிக்கப்படும் பசுபதி (முருகேசன்) வீட்டை விட்டு வெளியேறி வெளியூரில் உள்ள ஒரு திரையரங்கில் வேலைக்கு சேர்கிறார். வயது வளர வளர போஸ்டர் ஒட்டும் வேலையில் ஆரம்பித்து ஆபரேட்டர் வேலை வரை உயர்த்தப்படும் பசுபதியின் வாழ்க்கையில் திடீரென முளைக்கிறது காதல் அத்தியாயம்.

தியேட்டரின் எதிரே இருக்கும் டீக்கடைக்காரிரன் மகளுக்கும் (பிரியங்கா) பசுபதிக்குமிடையே காதல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இன்னொரு பக்கம் ஊரிலேயே படித்து வளரும் பசுபதியின் தம்பி பரத் (கதிர்) விளம்பர ஏஜென்சி நடத்தி குடும்பத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார். இங்கு பரத்துக்கும் விளம்பரங்களுக்கு டப்பிங் பேசவரும் பாவனாவிற்கும் இடையே காதல்.

இந்த சூழலில் பசுபதியின் காதல் பிரியங்காவின் அப்பாவுக்கு தெரிந்ததும் பிரச்சனை வெடிக்கிறது. காதலி தன்னைத்தானே பலியிட்டு கொள்ள, பசுபதியின் வாழ்க்கையில் வெறுமையும் இருட்டும் சூழ்ந்து கொள்கிறது.

எதற்குமே கொடுப்பினை இல்லாமல் சோதனைத சூறாவளியில் சுழலும் பசுபதி, இருபது வருடங்களுக்கு பிறகு தனது உறவுகளை புதுப்பித்துக் கொள்ள ஊருக்கு வருகிறார். கட்டித்தழுவி கண்ணீர்விட வேண்டிய அப்பா மீண்டும் துரத்துகிறார். இனி பசுபதியின் திசை எது என்பது மீதிக்கதை.

"வெயிலோடு விளையாடி

வெயிலோடு உறவாடி..." என சின்னஞ்சிறுசுகளெல்லாம் பாட்டுப்பாடி களிக்கும் ஆரம்ப காட்சிகளிலேயே மூளைக்குள் கால் முளைத்து பால்ய காலத்திற்கு பயணிக்க வைக்கிறது நினைவுகள்.

பெற்றவர்கள், உடன்பிறப்புகள், வாழ்க்கை துணையாக கனவு கண்ட காதலி என ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா உறவுகளையும் இழந்து தவிக்கும் பாத்திரத்தில் பசுபதி நெகிழ வைத்துவிடுகிறார்.

நைந்துப்போன வேட்டியும், பிய்ந்துபோன செருப்புமாக பல வருடங்களுக்கு பிறகு ஊர் மண்ணை மிதிக்கும்போது காலில் சின்ன நடுக்கத்தை வரவழைக்கும் இடத்திலேயே நடிப்பில் 'நின்று' காட்டியிருக்கும் பசுபதி படம் முழுவதும் வென்று காட்டியிருக்கார்.

வாசலில் நின்றபடி "அப்பா நான்தாப்பா முருகேசன்... முருகேசன்ப்பா... யப்பா உங்க பையன் முருகேசன்ப்பா...." என அடையாளம் காட்ட முயல்வதும் பதிலுக்கு அப்பா கண்டுகொள்ளாமல் போகும்போது முட்டிக்கொண்டு வரும் அழுகைக்கு அணைப்போட்டு கொள்கிறார். இந்த இடத்தில் பசுபதிக்கு பதில் அழுது தீர்க்கிறது படம் பார்க்கும் அத்தனை கண்களும்.

மீண்டும் திருட்டு பட்டம் கட்டப்படும்போது மண்டியிட்டு 'நான் திருடலப்பா' என்று கதறுவது, தம்பி பரத்தை சந்திக்கும் இடத்தில் 'நீங்க கசாப்புக்காரரின் மகன் கதிர்தானே....?' என்று தயங்கி நிற்பது, க்ளைமாக்ஸில் வில்லனின் உயிரை குடித்துவிட்டு அய்யனார் சிலை போல உட்கார்ந்து உயிரைவிடுவது என ஒவ்வொரு இடத்திற்கும் தனித்தனி விருது தந்து கௌரவிக்கப்பட வேண்டியவர் பசுபதி.

ஒட்டுமொத்த பாராட்டுகளும் பசுபதிக்கு போய்ச்சேர விட்டுக்கொடுத்து விலகி நின்றிருக்கும் பரத்தின் பரந்த மனதுக்கும் பாராட்டு சொல்லியே ஆகவேண்டும்.

பசுபதியின் தியேட்டர் காதலியாக வரும் பிரியங்கா தமிழ் சினிமாவில் இன்னொரு சரிதாவாக சாதிக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. அகன்று விரிந்த கண்கள் மொத்தத்திலும் பசுபதிக்கான காதலை தேக்கி வைத்துக்கொண்டு செய்யும் ரியாக்ஷ்ன் அடடா... பிரமாதம்.

வறட்டு இருமலும் வறட்டு பிடிவாதமும் மாறாமல் கண்களை அந்திச்சூரியனாக்கி மகனை வெறுத்தொதுக்கும் பாத்திரத்தில் வெளுத்து வாங்கியிருக்கிறார் ஜி.எம். குமார். ('அறுவடை நாள்' இயக்குனர்)

டப்பிங் குரல்கொடுக்கும் பாவனா, பசுபதியின் பால்யகால சிநேகிதி ஸ்ரேயா, வில்லனாக வரும் ரவிமரியா, அம்மாவாக வரும் T.K. கலா போன்றவர்களின் நடிப்பையும் ஒரு வரி மெச்சாவிட்டால் அந்த பாவம் சும்மா விடாது.

பார்ப்பது படம் என்ற பயாஸ்கோப் தோரணங்களை களைத்துவிட்டு 'வாழ்க்கையை', 'வலி'யை உணர வைக்க உதவியிருக்கிறது மதியின் காமிராக் கண்கள். எதார்த்தம் பிறளாததற்கு இன்னொரு காரணம் லைட்டிங். புழுதிக்காடு, பூக்கும் காதல் என ஒவ்வொரு களத்திற்கும் ஏற்ற ஆளுகையை கையாணடிருக்கிறது மதியின் 'மதி'.

குறித்து வைத்து கொள்ளுங்கள் K.V.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இப்படி கால இடைவெளிகளில் தனித்து நின்ற இசை கதாநாயகர்கள் வரிசையில் அடுத்த இடம் G.V. பிரகாஷுக்குதான்.

உருகுதே மருகுதே....' என பாடலில் உருக்குபவர் பின்னணியிலும் வயலின், புல்லாங்குழலை இழையோட வைத்து மனதை கனக்கவைக்கிறார்.

காதலியின் கையில் திரைப்படம் ஓட்டுவது, ஒட்டுமீசை ஒட்டிக்கொண்டு ரெக்கார்டு டான்ஸ் பார்க்கும் சிறுவர்கள் என காட்சிக்கு பொருத்தமான நா. முத்துக்குமாரின் வரிகள், வரிகளுக்கு பொருத்தமாக காட்சியமைத்த விதம் இரண்டுமே கவிதைகளாக தெரிகின்றன.

கொள்ளுப்பட்டறையில் பற்ற வைத்த இரும்பை தண்ணீருக்குள் அழுத்தும் காட்சி. இந்த இடத்தில் ஆறியிருந்த மனசுக்குள் மறுபடியும் கோபம் கொப்பளிப்பதை சிம்பாளிக்காக காட்டும் இயக்குனர் வஸந்தபாலனின் மாறுபட்ட பார்வைக்கு இந்த ஒரு இடம் ஒரு சோறு பதம்.

படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, "இந்த கதை என் வாழ்க்கையில் அனுபவித்த வலி" என்று துண்டு சீட்டை நீட்டினார் இயக்குனர். வஸந்த பாலன் இனி உங்கள் வாழ்க்கையில் 'வலி' வழியாய் மாறும்.

நிஜமான கதையை இயல்பாக படம்பிடிக்கும் ஆபூர்வங்கள் சொற்ப சிலரோடு முடிந்துவிடுமோ என்றெழுந்த சமீபகால பயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இதோ நானும் இருக்கிறேன் என நம்பிக்கையூட்டும் வஸந்த பாலனை வரவேற்கலாம்.

உணர்ச்சி கதிர்களை வீசுகிறது இந்த 'வெயில்.'

( ப்ளஸ்.)

பசுபதியின் தத்ரூப நடிப்பு

விட்டுக்கொடுத்து நடித்த பரத்தின் மனசு

கதையின் இயல்பை மாற்றாத ஒளிப்பதிவு

உணர்வை உருக்கும் இசை

இவை மொத்தத்திற்கும் காரணமான இயக்குனர்

(மைனஸ்.. )

பூக்களின் வாசம் நுகரும்போது புற்களை பற்றிய நினைவேது? :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.