Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க் :நேதாஜி உடலை எரித்த கையுடன் உதவியாளர் எழுதிய கடிதம்!

Featured Replies

இறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க் :நேதாஜி உடலை எரித்த கையுடன் உதவியாளர் எழுதிய கடிதம்!

 

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945ஆம் ஆண்டு, 18ஆம் தேதி இரவு விமான விபத்தில் சிக்கி இறந்ததாக உறுதிபடுத்தப்பட்டத் தகவலை பிரிட்டனை சேர்ந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. இது குறித்து நேதாஜியுடன் பயணித்த மற்றொரு இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த ஹபீபூர் ரஹ்மான்கான் அளித்த தகவல்களையும் அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி நேதாஜியின் உடலை எரித்த பின்னர் அவர் எழுதி கடிதம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கர்னல் ஹபீபூர் ரஹ்மான்கான், இந்திய தேசிய ராணுவம், தைஹோகூவில் நடந்த விமான விபத்து தொடர்பாக எழுதிக் கொள்வது,

'' கடந்த 16-8-1945ஆம் ஆண்டு காலை 10.30 மணியளவில் ஜப்பானை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.  சுபாஷ் சந்திர போஸ், சில அரசாங்கள் உத்தியோகஸ்தர்கள், இவர்களுடன் நானும் அந்த குழுவில் இருந்தேன். முதல் கட்டமாக சிங்கப்பூரில் இருந்து பாங்காங் நோக்கி ஜப்பானிய பாம்பர் விமானத்தில் பயணித்தோம். மதியம் 3.30 மணியளவில் பாங்காங் சென்றடைந்தோம்.

2e5pif8.jpg

பின்னர்  17ஆம் தேதி காலை 7.30 மணியளவில் பாங்காங்கில் எங்களுக்காக இரு ஜப்பான் விமானங்கள் காத்திருந்தன. ஒன்று இந்தியர்களுக்கு.  நேதாஜி ,ஸ்ரீ ஐயர், கர்னல் கேலோனல் குல்ஷார் சிங், கர்னல்  தீப்நாத் தாஸ், லெப்டினன்ட் கர்னல் பிரீதம் சிங், மேஜர் ஏ.ஹசன் மற்றும் நான் உள்ளடக்கிய  7 பேருக்கும் ஒரு விமானம்.

இந்திய சுதேசிய அரசுடன் ராணுவ நிர்வாகங்களை கவனிக்கும் ஜப்பானிய லெப்டினன்ட் ஜெனரல் இசோடா, சுதேசிய அரசுடன் அரசியல் விவகாரங்களுக்கான ஜப்பான் அமைச்சர் ஹெச். ஈ. ஹாட்சியா, ஆகியோர் மற்றொரு விமானத்தில் பயணித்தனர். அதே தினத்தில் காலை 10.45 மணிக்கு வியட்நாமில் உள்ள சைகூன் (தற்போது ஹோசிமின் ) போய் சேர்ந்தோம்.

அன்று மாலை லெப்டினன்ட் ஜெனரல் இசோடா, ஹாட்சியா, கர்னல் தாடா, நேதாஜிக்கு ஒரு தகவல் அளித்தனர். அதாவது  ஜப்பான் புறப்படும் விமானத்தில் இரு இருக்கைகள் எஞ்சியிருக்கின்றன.  ஜப்பானுக்கு புறப்படத் தயாராகுங்கள்  என்று கூறப்பட்டது.  விமானத்தில் இருக்கைகள் இல்லாத நிலையில் எங்களுடன் வந்த சுதேசிய ராணுவ அதிகாரிகள் அங்கேயே தங்கி விட்டனர்.  நேதாஜி என்னை மட்டும் உடன் அழைத்துக் கொண்டார்.

சைகூனில் இருந்து மாலை5.15 மணியளவில் அந்த இரட்டை என்ஜீன் கொண்ட மிட்சுபிசி கே.ஐ- 21 ரக   ஜப்பானிய பாம்பர் விமானம் புறப்பட்டது. இரவு 7.45 மணிக்கு பிரெஞ்சு படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த தரோன் நகரில் ( வியட்நாமில் உள்ள டா நாங் என்ற கடற்கரை நகரம் ) விமானம் தரை இறங்கியது. அன்றைய இரவு அங்கேயே கழித்தோம். அடுத்த நாள் காலை அதாவது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை எங்கள் விமானம், தைவானில் உள்ள  தைஹோகூ (தற்போது தைபே) நோக்கி பயணத்தை தொடங்கியது. மதியம் 2 மணிக்கு அங்கு சென்றடைந்தோம். சுமார் 35 நிமிடங்கள் ஓய்வெடுத்தோம்.

தொடர்ந்து 2.35 மணிக்கு ஜப்பானை நோக்கி விமானம் புறப்படத் தொடங்கியது. தைஹோகூ ஏரோ டிராமை விட்டு விமானம் மேலெழும்பத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே  விமானத்தின் முன் பகுதியில் இருந்து குண்டு வெடித்தது போல பெரும் சத்தம் கேட்டது. விமான என்ஜீனில் உள்ள இறக்கை ஒன்று உடைந்து தொங்கியதால் ஏற்பட்ட சத்தம் அது.  அடுத்த நிமிடமே தரையை நோக்கி விமானம் பாய்ந்தது. விமானம் தரையில் மோதியவுடன் முன்பக்கம் பின்புறமும் தீ பற்றத் தொடங்கியது. 

விமானத்தில் நேதாஜி பெட்ரோல் டேங் அருகில் இருந்தார். நான் அவருக்கு அருகில் இருந்தேன். விமானத்தில் பற்றி எரிந்த தீக்கிடையே நாங்கள் வெளியேறினோம். முதலில் நான் வெளியே வந்தேன். எனக்கு பின்னால் நேதாஜி வந்தார்.  விமானத்தை விட்டு வெளியே வந்த நான் திரும்பி பார்த்த போது,  நேதாஜியின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததை  பார்த்தேன்.  நான் அவரது  உதவிக்கு ஓடினேன். அவரது உடைகளை கழற்றினேன். ஆனால் அவருக்கு உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது. விமானம் கீழே விழுந்ததில் நேதாஜிக்கு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

விமானம் தரையில் விழுந்த நேரத்தில் பெட்ரோல் டேங் வெடித்து அதில் இருந்த பெட்ரோல் நேதாஜி மீது சிதறியிருக்கலாம் என்பது என் கணிப்பு. இதனால்தான் அவர் மீது தீ இலகுவாக பரவியிருக்கலாம் என்று கருதுகிறேன். எனினும்  அருகில் இருந்த ஜப்பானிய மருத்துவமனைக்கு 15 நிமிடத்துக்குள் நேதாஜியை கொண்டு போய் விட்டோம். எனக்கும் உடல் எங்கும் தீக்காயங்கள், தலையில் பலத்த அடி பட்டிருந்தது. நேதாஜியை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தோம். மருத்துவர்கள் தீவிரமாக போராடி பார்த்தனர். ஆனால் அன்று இரவு 9 மணியளவில் நேதாஜி மரணம் அடைந்து விட்டார்.

நேதாஜி இறப்பதற்கு முன்னால் மிகுந்த அமைதியுடன் இருந்தார். என்னிடம் பேசினால் கூட இந்திய சுதந்திரம் பற்றிதான் அவரது பேச்சு இருந்தது.  தான் இறக்கும் தருவாயில் இந்தியாவின் சுதந்திரத்தை பற்றிதான் பேசிக்கொண்டுதான் இறந்ததாக தனது சகத் தோழர்களிடமும் அறிவிக்கச் சொன்னார். '' நான் கடைசி வரை இந்தியாவின் சுதந்திரத்துக்காகவே போராடினேன். எனது இறப்பும் அதே முயற்சிக்காகவே நிகழ்ந்துள்ளது. தோழர்களே கடைசி வரை போராட்டத்தை கைவிட்டு விடாதீர்கள் ''என்பதே நேதாஜி இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அளித்த இறப்பு செய்தி.

 இந்த விபத்தில் லெப்டினன்ட் ஷிடாய், மற்றும் இரு ஜப்பானிய காமெண்டர்களும் இறந்து போனார்கள். மற்றவர்கள் எல்லாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. நேதாஜி இறந்ததும் அவரது உடலை டோக்கியோவுக்கு அல்லது சிங்கப்பூருக்கோ கொண்டு செல்ல வேண்டுமென்று நான் வலியுறுத்தினேன். சிங்கப்பூர் கொண்டு செல்ல வேண்டுமென்பதே எனது நோக்கமாக இருந்தது.  தேவையான உதவிகள் செய்யப்படுவதாக வாக்களிக்கப்பட்டது. விரைவில் சவப் பெட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் விபத்து குறித்து சைகூன் மற்றும் டோக்கியோவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் கூறப்பட்டது.

நேதாஜி இறந்த 3 நாட்களுக்கு பிறகு, அதாவது 21ஆம் தேதி அவரது உடலை எடுத்து செல்வது சாத்தியமில்லை. எனவே அவரது  உடலை தைஹோகூவிலேயே எரித்து விடுமாறு என்னிடம் தகவல் தரப்பட்டது. எனக்கும் வேறு வழி தெரியவில்லை.  நானும் அதனை ஏற்றுக்கொண்டேன். தொடர்ந்து 22ஆம் தேதி நேதாஜியின் உடலை ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் உதவியுடன் எரித்தேன். பின்னர் 23ஆம் தேதி நேதாஜியின் சாம்பலை சேகரித்தேன்.

நேதாஜியின் அஸ்தியை டோக்கியோவில் ஒரு இடத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, தக்க சமயத்தில் இந்தியா கொண்டு வரலாம் என்று எனக்கு அறிவுரை கூறப்பட்டது. எதிர்பாராமல் நடந்த விபத்தின் உண்மை நிலவரம் இதுதான். நான் ஜப்பானிய அதிகாரிகளிடம் நேதாஜியின் அஸ்தியை பத்திரப்படுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். அப்போதுதான் என் தேசத்தின்  தன்னிகரற்ற தலைவனை ஒரு உண்மையான ஹீரேவை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள முடியும்.''

இப்படிக்கு,
கர்னல் .ஹபீபூர் ரஹ்மான்கான்
தைஹோகூ, தைவான்
24-8- 1945

http://www.vikatan.com/news/india/57740-bose%E2%80%99s-end-came-on-the-night-of-august-18-1945.art

  • தொடங்கியவர்

''மிஸ்டர். போஸ் மிக முக்கியமானவர் என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றுங்கள்''- கெஞ்சிய ஜப்பானிய லெப்டினன்ட்

 

ந்திய தேசிய ராணுவத்தின் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக பிரிட்டனை சேர்ந்த 'போஸ்ஃபைல்ஸ் இன்ஃபோ' என்ற இணையதளம் உறுதிப்படுத்தப்பட்டத் தகவலை வெளியிட்டுள்ளது.

பலதரப்பட்ட ஆவணங்கள், ஆய்வுகள், விசாரணைக்கு பின் இந்த தகவலை லண்டனை சேர்ந்த பத்திரிகையாளர் ஆஷிஷ் ரே தனது இணையதளத்தில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் கடைசியாக நேதாஜிக்கு சிசிச்சையளித்த டாக்டர் டனோயோஷி யோஷிமியின் பேட்டியும் அடங்கியிருக்கிறது. டனோயோஷி யோஷிமி நேதாஜியின் இறப்பு குறித்து கூறுகையில்,

sb%20.jpg

 

'எப்படியாவது காப்பாற்றுங்கள் '

''தைபேவில் விபத்து நடந்ததும், நாமன் மிலிட்டரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு வந்தார்கள். முதலில் போஸ் யார் என்றே எனக்கு தெரியாது. அப்போது, ஜப்பான் ஆர்மியை சேர்ந்த லெப்டினன்ட் யோசிமி என்னிடம்,'' இந்த மனிதர் மிக முக்கியமானவர், எங்களது மரியாதைக்குரியவர். மிஸ்டர். சந்திர போசின் உயிரை எப்படியாவது என்ன விலைகாடுத்தாவது காப்பாற்றுங்கள்'' என்று கெஞ்சினார். அப்போதுதான் இவர்தான் சந்திர போஸ் என்று எனக்கு தெரிய வந்தது.

அந்த சமயத்தில் சந்திரபோஸ் கொஞ்ம் கொஞ்சமாக மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தார்.'' மிஸ்டர். போஸ் நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ''என்று கேட்டேன்.  அதற்கு அவர், ''ரத்தம் என் தலையை நோக்கி பாய்வது போல உணருகிறேன். நான் உறங்க விரும்புகிறேன் ''என்று பதில் அளித்தார். உடனடியாக நான் அவருக்கு மயக்க ஊசி  செலுத்தினேன்.

அவரது உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் இருந்தன. நெஞ்சு பகுதி உள்ளிட்ட காயங்களில் சுத்தம் செய்து மருந்து போட்டு கொண்டிருந்தேன். தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.சந்திர போஸ் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசினார். எனக்கு விளக்கமளிப்பதற்காக அரசு, ஒரு மொழிபெயர்ப்பாளரை அனுப்பியிருந்தது. அவரது பெயர் நாகமுரா, கடைசி நிமிடங்களில் அவர்தான் சந்திர போசுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இங்கு அனுமதித்த,  4 மணி நேரம் கழித்து போஸ் கோமா நிலைக்கு சென்று விட்டார். அதற்கு பிறகு அவருக்கு நினைவு திரும்பவே இல்லை. இரவு 9 மணியளவில் அவரது உயிர் உறங்கிய நிலையிலேயே பிரிந்தது'' என கூறியுள்ளார்.

bose%20.jpg

                                                       டனோயோஷி யோஷிமி (வலமிருந்து இரண்டாவது)

இதே மருத்துவமனையில் நேதாஜியின் இறப்பின் போது அருகில் இருந்தாக கூறப்படும் மற்றொரு மருத்துவர் தசுரடாவிடம்  கடந்த 1946ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு நியமித்த விசாரணை அதிகாரியான, ஜே.ஜி . ஃபிக்கின்ஸ் விசாரணை நடத்தியுள்ளார். ஃபிக்கின்ஸிடம் அந்த மருத்துவர் கூறியதாக சில தகவல்கள் போஸ் ஃபைல்ஸ் இன்ஃபோவில்  இடம் பெற்றுள்ளன.

'' என்னிடம் போஸ் சில விஷயங்களை ஆங்கிலத்தின் கூறினார். இரவு 7 மணிக்கு மேல்,அவரது உடல் நிலை மிக மோசமடைந்தது. மீண்டும் ஒரு மயக்க ஊசி செலுத்தினோம். அப்படியே கோமா நிலைக்கு சென்று விட்டவர் அதன் பிறகு மீளவே இல்லை'' `ஃபிக்கின்ஸிடம் தசுரட்டா தெரிவித்ததாக அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.  

நேதாஜி இறந்து விட்டதாக பரவிய தகவலையடுத்து கடந்த 1946ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த பத்திரிகையாளர் ஹரின் ஷா, நேதாஜி இறப்பு குறித்து மர்மங்களை தெளிவுபடுத்துவதற்காக தைபே பயணம் மேற்கொண்டார். நேதாஜியின் இறப்பு குறித்து 1956ஆம் ஆண்டு  ''வெர்டிக்ட் ஆப் ஃபார்மோசா' என்ற புத்தகமும் எழுதினார். அந்த புத்தகத்தில் நேதாஜியை உயிர் பிரியும் தருவாயில் பராமரித்த செவிலியர் ஷான் பி ஷாவின் பேட்டியும் இடம் பெற்றுள்ளது. அந்த புத்தகத்தில் நேதாஜியின் கடைசி நிமிடங்கள் குறித்து ஷான் பி ஷா இவ்வாறு கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

''அடிக்கடி பெருமூச்சு விட்டார்''

 '' அவர் இங்கேதான் இறந்தார்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி இதே மருத்துவமனையில்தான் இறந்தார். நான் அறுவை சிசிச்சைக்கு உதவக் கூடிய செவிலியர் என்பதால், என்னைதான் அவரை  பராமரிக்க நியமித்திருந்தனர் . போஸின் உடல் முழுவதும் ஆலிவ்   எண்ணெய் தடவும் படி எனக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அவர் இறக்கும் வரையில் நான் இதனை செய்து கொண்டிருந்தேன். போசுக்கு நினைவு திரும்பியபோதெல்லாம்  ஒருவித பெருமூச்சு மட்டும் அவரிடம் இருந்து வெளி வந்து கொண்டிருந்தது. அடிக்கடி தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்தார்'' என கூறியுள்ளார்.

மேலும் நார்மன் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட படுக்கையையும் கூட அந்த செவிலியர் தன்னிடம் காட்டியதாக ஹரின் ஷா , தனது புத்தகத்தில் கூறியுள்ளார். கடைசியான ஹரீன் ஷா, அந்த செவிலியரிடம் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா? என்று கேட்டதாகவும் அதற்கு அந்த செவிலியர் சற்று கோபமடைந்தவாறு, ''நான்தான் எல்லாவற்றையும் சொல்லி விட்டேனே. அவர் இங்குதான் இறந்தார். என்னால் நி ரூபிக்க முடியும்'' என்று பதில் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தகவல்கள் அந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

http://www.vikatan.com/news/india/57745-bose-very-important-person-save-his-life.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.