Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை சென்னை நீதிமன்றில் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை சென்னை நீதிமன்றில் ஆரம்பம்

[ Tuesday,19 January 2016, 05:27:11 ]   
Douglas_Devananda.jpg

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு சாட்சி விசாரணை சென்னை மாவட்ட நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

முதல் சாட்சியான கூலித்தொழிலாளி நீதிமன்றத்தில் ஆஜராகி பொலிஸ் தரப்பு சார்பாக சாட்சியம் அளித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா, தன் இயக்கத்தை சேர்ந்தவர்களுடன், 1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் வசித்து வந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் பட்டாசு வெடித்தனர்.

இதில் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்களுக்கும், பொதுமக்களுக்கும் தகராறு ஏற்பட்டதில் டக்ளஸ் தேவானந்தா தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதில், திருநாவுக்கரசு என்பவர் பலியாகிய அதேவேளை பலர் படுகாயமடைந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸர் வழக்குப்பதிவு செய்து டக்ளஸ் தேவானந்தா உட்பட எட்டுப் பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா வழக்கை தனியாக பிரித்து, சென்னை 4 ஆவது கூடுதல் நீதிமன்றில் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சாந்தி முன்பு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது அரசு தரப்பு வக்கீல் பிரபாவதி ஆஜராகி, ‘சாட்சிகள் விசாரணையின்போது டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும்.

அல்லது உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, அவர் ஸ்ரீலங்காவிலுள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகி, அங்கிருந்து காணொளி உரயைாடல் மூலம் அவரிடம் விசாரிக்கவேண்டும் என ஏற்கனவே மனு செய்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா சார்பில் சட்டத்தரணி ஆர்.ராஜன், ஏ.டி.நாகேந்திரன் ஆகியோர் ஆஜராகி, ‘இதுகுறித்து தகுந்த முடிவினை இந்த நீதிமன்றம் எடுக்கவேண்டும்’ என தெரிவித்தார்கள்.

பொலிஸ் தரப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, ‘வீடியோ கான்பரன்சிங் வசதி இந்த நீதிமன்றத்தில் இல்லை. எனவே, இந்த வசதியை செய்து தரக்கோரி சென்னை மாவட்ட முதன்மை நீதிபதிக்கு கடிதம் எழுத வேண்டியதுள்ளது. அதன் பின்னர், டக்ளஸ் தேவானந்தாவை நேரில் ஆஜராவது குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார். 

இதையடுத்து, அரசு வக்கீல் எம்.பிரபாவதி எழுந்து, ‘இந்த வழக்கின் பொலிஸ் தரப்பு சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் விசாரணை இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றார். இதை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார். 

இதையடுத்து பொலிஸ் தரப்பு சாட்சி குருமூர்த்தி ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

http://ibctamil.com/news/index/17203

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.