Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் பெரும் பனிப்புயல்: 8 பேர் பலி

Featured Replies

அமெரிக்காவில் பெரும் பனிப்புயல்: 8 பேர் பலி

 

அமெரிக்காவில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் மிகப் பெரியது என்று கருதப்படும் பனிப்புயல் ஒன்று அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியைத் தாக்கியதில், பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.

141119205324__79132675_79116476.jpg
ஒரு மாபெரும் பனி புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை தாக்கியதில், பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் வாஷிங்டன் டி சியில் முதல் சில மணி நேரங்களிலேயே இருபது செண்டிமீட்டர் அளவுக்கு பனி பெய்துள்ளது.

மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு அதிகாரிகள் கோரியதை அடுத்து, அங்கு தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன.

மிகக் கடுமையான இந்தப் பனிப் புயல் சார்ந்த வானிலை காரணமாக குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வட கரோலைனாவில் இறந்துள்ளதாகவும், அங்குள்ள சாலைகள் ஆலங்கட்டி மழை மற்றும் கருப்பு பனியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந்தப் பனிப்புயல் நாளை-ஞாயிறன்று காலைவரை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.bbc.com/tamil/global/2016/01/160123_us_snowstorm

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் பனிப் புயலினால் 18 பேர் பலி

[ Sunday,24 January 2016, 06:17:19 ] 
ice%203.jpg

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோர பகுதிகளை அச்சுறுத்தி வரும் பனிப்புயலினால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன்  85 மில்லியன் மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 40 சென்ரிமீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுவதனால் 11 மாநிலங்களில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வீதிகளில் பனிகள் காணப்படுவதனால் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அதனால்  மக்களை பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

20 மாநிலங்கள் பனிப்புயலினால் பாதிக்கப்பட்டுள்ளமையினால் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக  வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் 6 ஆயிரத்து 600க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன்  ரயில், பேருந்து சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.http://ibctamil.com/news/index/17479

  • தொடங்கியவர்

பனிப் புயலால் உறைகிறது அமெரிக்கா: 10 மாகாணங்களில் அவசர நிலை

 
 
சிகாகோ நகரில் வீசும் பனிப்புயலால் சாலையில் நடந்து செல்வோர் மீதும் பனி் படர்ந்துள்ளது, படம்: ஏஎப்பி
சிகாகோ நகரில் வீசும் பனிப்புயலால் சாலையில் நடந்து செல்வோர் மீதும் பனி் படர்ந்துள்ளது, படம்: ஏஎப்பி

பனிப்புயல் பாதிப்பு காரணமாக அமெரிக்காவின் 10 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எல்நினோ எனப்படும் பருவ நிலை மாற்றம் அண்மைகாலமாக அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த டிசம்பரில் மத்தியமேற்கு, தெற்குப் பகுதி மாகாணங்களில் கடுமையான சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் இதுவரை 31 பேர் பலியாகி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து தற்போது வரலாறு காணாத பனிப்புயல் அமெரிக்காவை அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஜார்ஜியா, டென்னிஸி, பென்சில்வே னியா, மேரிலேண்ட், கென்டக்கி, நார்த் கரோலினா, நியூயார்க், வெர்ஜி னியா, மேற்கு வெர்ஜினியா, வாஷிங்டன் ஆகிய 10 மாநிலங் களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அந்த மாகாணங்களில் வசிக்கும் சுமார் 8.5 கோடி பேரின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 76 செ.மீட்டர் உயரத்துக்கு தரையில் கம்பளம் விரித்தது போன்று பனி படர்ந்துள்ளது. இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் 10 மாகாண அரசுகளும் அறிவித்துள்ளன. பனிப்புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது, ஞாயிற்றுக்கிழமை அதன் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அமெரிக்க வானிலை மையம் எச்சரித்துள்ளது.

பனிப்புயலால் கடந்த இரு நாட்களில் மட்டும் 7600 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள் ளன. சாலைப் போக்குவரத்து, ரயில் சேவை முடங்கியுள்ளது. பல இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சரக்கு போக்குவரத்து தடைபட்டிருப்ப தால் சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவுப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தலைநகர் வாஷிங்டனில் பனிப்புயலின் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கூடைப்பந்து உள்ளிட்ட முக்கிய விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எல்நினோ பருவநிலை மாற்றம் காரணமாகவே அமெரிக்காவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து தற்போது கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-10-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/article8147741.ece?homepage=true

  • தொடங்கியவர்

அமெரிக்க பனிப்புயலில் 18 பேர் வரை பலி

அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய பனிப்புயலில் ஒன்றாக கருதப்படும் குளிர்கால பனிப்புயல் தாக்கியதில் கிழக்கு கடற்கரையோரப் பிராந்தியத்தின் அன்றாட வாழ்க்கை ஸ்திம்பித்துள்ளது.

அமெரிக்க பனிப்புயலில் 18 பேர் வரை பலி
அமெரிக்க பனிப்புயலில் 18 பேர் வரை பலி

பயங்கரமான காற்று மற்றும் பனிப்பொழிவுடன் சம்பந்தப்பட்டதாக 18 மரணங்கள் பதிவாகியுள்ளன.

லட்சக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

160123193532_us_storm_624x351_afp.jpg  

சில இடங்களில் படிந்த ஒரு மீட்டர் உயரம் வரையிலான பனி காரணமாக ரயில்களும், பஸ்களும் மற்றும் விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

நியூயார்க்கில் முழுமையான பயணத்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், அருங்காட்சியகம் மற்றும் திரையரங்குகள் மூட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. சூதாட்ட மையங்களும் மூடப்பட்டன.

160123194239_us_storm_624x351_getty.jpg

 

இப்போது இந்த பனிப்புயல் குறைந்து அத்திலாந்திக் கடலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்ற போதிலும் அதன் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.bbc.com/tamil/global/2016/01/160124_usstrome.shtml

  • தொடங்கியவர்

அமெரிக்காவை புரட்டிபோட்ட பனிப் புயல் (அதிரவைக்கும் வீடியோ)

 

மெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப் புயல் காரணமாக 17 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். 8 ஆயிரம் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் 8 கோடியே 50 லட்சம் மக்கள்,  தங்களின் வீடுகளில் முடங்கியுள்ளனர். 8700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

US%20%20snow%20storm.jpg

அமெரிக்காவில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் பனி பொழிந்து வருகிறது. ஜனாஸ் (Janas) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பனிப் புயலின் காரணமாக,  அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. இந்த பனிப் புயலுக்கு 17 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் 8700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் 10 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கெண்டாக்கி பகுதியில்,  35 மைல் தூர போக்குவரத்து நெரிசலில் சிக்கி,  12 மணி நேரமாக வாகனங்கள் தவித்து வருகின்றன. பனிப் பொழிவு தொடர்ந்து வருவதால்,  பல்வேறு பகுதிகளிலும் 2 அடி உயரத்துக்கு பனி சேருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வாஷிங்டன் பகுதியில் 4 அடி உயரத்துக்கு பனி குவியலாம் என்றும், எனவே மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


இதன் காரணமாக சுமார் 8 கோடியே 50 லட்சம் மக்கள் தங்களின் வீடுகளில் முடங்கியுள்ளனர். 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் மின்சார வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். பனியின் காரணமாக ஆயிரம் விபத்துக்கள் வரை ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/world/58115-us-blizzard-2016-clearing-up-after-huge-snowstorm.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.