Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா முப்படையினரின் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து மனிதஉரிமைகளுக்கான ஆசிய நிலையம் அறிக்கை.

Featured Replies

சிறிலங்கா முப்படையினரின் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து அறிக்கை:- மனிதஉரிமைகளுக்கான ஆசிய நிலையம்.

இலங்கையில் பொலிஸ், இராணுவம், கடற்படை என்பன இணைந்து தமிழ் மக்களுக்கெதிராக பல்வேறு வகையான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியுள்ளதுடன் பாதுகாப்புப் படையினர், கண்மூடித்தனமான தாக்குதல்களையும் படுகொலைகளையும், தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும் 2005 ஆம் ஆண்டு அதிகளவில் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஆசிய நிலையம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 13 ஆம் திகதி புதுடெல்லியில் வைத்து இந்த நிலையம் வெளியிட்ட 2005 ஆம் ஆண்டுக்கான சார்க் நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான தரப்படுத்தல் முறையிலான ஆய்வறிக்கையிலேயே இவ்வமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை நேற்றுமுன்தினம் மேற்படி அமைப்பின் இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொலிஸாரின் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகங்கள் மூலம் தமிழ் குடிமக்கள் கொல்லப்பட்டமை, இராணுவத்தினர் பதில் தாக்குதல்கள் மூலம் தமிழ் இளைஞர்கள் பலரை படுகொலை செய்துள்ளமை, மேலும் பாதுகாப்புப் படையினரால் தமிழ் யுவதிகள் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களையும் தரவுகளுடன் சுட்டிக்காட்டியுள்ள இந்த மனித உரிமை நிலையம் சட்ட விரோத கைதுகளுக்கும், விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைத்தல், சித்திரவதைகள் என்பனவும் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படுவதுடன் நாடளாவியரீதியில் நடைபெறும் இவ்வாறான செயற்பாடுகளின்போது பிரதம இலக்குகளாக தமிழ் மக்களே குறிவைக்கப்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இவ்வமைப்பு, இலங்கையில் மனித உரிமைகள் 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் ஓரளவிற்கு சாதகமான நிலையில் 2005 ஆம் ஆண்டில் இருந்த போதிலும், இந்த வருடம் கடந்த 13ஆம் திகதி மீண்டும் இலங்கை அரசாங்கத்தினால் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் மூலம் அனைத்து தமிழர்களும் சந்தேகத்திற்கிடமானவர்களாக கருதப்படுகின்றனர். எனத் தெரிவித்துள்ளதோடு

இலங்கையின் சட்டத்துறை தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுவதுடன் உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா பெரும்பான்மை இனத்தவருக்கு சார்பான தீர்ப்புக்களையே தொடர்ந்தும் வழங்கி வருவதாகவும் இவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

சுனாமிக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு தடையுத்தரவு விதித்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பிந்துனுவெள புனர்வாழ்வு முகாமில் 28 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு என்பவற்றை சுட்டிக்காட்டியே இவ்வாறு இந்த அமைப்பு கூறியுள்ளது. இலங்கையின் நீதித்துறை பற்றி அவ்வமைப்பு மேலும் கூறியுள்ளதாவது

நீதிபதிகளின் சுதந்திரம் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் என்பனவற்றிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவருக்கான அழைப்பை இலங்கை மேற்கொள்ள தவறியதன் மூலம் நாட்டின் நீதித்துறையில் சுதந்திரம் குறைவடைந்து காணப்படுகிறது என்னும் குற்றச்சாட்டினைமேலும் வலுவாக்கியுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின் 126(1) சரத்தின் படி ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்படும் போது அவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் எனக் கூறுகின்றது.

அதுவும் ஒரு மாதத்திற்குள் அந்த மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என சரத்து 126(2) தெரிவிக்கின்றது. இலங்கையில் உயர் நீதிமன்றம் கொழும்பில் மட்டுமே உள்ளது. இதன் மூலம் கொழும்பிற்கு வெளியே வாழ்பவர்களும் விசேடமாக தமிழ் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் வாழ்பவர்களுக்கும் அடிப்படை உரிமை மீறல்களின் போது சட்ட நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்தை சிறப்பாக அணுக முடியாமல் உள்ளது. கொழும்பிற்கு வெளியே வாழ்பவர்கள் இவ்வாறான அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்ய தொடர்ச்சியாக பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

ஊடக சுதந்திரம் இந்த அறிக்கையில் ஊடக சுதந்திரம் தொடர்பாக தெரிவிக்கையில்

இலங்கையில் ஊடக சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் நிச்சயமில்லாத, ஆபத்தான, அபாயகரமான நிலையிலேயே உள்ளன. ஊடகவியலாளர்கள் பாதுகாப்புப் படையினரால், அரசியல் கட்சிகளால், என பலதரப்பட்டவர்களாலும் தாக்குதல்களை எதிர்நோக்குகின்றனர்.

இன ரீதியாக தமிழ் ஊடகவியலாளர்களே படையினரது இலக்காக இருக்கின்றார்கள். ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் நியாயமற்ற கைதுகளும் விசாரணைகளின்றி தடுப்புக் காவலில் வைத்திருப்பதும் இலங்கையில் மிகவும் பொதுவான ஒரு விடயமாக இருக்கின்றது.

அரசியல் காரணங்களுக்காக ஊடகவியலாளர்கள் மீதும் ஊடகங்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையில் சட்ட விரோத கைதுகள், ஆட்கடத்தல்கள், ஆயுதக் குழுக்களின் சட்ட விரோத செயற்பாடுகள், கைதுகளின் போது மூர்க்கமான சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள், அடிப்படை உரிமை மீறல்கள், வாழும் உரிமை மறுக்கப்படல் என்பன பொதுவாக நடைபெறும் சம்பவங்களாக இருப்பதை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இலங்கை குறித்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, அரசியல் சுதந்திரம், பாதுகாப்புப் படையினரின் மனித உரிமை மீறல்கள், காணாமல்போதல், வாழும் உரிமை மறுக்கப்படல், நியாயமற்ற கைதுகளும் தடுத்து வைத்தல் மற்றும் சித்திரவதை, நீதித்துறையும் நீதி நிர்வாகமும், தேசிய மனித உரிமை அமைப்புகளின் வினைத்திறண், மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான அழுத்தங்கள், ஊடக சுதந்திரம், சுதேச மக்களின் உரிமை மீறல்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள், சிறுவர் உரிமைகளுக்கெதிரான வன்முறைகள், பாலியல் வன்முறைகளும் கடத்தலும், சிறுவர்கள், இடைத்தங்கல் முகாம்களின் நிலவரமும் அகதிகளின் மீள்குடியேற்றச் செயற்பாடுகளும், சிறைக்கைதிகளின் உரிமைகள் மீதான மீறல்கள், சிறுபான்மை இன மக்களின் உரிமை மீதான மீறல்கள், சிறிலங்கா இராணுவத்தின் சர்வதேச மனித உரிமை சட்ட மீறல்களான கொலைகள், கடத்தல்கள், சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் ஆகிய 21 உப தலைப்புக்களின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன.

www.sankathi.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.