Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அகதிகளின் நிலைமை வேதனை அளிக்கின்றது:- சு.ப.வீரப்பாண்டியன்.

Featured Replies

தமிழ் அகதிகளின் நிலைமை வேதனை அளிக்கின்றது:- சு.ப.வீரப்பாண்டியன்.

தமிழ் அகதிகளின் நிலைமை வேதனை அளிக்கின்றது. சொந்த மண்ணிலேயே அகதிகளாகப் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களின் துயரைத் துடைக்க தமிழகம் விரைந்து செயற்பட வேண்டும். என தமிழகத்தில் தமிழக மக்கள் ஈழத் தமிழர்களின் துயர் கண்டு மனக் கொதிப்படைந்துள்ளனர். அந்த மக்களை காக்க தமிழகத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று திராவிட இயக்க தமிழர் பேரவை அமைப்பாளரும், பேராசிரியருமான சுப.வீரப்பாண்டியன் தெரிவித்தார்.

இலங்கையில் துயரால்வாடும் தமிழர்களைக் காக்கவேண்டுமென தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியள்ளார். சோனியாகாந்தி அம்மையாரும் இலங்கை இராணுவத்துக்கு ஆயுத உதவி வழங்கப்படமாட்டாது என முதல்வருக்கு கடிதமூலம் அறிவித்துள்ளார். இன்றைய நிலையில் இது பெரும் திருப்பமாகும் என்றும் அவர் நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கேள்வி: இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் நெருக்கடிகள் குறித்து தமிழக மக்கள் எந்தளவு தூரம் அறிந்து வைத்துள்ளனர்?

பதில்: இலங்கையில் தமிழ் மக்கள் படும் இன்னல்கள் தமிழக மக்களிடையே பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சோலை தாக்குதல் சம்பவத்தையடுத்து தமிழக மக்கள் தாமாகவே விரும்பி போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் தமிழருக்கு எதிரான கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தமிழகத்தைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து தமிழக முதல்வரும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். தமிழக மக்கள் மத்தியில் இன்று தோன்றியுள்ள எழுச்சி பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. தமிழர்களின் துயரங்கள் தொடர்பில் தமிழக மக்கள் மிகுந்த வேதனை கொண்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் கணக்கில் எடுக்கப்படவில்லை. வாய் திறந்து பேச முடியாதிருந்தது. ஆனால் கலைஞர் ஆட்சி மலர்ந்த கையோடு ஈழத் தமிழர் விவகாரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை இனியும் பொறுமையோடு பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தமிழக மக்கள் எண்ண ஆரம்பித்து விட்டனர்.

கேள்வி: இலங்கைத் தமிழருக்கு உதவ என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள்?

பதில்: உணவு நிவாரணங்கள் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவு மற்றும் மருந்து வகைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தொடர்பான சேகரிப்பு பணி எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதிவரை நடைபெறும். தமிழகம் முழுவதும் சேகரிப்போம். சேகரிக்கப்பட்டவற்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு அனுப்பிவைப்போம்.

இவை மாத்திரமன்றி அரசியல் இராஜதந்திரியாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் தமிழக அரசை விழிப்படையச் செய்யும் ரீதியில் உரிய அழுத்தங்களை வழங்குவோம். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இலங்கைத் தமிழர் தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். எனவே அவர் தனது செல்வாக்கைப் பிரயோகித்து இலங்கையில் வாழும் தமிழ் மக்களை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை மேலோங்கி வருகின்றது.

இதேவேளை தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் காலமானதையடுத்து முதல்வர், மற்றும் தமிழக தலைவர்கள் பலரும் கட்சி பேதமின்றி அனுதாப அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இவையாவும் பெரும் மனமாற்றத்தையே உண்டு பண்ணியுள்ளது. அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு எமக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியபோதிலும் தமிழகத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து கவலை தெரிவித்துள்ளமை துன்பத்திலும் மகிழ்ச்சியைத்தந்துள்ளது.

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி மிகுந்த அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ளாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் உறுதியாக இருப்பது அவசியம். ஆனால் இந்திய அரசின் குரலில் உறுதியில்லை, வலிமை இல்லை. இதனை தமிழக அரசு சீர்செய்ய வேண்டியது அவசியமாகும். தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தற்பொழுது காட்டிவரும் ஆர்வம் நிச்சயம் மத்திய அரசின் உறுதியான நடவடிக்கைக்கு உதவுமென்பதில் சந்தேகமில்லை. தமிழக முதல்வருக்கு டில்லியில் மிகுந்த செல்வாக்குள்ளது. அவர் அதனை நிச்சயமாக பயன்படுத்தி ஈழ மக்களுக்கு ஆதரவாக குரலெழுப்புவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் கட்சி பேதமின்றி சகல தரப்பினரும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் அண்மையில் தமிழக சட்ட சபையில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தீர்மானமொன்று முதலமைச்சர் தலைமையில் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இவையாவும் சிறந்த முன்னேற்றகரமான விடயங்களாகவே மாறி வருகின்றன.

தமிழ் அகதிகளின் நிலைமை வேதனை தருவதாகவும் உள்ளது. அவர்களும் சொந்த மண்ணிலேயே அகதிகளாகி பெரும் துயருற்றுள்ளனர். இதனை தமிழகம் நன்குணர்ந்துள்ளதுடன் அகதிகளாக தமிழகம் வரும் மக்களுக்கு தம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

கேள்வி: புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் காலமானதையடுத்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உணர்வலைகள் குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: அன்ரன் பாலசிங்கத்தின் இழப்பு ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். விடுதலை இயக்கமொன்றுக்கு அதன் இராணுவ தளத்தில் மாத்திரமன்றி அரசியல் தளத்திலும் சரியாக செயற்பட வேண்டியது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் அதனை சரியாக செய்து வந்த பெருமை அமரர் அன்ரன் பாலசிங்கம் அவர்களையே சாரும். தமிழர் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தியதுடன் பலரது பார்வையையும் அதில் ஈர்த்தவர் அமரர் அன்ரன் பாலசிங்கம் என்றால் மிகையில்லை. இதன் காரணமாகவே தமிழக அரசியல் கட்சிகள் பலவும் ஒன்றிணைந்து அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்ததுடன் தொடர்ந்தும் அஞ்சலிக் கூட்டங்களை நடத்தி வருகின்றன.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அண்மையில் ஆற்றிய மாவீரர் உரை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: சகலவிதமான நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புக்களும் கைநழுவியுள்ள நிலையில் வேறு மார்க்கமின்றி அவர் தமிழீழமே ஒரே வழி என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவரது கூற்றுக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாய நிலை தோன்றியுள்ளது. அதனை தமிழக தலைவர்களும் உணர்ந்து வருகின்றனர்.

கேள்வி: இலங்கை விவகாரம் குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவித்துவரும் கருத்துக்கள் கொடுத்துவரும் முக்கியத்துவம் தொடர்பாக என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: இது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்திய ஊடகங்கள் சில பத்திரிகா தர்மம் குறித்தோ நடு நிலைமை குறித்தோ சற்றும் சிந்திப்பது கிடையாது. குறிப்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றும் துக்ளக் போன்ற சிறு சஞ்சிகையும் மற்றும் தமிழ் நாளேடு ஒன்றும் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவலங்களை மிகவும் கொச்சைப்படுத்தி நடுநிலைமையற்ற செய்திகளையே வெளியிட்டு வருகின்றன.

அவை தமது பேனாக்களில் மையை விடுவதற்குப் பதிலாக விசத்தை விட்டு அதனை கக்கி வருகின்றன. அவ்வாறான பத்திரிகையையும் பத்திரிகையாளர்களையும் ஈழ மக்கள் மாத்திரமல்ல தமிழக மக்களே வெறுத்து ஒதுக்கி வருகின்றனர். குறிப்பாக ஒரு ஆங்கில நாளேடு தமிழர்களுக்கு சாதகமான செய்திகளை உள்பக்கத்தில் பிரசுரித்துவரும் அதேவேளை தமிழர்களுக்கு பாதகமான செய்திகளை முன்பக்கத்தில் பிரசுரித்து வருகின்றது. இவர்களை நினைத்துப் பார்க்கையில் வெறுப்பாகவும், வேதனையாகவும் உள்ளது.

உண்மைக்குப் புறம்மான இவர்களின் செயற்பாடுகளை தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். இவ்வாறான இவர்களின் செயற்பாடுகள் மறுபுறம் அவர்களின் தரத்தை குறைப்பதாகவே அமைந்துள்ளன என்பதை அவர்கள் உணராதிருப்பதுதான் மிகவும் வருத்தத்துக்குரியதாகும்.

www.sankathi.com

Edited by YARLVINO

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.