Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையை ஓரிருதினங்களில் கைப்பற்ற முடியும் - சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாகரையை ஓரிருதினங்களில் கைப்பற்ற முடியும் பொதுமக்களுக்காக பொறுமை காத்து வருகின்றோம் பாலசிங்கத்தின் இழப்பு புலிகள் இயக்கத்திற்கே பாரிய இழப்பாகி விட்டது. ஜெனரல் சரத் பொன்சேகா

[Friday December 22 2006 08:57:52 AM GMT] [virakesari.lk]

இராணுவத் தளபதி கூறுகிறார் வாகரைப் பகுதியில் பொதுமக்கள் நிலைகொண்டிருப்பதனால் புலிகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்களை நடத்த முடியாதுள்ளது. தரை மார்க்கமாகவும் ஆகாயமார்க்கமாகவும் தாக்குதல் நடத்தி ஓரிரு தினங்களில் வாகரையை எம்மால் கைப்பற்ற முடியும். ஆனால் பொதுமக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பொறுமை காத்துவருகின்றோம் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

வாகரையில் தங்கியுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்ததும் படைநகர்வுகளை மேற்கொண்டு முன்னேறுவோம். எமது தாக்குதலுக்கு எதிர்தாக்குதலை மேற்கொள்வதற்கான ஆட்பலம் புலிகள் மத்தியில் தற்போது இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். யுத்த செய்திகளை சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு இராணுவ தளபதியும் அவரது மனைவி அனோமா பொன்சேகாவும் நேற்று முன்தினம் இரவு விருந்துபசாரம் ஒன்றினை நடத்தினர். இங்கு உத்தியோக பற்ற முறையில் கருத்து தெரிவிக்கையிலேயே இராணுவதளபதி பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வாகரையை நோக்கி படைநகர்வுகளை மேற்கொண்டு வெகுவிரைவில் அப்பகுதியினை கைப்பற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் நிலவுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகரை பகுதியை நோக்கி படை நகர்வுகளை மேற்கொண்டு வெகுவிரைவில் வாகரையை கைப்பற்றிவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றது.

வாகரையில் கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதியில் இருந்து இன்று வரை விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையே தாக்குதல் இடைக்கிடை நடைபெற்று வருகின்றது. இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் 480 பேர் பலியாகியுள்ளனர். படைத்தரப்பில் 31 பேர் பலியாகியும் 137 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

சாம்பூரில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் உட்பட வாகையில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானவர் வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக விடுதலைப் புலிகளும் படையினருக்கும் இடையில் இடம் பெற்றுவரும் மோதல்கள் காரணமாக அங்கு வசித்து வருபவர்கள் அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்க

கடந்த 20 வருடங்களில் இப்படி சவால்விட்ட எத்தனையோ பேர்களை பார்த்துவிட்டோம்.

இரவு விருந்தில எதையாவது மண்டிப் போட்டு பக்கத்தல அம்மாவும் இருக்கிற சோக்கில படம் காட்டியிருக்கிறர் போல கிடக்கு. இழப்புகளையும் இடம் மாறி சொல்லிப்புட்டாரு போல இருக்கு.பெரிய அண்ணாமாரேல்லாம் அந்தப்பக்கத்தில நிக்கினம் என்டு கேள்வி பாப்பம். எதுக்குள்ளாள யாh ஓடுரதென்டு. அட அப்ப இவைக்கு மேல கருணாகத்தின்ட ஆக்களும் நிக்கினமோ அதுவும் நல்லதுக்குத்தான்.

ஈழத்திலிருந்து

ஜானா

lisa, இப்படி சவால் விட்ட பலபேரை பார்த்துவிட்டோம் அல்ல, காணவேயில்லை. ஆனலும் இந்த அள்ளுக்கு கொஞ்ச லக் இருக்கு என்றே சொல்லவேண்டும். அந்தக் குண்டுவெடிப்பிலும் தப்பினானே. எனக்கு ஆசை இப்பிடியான ஆட்களை ஒரு குண்டால் அழிப்பதை விட உயிரோடு பிடித்து சாப்பாடு இல்லாமல் காட்டுக்குள் விடவேண்டும். அப்போதுதான் இவனால் கஸ்டப்பட்டு இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.