Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதுக்குடியிருப்பில் காணி அபகரிப்பு - மீட்டுத்தருமாறு கிராம மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பில் காணி அபகரிப்பு; மீட்டுத்தருமாறு கிராம மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

[ Wednesday,10 February 2016, 05:34:32 ]   
land1.jpg

நானாட்டான் - புதுக்குடியிருப்பு, சூரிய கட்டைக்காடு கிராமத்தில் காணிகள் உரிய முறையில் எல்லையிடப்பட்டுள்ளதா என பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரும் வருகை தந்து பார்வையிடவில்லை என அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அக்கிராம மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

நானாட்டான் புதுக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி எல்லைக்கற்கள் போடப்பட்ட இடங்களை நில அளவைகள் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

குறித்த எல்லைக்கற்கள் சரியான முறையில் போடப்பட்டுள்ளதாக வருகை தந்தவர்கள் கூறிச் சென்றுள்ளனர்.

எனினும் குறித்த காணிகளை உரிய அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை என்பது தமக்கு வேதனையளிப்பதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

தனி நபர்களுக்கு அக்காணிகளை கடந்த 1989 ஆம் ஆண்டளவில் 'போமிற்' அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 1989 ஆம் ஆண்டு போமிற் வழங்கப்பட்டதன் பின்னர், அவர்கள் பராமரிப்பு செய்த காணிகள் எனக் கூறி இக்கிராம மக்கள் குடியிருந்த மேட்டு நிலக்காணிகளை உரிமை கோரி வருகின்றனர்.

இந்த மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியா சென்ற நிலையில் தனிநபர்கள் 4 பேரும் இக்காணிகளில் மண் அகழ்வு மேற்கொண்டு தற்போது ஏக்கர் கணக்கில் வயற்காணிகளாக ஆக்கியுள்ளனர்.

இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு மக்களின் காணிகளை தங்களுடையது என உரிமை கோரி வருகின்றனர்.

குறித்த தனிநபர்கள் நான்கு பேருக்கும் கால்நடைகள் பராமரிப்பு செய்வதற்கு மேட்டு நிலக்காணியில் ஒரு ஏக்கர் வீதம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதாக அக்கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் இக்கிராமத்தில் திட்டமிட்ட ஒரு காணி அபகரிப்பே நடந்தேறியுள்ளதாகவும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியா சென்ற நிலையில் எவ்வாறு இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அக்கிராம மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.  

தற்போது இக்கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு குடியமர 20 பேர்ச் காணிகள் கூட இல்லாத நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே, இக்கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு இக்கிராம மக்களுக்கு உரிய காணிகளை மீட்டுத்தருமாறு புதுக்குடியிருப்பு, சூரிய கட்டைக்காடு கிராம மக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

http://ibctamil.com/news/index/18487

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.