Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகப் பிரிப்பு பெரும் சந்தேசகத்தை ஏற்படுத்தியுள்ளது:- ஜெயானந்தமூர்த்தி.

Featured Replies

தமிழர் தாயகப் பிரிப்பு பெரும் சந்தேசகத்தை ஏற்படுத்தியுள்ளது:-ஜெயானந்தமூர்த்தி.

வடகிழக்கு மாகாணத்தை பிரித்து வடக்குக்கு வேறாகவும் கிழக்குக்கு வேறாகவும் இரு நிருவாக அலகுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தை மாத்திரம் கிழக்கிலிருந்து வேறாக்கி தனி நிருவாக அலகு உருவாக்கப்பட்டுள்ள செயலானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழர் தாயகத்தைத் துண்டாடும் சிங்கள பேரினவாதத்தின் ஒரு திட்டமிட்ட செயலாகுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றவென்றே மாகாணசபை முறைமை சிறிலங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 1987 ஆம் ஆண்டு அப்போதைய சிறிலங்கா ஐனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இந்திய பிரதமர் ராஐPவ் காந்தியும் செய்து கொண்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. இதன்பிரகாரம் தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டது.

ஆனால் அந்த மாகாணசபை திட்டம்கூட யாருடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டதோ அதன்படி தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்குவம் வகையில் அது செயற்படவில்லை. மாறக சிறிலங்காவில் வடகிழக்கு மாகாணத்தைத் தவிர எனைய பகுதியில்தான் அது சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் வடகிழக்கு மாகாணசபைக்கு சிங்கள ஆளுனர் நியமிக்கப்பட்டு சிறிலங்கா அரசின் நேரடி கண்காணிப்பில் அது இயங்கியதுடன் தமிழ் மக்களின் எந்தவொரு அபிலாசசைகளையும் இம்மாகாணசபை நிறைவேற்றவில்லை. இதனால் மாகாணசபை முறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாக இருந்தனர்.

இந்த வகையில் வடகிழக்கு தாயகத்தை கூறு போடும் சிங்கள பேரினவாதத்திட்டத்தின் படி ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவின் அனுசரணையுடன் வடகிழக்கு மாகாணம் இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டு தற்போது அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு எதிர்வரும் ஐனவரி மாதத்துடன் நிருவாக அலகுகள் இயங்கவுள்ளன. எனினும் கிழக்கு மாகாணத்திலிருந்து திருகோணமலை மாவட்டம் தனி அலகாகப் பிரிக்கப்பட்டு தனி நிருவாக அலகு உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழர் தாயகத்தைத் துண்டாடும் பாரிய சதி என்பதுடன் தமிழர் தாயகத்தின் தலைநகரை சிங்கள மயமாக்கும் ஒரு நடவடிக்கையாகவும் உள்ளது.

சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன் திருகோணமலை மாவட்டத்தை எதிர்காலத்தில் வடமத்திய மாகாணத்துடன் இணைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால் சிறிலங்கா அரசு தற்போது அவசர அவசரமாக வடகிழக்கு மாகாணத்தைத் துண்டாடி மூன்று நிருவாக அலகுகள் அமைத்துள்ள நடவடிக்கையானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் தற்போதைய இனப்பிரச்சினைத் தீர்வானது இதனால் இன்னும் மோசமடையக் கூடிய நிலையே தோன்றும் என்பதுடன் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பிரதான சக்தியான இந்தியாவின் நோக்கத்தையும் சிதறடிக்கும் செயலாகவும் உள்ளது. ஏனெனில் வடகிழக்கு மாகாணம் இணைந்திருக்க வேண்டும் என்பதையே தற்போதும் இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இதை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சிறிலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவிடம் அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன் தமிழ் மக்களின் எந்தவொரு கருத்தையும் கேட்டறியப்படாமல் இவ்வாறு வடகிழக்கு மாகாணம் கூறுபோடப்படுவதை தமிழ் மக்கள் முற்றாக எதிர்த்துள்ளதுடன் கிழக்கு மாகாண மக்கள் இணைந்த வடகிழக்கு தாயகமே தமது பூர்வீகத்தாயகம் என்பதில் உறுதியாக உள்ளதுடன் வடகிழக்கு இணைந்தே இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

www.pathivu.com

Edited by YARLVINO

இதுல சந்தேகப்பட என்ன இருக்கு அண்ணாச்சி?

ஒனாய் டக்கிள்ஸும் காமக்கிழவன் ஆனந்த சங்கரியும் கரிநாகம் கருணாவும்

எப்பா சிங்களவானிடம் நக்க தொடங்கினார்களோ அன்றே சிங்களவன் முடிவு எடுத்துட்டான் தமிழனை அடிமை ஆக்கி வைச்சு இருக்கலாம் என்று இதுக்கு

இந்தியாவின் சொறிபிடிச்ச வெளிவிவகார கொள்கை வேற துணை போகிறது...........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.