Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் மகிழ்வுடன் இருக்கின்றோம்:- ஜோர்தானிய கப்பல் கப்டன்.

Featured Replies

விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் மகிழ்வுடன் இருக்கின்றோம்: ஜோர்தானிய கப்பல் கப்டன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் மகிழ்வுடன் இருக்கின்றோம் என்று ஜோர்தானிய கப்பலின் கப்டனான ஈராக் நாட்டைச் சேர்ந்த ரமாஸ் எஸ் அப்துல் ஜபார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் காக்கி நாடாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்னாபிரிக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இலங்கைக்கு வடக்குப் பகுதி கடல் பரப்பில் கப்பலின் இயந்திரம் செயலிழந்து விட்டது.

அதனை திருத்தும் நிலை எம்மால் இயலாது போன நிலையில் கப்பல் கரைக்கு நெருக்கமாக அடித்துச் செல்லப்பட்டபோது எமது கப்பலை சில படகுகள் சூழ்ந்து விட்டன.

படகுகளில் இருந்தவர்கள் கப்பலில் ஏறி விசாரித்த போது எமது நிலையை தெரிவித்தோம். அப்போது அவர்கள், தாங்கள் விடுதலைப் புலிகள் என்றும் இந்தப் பகுதி தமது கட்டுப்பாட்டுப் பகுதி என்றும் கூறிய பின்னர் அவர்கள் தமது படகுகளில் எம்மை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

சிறிலங்கா அரசு கப்பல் விவகாரம் பற்றி மேற்கொண்டு வருகின்ற பரப்புரை பற்றிக் கேட்டபோது,

அரசியல் கதைக்க விரும்பவில்லை என்றும் ஆனால் தாம் விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்டு தற்போது மகிழ்வாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கப்டனாகிய தான் கப்பல் நிறுவனத்துக்கு நிலைமையைத் தெரிவித்து விட்டதாகவும் குறிப்பிட்ட அவர், தமது மாலுமிகள் தொலைபேசி வழியாக தமது குடும்பத்தினருடன் உரையாடி விட்டதாகவும் தெரிவித்தார்.

தற்போது எந்த ஒரு குறையும் இல்லாமல் விடுதலைப் புலிகளால் தாங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் மகிழ்ச்சியுடன் உள்ளதாகவும் தமது குடும்பத்தினருடன் இணையும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் கப்பல் கப்டன் மற்றும் மாலுமிகள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த சரக்குக் கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்ட மாலுமிகளை அவர்களின் உறவினர்களுடன் இணைக்கும் தொடர்புகளை விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

ஜோர்தான் நாட்டிற்குரிய "ஃபாரா - 3" என்ற சரக்குக் கப்பல் இயந்திரம் செயலிழந்த நிலையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை கடற்புலிகளால் காப்பாற்றப்பட்டு மாலுமிகள் மீட்கப்பட்டனர்.

கப்பல் முல்லைத்தீவு கடற்பரப்பில் தரை தட்டியுள்ளது. முற்று முழுதாக இயந்திரம் செயலிழந்த நிலையில் கப்பல் நகரவே முடியாத சூழலில் அது முல்லைத்தீவு கரையை நோக்கி தள்ளப்பட்டுக்கொண்டிருந்தபோ

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

எம்.வி.பறா 3 கப்பல் மாலுமிகளை செஞ்சிலுவைக்குழு பிரதிநிதி பார்வையிட்டார்.

தமிழீழவிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இயந்திரக்கோளாறுக்குட்பட்ட கப்பலில் தத்தளிததுக்கொண்டிருந்த இருந்த நிலையில் விடுதலைப்புலிகளால் காப்பாற்றப்பட்ட 25மாலுமிகளை இன்று 4.00மணியளவில் விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்தில் சமாதானச் செயலக பணிப்பாளர் புலித்தேவன் முன்னிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் கிளிநொச்சி வதிவிடப் பிரதிநிதி ஹற்றியா லோறன்ஸ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது குறித்து சங்கதி இணையத்தளத்திற்கு ஈராக்நாட்டைச் சேர்ந்த கப்பல் கப்டன் றமாஸ் எஸ்.அப்துல் ஜபார். கூறுகையில்

கடலில் கப்பல் இயந்திரக் கோளாறுக்குட்பட்டு தத்தளித்தாகவும் இது கடற்கரையிலிருந்து எட்டு கடல் மையில் தொலைவில்வைத்து நடந்ததாகவும் கூறினார் இதன்போது விடுதலைப்புலிகளால் தான் உட்பட 25கப்பல் மாலுமிகளும் எவ்விதகாயங்களும் சேதங்களும் இன்றி பாதுகாப்பாக மீட்க்கப்பட்டதாகவும் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தங்களை கொழும்பினூடாக தத்தம் நாடுகளுக்கு அனுப்ப தொடர்புகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கப் பிரதிநிதி உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார்.

www.sankathi.com

Photos:-

http://www.sankathi.org/news/index.php?opt...20&Itemid=1

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Edited by YARLVINO

20061224001.jpg

20061224003-1.jpg

20061224002.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.