Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வி.நவரத்தினம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் விருது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வி.நவரத்தினம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் விருது

ஞாயிற்றுக்கிழமை 24 டிசெம்பர் 2006 (யோகராஜன்)

தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.11.2006அன்று இழந்துவிட்டது. அமரர் வி.நவரத்தினம் அவர்கள் அற்புதமான இலட்சியவாதியாகத் திகழ்ந்தார். தான் அணைத்துக்கொண்ட இலட்சியத்திற்காக நூற்றாண்டொன்று முழுவதும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாமல் உயர்ந்த வாழ்வு வாழ்ந்தார். தனது இனப்பற்றாலும் தேசப்பற்றாலும் தமிழ்ச் சமூக மேன்மைக்காக இறுதிவரை சேவையாற்றினார்.

தனது மக்கள் விடுதலை அடையவேண்டுமென்ற உயரிய எண்ணத்திற்கு தனது அறிவாற்றல், படைப்பாற்றல், செயலாற்றல் அனைத்தையுமே ஒருங்கிணைத்து தேசப் பணிபுரிந்தார். ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வி.நவரத்தினம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் விருது

ஞாயிற்றுக்கிழமை 24 டிசெம்பர் 2006 (யோகராஜன்)

www.nitharsanam.com

****

தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகருள் ஒருவரும், தமிழர் சுயாட்சிக் கழகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் காவலூர் எம்.பி.யுமான வி.நவரெத்தினம் அவர்கள் 97வது வயதில் கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கனடா மொன்றியலில் இயற்கை எய்தினார்.

தமிழினம் தன்மானமுள்ள, சமஅந்தஸ்த்துள்ள சுதந்திர இனமாக வாழ வேண்டும் என்பதற்காக அவர்களுக்கென தனியானதோர் அரசியல் கட்சி அத்தியாவசியம் எனக்கருதி முதலில் தமிழரசுக் கட்சியை உருவாக்குவதில் தந்தை செல்வாவுக்கு வலக்கரமாய் இருந்து செயல்பட்டவர் திரு.வி.நவரெத்தினம். இனவாதக் கொள்கையினைக் கொண்ட சிங்கள அரசுகளுடனும், இனவெறி பிடித்த சிங்கள மக்களுடனும் தமிழ் மக்கள் இணைந்து வாழ முடியாதென்ற நிலைப்பாடு இனப்படு கொலைகளின் மூலம் ஊர்ஜிதமாகியபோது தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆழும் நிலையினை ஏற்படுத்த வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் தமிழர் சுயாட்சிக் கழகத்தை உருவாக்கியவர் திரு. வி.நவரெத்தினம். அதாவது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முதல்முதலில் தனி ஒரு மனிதனாக ஆரம்பித்தவர். அவர்.சமரச ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டு, சமாதானப் பேச்சுக்கள் வெறும் பசப்பு வார்த்ததைகளாகி தமிழினம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டும் சித்திரவதைப் படுத்தப்பட்டும் வருவதைக் கண்டு விரக்தியுற்று போராட்டத்தின் மூலமே தமிழினம் தன்னுரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென்ற தீர்க்கதரிசனத்துடன் விடுதலைப் போராட்டத்துக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தவர் திரு. வி.நவரெத்தினம். நவரெத்தினம் அவர்களின் அரசியல் தீர்க்கதரிசனத்திற்கு ஒரு சான்றை மட்டும் இங்கே ஞாகப்படுத்தலாம் என்று நினைக்கின்றேன்.

டட்லி சேனநாயக்காவுடன் தமிழரசுக்கட்சி இணைந்து ஆட்சியில் இருந்த காலம் அது. அப்போது ஆட்பதிவு சட்டமூலம் ஒன்றை டட்லி அரசு அறிமுகம் செய்தது. இது இலங்கையில் வாழும் தமிழ்ப்பேசும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பாரதூரமான விழைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இச்சட்டத்தின் பிரகாரம் இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவரும் ஆட்பதிவுத் திணைக்களத்தில் பதிவுசெய்து கொண்டபின்னர் அவர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடனான அடையாள அட்டையினை தங்களுடன் எப்பொழுதும் கொண்டு திரிய வேண்டும். இந்தியத் தமிழர்கள் முஸ்லிம்கள் கள்ளத்தனமாக இலங்கைக்குள் புகுவதை தடை செய்வதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்படுவதாக டட்லி அதற்கு விளக்கமளித்தார்.

இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போன்ற இச்சட்ட மூலம் தமிழ் மக்களைத் துன்புறுத்தும் நோக்குடன் குறிவைக்கப்படுகிறது. எது நடந்தாலும் இச்சட்ட மூலத்தை நான் எதிர்த்தே வாக்களிப்பேன் என்று திரு. நவரெத்தினம் கூறி அவ்வாறே செய்தார். எதிர்க்கட்சியினர் கூட அதனை ஆமோதித்து வாக்களித்த போது அரசில் இணைந்திருந்த தமிழரசுகட்கட்சியின் உறுப்பினர் ஒருவர் எதிர்த்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் மறுநாளே அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். அவர் அன்று கூறியதைப் போலவே இன்று தமிழ் மக்களது அடையாள அட்டையின் மூலம் அவர்களை இலகுவாக இனம் கண்டு இராணுவத்தினர் சுற்றி வழைத்து வருகின்றனர். இதனைத்தான் நவரத்தினம் ஐயா அன்றே சொல்லி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

தமிழரசுக் கட்சியின் மூளையெனப் போற்றப்பட்ட திரு.நவரெத்தினத்தை வெளியேற்றியதன் மூலம் மூளையை இழந்துவிட்ட அக்கட்சியிலிருந்து விலகிய அவர் தமிழினத்துக்குத் தனியான ஆட்சியினை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆதங்கத்துடன் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற கட்சியினை ஆரம்பித்தார். தனது கொள்கையில் ஆர்வங்கொண்டு வந்த இளந்தலைமுறையினருக்கு திரு.நவரெத்தினமும் அவரது கட்சி உறுப்பினர்களும் அரசியல் ஆசான்களாகத் திகழ்ந்தனர். அதன் மூலம் தமிழீழ இயக்கம் உருவாக வித்திட்ட பெருமை இவரையே சாரும்.

**************************************

சில விடயங்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

யாழுக்கு புது தலையிடி வந்துட்டுது போல?

வி.நவரத்தினம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் விருது

ஞாயிற்றுக்கிழமை 24 டிசெம்பர் 2006 (யோகராஜன்)

தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.11.2006அன்று இழந்துவிட்டது.

11ஆம் மாதமா? 12 ஆம் மாதமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.