Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூடியது: தாயகத்தை கைப்பற்ற சதி- வைகோ ஆவேச பேச்சு

Featured Replies

பரபரப்பான சூழ்நிலையில் ம.தி.மு.க. உயர் நிலைக் கூட்டம் தாயகத்தில் இன்று காலை கூடியது.

இதில் கலந்து கொள்வதற்காக பொது செயலாளர் வைகோ காலை 10 மணிக்கு தாயகம் வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் கூடி இருந்தனர்.

வைகோவைப் பார்த்ததும் புரட்சிப் புயல் வைகோ வாழ்க என்று உணர்ச்சி பொங்க வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர். தாயகம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தொண்டர்கள் மத்தியில் வைகோ ஆவேசமாக பேசினார்.

அப்போது உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் விட்டு கதறி அழுதார். வைகோ வந்ததும் கூட்டம் தொடங்கியது. முன்னதாக தாயகத்தில் தொண்டர் வைத்திருந்த கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார். நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கேக் வழங்கினார்.

தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசியதாவது:-

ம.தி.மு.க.வை எத்தனையோ கஷ்டங்களை சந்தித்து வளர்த்தோம். 5 உயிர்களை இழந்தோம். தாயகம் என்ற பெயரில் புதிய கட்சி அலுவலகத்தையும் திறந்தோம்.

இந்த அலுவலகம் சாதாரணமாக கட்டப்பட்டது அல்ல. ஜோசப் என்பவர் ஏசு பிறந்த ஊரான பெத்லகேம் சென்று அங்கிருந்து புனித நீரை எடுத்து வந்து தெளித்து வாஸ்து முறைப்படி கட்டப்பட்டது.

13 வருடங்களாக எந்த வன்முறையிலும் ஈடுபடாமல், யாருக்கும் தீங்கு செய்யாமல் கட்சி நடத்துகிறோம். கலவரம் நிற்க வேண்டும், சாந்தி தழைக்க வேண்டும் என்பதே விருப்பம். கிறிஸ்துமஸ் பண்டிகையை கூட அந்த நோக்கத்தில்தான் இன்று கொண்டாடுகிறார்கள்.

ம.தி.மு.க. உருவான வரலாறை நினைத்துப்பார்க்கிறேன். கொலைகார பழி சுமத்தி வெளியேற்றினார்கள். பலர் மடிந்தனர். பொட்டல் காட்டில் நின்று கட்சி வளர்த்தோம். வீதி வீதியாக பணம் திரட்டி புதிய கட்டிடம் கட்டினோம். இதற்காக பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல. இந்த தாயகம்தான் எனக்கு கோவில், மசூதி, தேவாலயம்.

குருவிக்குத்தான் கூடு கட்டிய கஷ்டம் தெரியும். ஏழை விவசாயி மனைவி மக்களுடன், மண்ணைப் பிசைந்து சுவர் எழுப்பி ஓலைகள் கட்டி குடிசை செய்து உள்ளே குடியேறுகிறான். அந்த விவசாயிக்குத்தான் கூரை வீட்டின் அருமை தெரியும். அவர்களைப் போலத்தான் தாயகத்தை கட்டினோம்.

1994 ஜனவரி 15-ல் இந்த அலுவலகம் திறக்கப்பட்ட போது என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தோம். அண்ணாவின் தாயகம் நினைவுக்கு வந்தது. அந்த பெயரை சூட்டினோம். இது எல்லோரும் கூடும் தாயகம் நம் அனைவருக்கும் வீடு. இதனை உருவாக்கப்பட்டபாடுகள் ஏராளம்.

இப்படி வளர்க்கப்பட்ட இயக்கத்தை நிர்மூலம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் யாரும் ஆத்திரப்படக்கூடாது. அமைதி காக்க வேண்டும். பழிச்சொல்லுக்கு பழக்கப்பட்டவர்கள் நாம் துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். சாந்த குணம் உள்ளவர்கள் பாக்கிய வான்கள்.

13 வருடங்களாக கட்சி நடத்துகிறோம். எந்த கலவரத்திலும் ஈடுபட்டது இல்லை. பொதுமக்களுக்கு இடைïறு செய்தது இல்லை. முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நடை பயணம் சென்றேன். 5 நிமிடம் கூட போக்குவரத்து நின்றது இல்லை.

நமது கட்சிதான் தமிழ் நாட்டுக்கு தேவையான நல்ல கட்சி. ஜெயிக்கலாம், ஜெயிக்காமல் போகலாம். ஓட்டு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். ஆனால் தமிழ்நாட்டுக்கு நல்ல கட்சி நமது கட்சிதான். தற்போது ம.தி.மு.க.வை அழிக்க சில திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

அ.தி.மு.க. உடன்பாட்டில் இருந்து நம்மை வெளியேற்றுவது முதல் திட்டம். கலவரம் செய்து நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க. என்று அறிவிக்க செய்வது இன்னொரு திட்டம். சதி திட்டங்கள் எங்கு வகுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.

கடந்த மாதம் 27-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சி.ஐ.டி. நகர் வீட்டில் முதல்- அமைச்சரை இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இன்று காலை கூட செஞ்சி ராமச்சந்திரன் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியுள்ளார்.

200-க்கும் மேற்பட்ட கிரிமினல்கள் போக்கிரிகளுடன் தாயகத்துக்கு உள்ளே வர திட்டமிட்டதாக தகவல் கிடைத்து உள்ளது. அவர்களை தடுத்தால் கலவரம் செய்யவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அவர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

கடைசி நேரத்தில் இது மாறலாம். உள்ளே நுழையும்போது நீங்கள் தடுத்தால் கைகலப்பில் ஈடுபடுவார்கள். அதன் பிறகு மாநகராட்சி தேர்தலில் நடந்ததுபோல வன்முறைகள் நிகழும். எனவே எந்த கட்டத்திலும் ஆத்திரப்படாதீர்கள்.

ம.தி.மு.க. என்ற கட்சியே இருக்க கூடாது என்பதுதான் அவர்கள் திட்டம். ஜெயிலில் இருந்து வெளிவர உதவும்படி நான் மன்றாடியதாக பழி சொல்லப்பட்டுள்ளது. நான் ஜெயிலில் இருந்து வெளிவர விரும்பாமல் தான் உள்ளே இருந்தேன். யாரிடமும் மன்றாடவில்லை. இன்னும் என் மீது வழக்கு உள்ளது.

தேர்தலில் ஆதரவு வேண்டும் என்று கேட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். நான் போய் கண்ணீர் விட்டு கதறி அழுதேனாம். தி.மு.க. வுக்கு ஆபத்து வந்த காலங்களில் கூட கட்சியை பாது காக்க போராடியவன். கட்சிப் பதவியில் இருந்து எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரனை நீக்கினோம்.

கோர்ட்டில் அதற்கு மட்டும்தான் தடை பெறப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தை நடத்த தடை இல்லை. அவர்களே பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்துள்ளனர். அதன் பிறகு இங்கே ஏன் வர வேண்டும். தி.மு.க. தொண்டர்களுக்கும், எங்களுக்கும் பகை இல்லை. நீங்கள் குறுக்கே வராதீர்கள்

ரவுடிகள் வரட்டும், போலீஸ் வரட்டும் அறவழியில் எதிர்ப்போம். என்னையும் தாக்க திட்டமிட்டுள்ளனர். தாயகத்தை பூட்டி விட வேண்டும். இந்த கட்சி இருக்ககூடாது. அலுவலகம் இயங்க கூடாது என்று நினைக்கிறார்கள். பூட்டி போடவும் திட்டமிடுகிறார்கள்.

அப்படிப்பட்ட அநீதி நடந்தால் பொட்டல் காட்டில் நின்று கூட கட்சியை நடத்துவேன். என் உடம்பில் உயிர் இருக்கும் வரை கட்சியை வளர்ப்பேன். எனக்கு பிறகு லட்சோப லட்சம் தொண்டர்கள் வளர்ப்போம். எதற்கும் அஞ்ச மாட்டோம்.

(இவ்வாறு கூறும்போது வைகோ கண்கலங்கி அழுதார்)

எங்கள் மனதில் கள்ளம் இல்லை, துரோகம் இல்லை, எது நடந்தாலும் சந்திப்போம், கலவரம் செய்து தாயகத்தை பூட்டி விடலாம் ஆனால் நாங்கள் வாழும் தமிழக மக்களின் இதயங்களை பூட்ட முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இன்றைய கூட்டத்தில் மொத்தம் உள்ள 36 மாவட்ட செயலாளர்களில் 33 பேர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் தியாகபாடி எல்.கணேசனுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் அவர் கலந்து கொள்ள வில்லை.

கோவை, புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நீலகிரி மாவட்ட செயலாளர் நஞ்சன் அமெரிக்கா சென்று உள்ளார். இவர்கள் இருவரும் வைகோவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

பொருளாளர் கண்ணப்பன், மல்லை சத்யா, பட அதிபர் எஸ்.தாணு, செய்தி தொடர்பாளர் நன்மாறன், சென்னை மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், வீர.இளவரசன், ஞானதாஸ், டாக்டர் சதன்திருமலை குமார், வரதராஜன், மாநில நிர்வாகிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சீமா பஷீர், மனோகரா, ராமமூர்த்தி, குமாரி விஜயகுமார், தேவ தாஸ், அருணாசலம், பாளை. குருநாதன், உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஏற்கனவே கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட எல்.கணேசன் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

தென்மாவட்ட விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நடை பயணம் மேற்கொண்டு மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்தமைக்காக வைகோவுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.