Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் தான் கருப்பு எம்ஜிஆர் விஜய்காந்த்

Featured Replies

சென்னை: எனக்கு எம்.ஜி.ஆரின் ஆசி நிறைய உள்ளது என நடிகர் விஜய்காந்த் கூறினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பெரியார் மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மூவேந்தர் மக்கள் முன்னணி, ஜனநாயக முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 2,000 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தேமுதிகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில்,

நான் எம்.ஜி.ஆரை எனது குருவாக ஏற்று கொண்டிருக்கிறேன். அதனால் அவரது சீடனாகிய என்னை மக்கள் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைக்கின்றனர். அவரது ஆசி எனக்கு நிறைய உள்ளதால் தான் அவரது சிலை மட்டுமின்றி அவர் பயன்படுத்திய பிரசார வாகனம், "கோட்' மற்றும் "டை' ஆகியவையும் எனக்கு கிடைத்தன.

எம்ஜிஆரை போல நான் கட்சி ஆரம்பித்தது மக்களுக்காக தான். நான் அரசியலை வைத்து பிழைக்க வரவில்லை. மக்களுக்காக உழைக்கத் தான் வந்திருக்கிறேன். எம்ஜிஆர் மக்களையே தனது வாரிசாக நினைத்தார். எனக்கு இரு பிள்ளைகள் இருந்தாலும் நானும் மக்களையும், அவர்களது குழந்தைகளையும் தான் வாரிசாக நினைக்கிறேன்.

தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளிக்கும் கட்சிகள் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஐந்தாண்டுகளை கடத்துகின்றனர்.

முல்லை பெரியாறு அணை பிரச்னையானாலும், காவிரி பிரச்னை ஆனாலும் காலத்தை கடத்துவதே அரசின் நடவடிக்கையாக உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தீர்வு கிடைக்காதது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட உச்சக்கட்ட கொடுமை.

எதற்கெடுத்தாலும் ஜெயலலிதா பேசிக்கொண்டே இருக்கிறார் என்று முதல்வர் கருணாநிதி சொல்கிறார். ஜெயலலிதா ஆட்சி செய்த போது அவரும் அதை தானே செய்தார்.

தேர்தல் நேரத்தில் கூட்டணி வைக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர். நான் அவர்களிடம் கட்சி மீது நம்பிக்கை வையுங்கள், கூட்டணி மீது நம்பிக்கை வைக்காதீர்கள் என்று கூறினேன். இன்றைக்கு தேமுதிக சாதித்து காட்டியிருக்கிறது.

நான் என் கட்சி தொண்டர்களை வேறு கட்சி தொண்டர்களோடு பேசக் கூடாது என்று சொல்வதில்லை. அவ்வாறு பேசுபவர்களை மற்றவர்கள் போல் கட்சியை விட்டு நீக்குவதில்லை. மாறாக அவர்களுடன் நெருங்கி பழகுங்கள் என்று அறிவுறுத்துவேன் என்றார்.

கௌரவ ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும்:

இதற்கிடையே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் முழுவதும் உள்ள 67 அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள 1500க்கும் மேற்பட்ட விரிவுரையாளர் பணியிடங்களில் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்கப்படாத காரணத்தினால் மணி நேர கூலி அடிப்படையில் மணிக்கு ரூ. 100 வீதம் மாதத்திற்கு 40 மணி நேரம் என்று அரசுக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

கடந்த கல்வி ஆண்டில் முடிவில் உயர்நீதிமன்றம் இனிமேல் கௌரவ விரிவுரையாளர் முறையே கூடாது என்று தீர்ப்பளித்து தமிழக அரசுக்கு நிரந்தர நியமனத்துக்கு அறிவுறுத்தியது. தமிழக அரசும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

அப்படி நிரந்தர ஆசிரியர் நியமனத்தின் போது அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளராக வேலை பார்ப்பவர்களில் தகுதி உடையோருக்கு முன்னுரிமை கொடுத்தும், குறைந்தபட்ட தகுதியுயோருக்கு (முதுநிலை 55 சதவீதம்) கூடுதல் தகுதியான எம்பில் முடிப்பதற்கு குறுகிய கால அவகாசம் கொடுத்தும், அரசு அவர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்.

பள்ளிகளிலும் ஏனைய துறைகளிலும் தமிழக அரசு தற்காலிக ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிரந்தரப்பணியில் அமர்த்தியதைப் போல கௌரவ விரிவுரையாளர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து நிரந்தரப்பணியில் அமர்த்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2006/12...vijaykanth.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருப்பு எம்.ஜி.ஆரைப் பார்த்து ஒரியினல் எம்.ஜி.ஆர் எத்தனையாம் ஆண்டு கட்சி தொடங்கினார் என்று கேட்டுப் பாருங்கள் அவருக்குத் தெரியாது. வெட்கத்தை விட்டு ஒன்றைச் சொல்கிறேன், நடிகை மதுமிதாவிடம் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இறந்த செய்தியை நான் தொலைபேசியில் கூறியபோது, பாலாண்ணையைப் பற்றி அவர் பல விடயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார். அந்த மதுமிதாவுக்கு தெரிந்த விடயங்கள்கூட இந்த கறுப்பு எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. ஈழத்தமிழர் ஆதரவுப் போரட்டம் முல்லைப் பெரியாறு, தமிழ் வழிக் கல்வி போன்றவற்றில் இவர் தன்னை ஈடுபடுத்தியதில்லை. மறைமலையடிகள் யார் என்று கேட்டுப் பாருங்கள் விடை தெரியாது. இவர் தமிழ் நாட்டில் கட்சி நடத்துகிறாராம்.

விஜயகாந்த இவ்வாறு அரசியலில் குறளி வித்தை காட்டுவது, வயது போனதால் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு குறைவதால் ஏற்படும் செல்வாக்கின் வீழ்ச்சியை அரசியலில் நுழைந்து சரிசெய்துவிட முடியும் என நினைக்கும் ஆர்வக் கோளாறென்றே கருதமுடிகிறது. ஐம்பது வயதுக்குப் பிறகும் இருபது வயது நடிகைகளுடன் கட்டிப் பிடித்து காதல் டூயட் பாடவேண்டும் என்று நினைத்தால் அது தொடர்ந்து நடக்கக்கூடியதா?

அரசியல் இவர் படங்களில் ஓட்டும் பொலிஸ் ஜீப்பும் அல்ல, செங்கோல் இவர் தொப்புளில் விட்ட பம்பரமும் அல்ல!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி : பத்திரிகை நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "பெரியாரே கடவுள் இல்லைன்னு சொல்லலையே மூடநம்பிக்கைகள் கூடாதுன்னுதானே சொல்லியிருக்கிறார்" என்று திரு விஜயகாந்த் அவர்கள் பதிலளித்திருக்கிறார்.

இது தொடர்பான எனது கருத்துப் படம்

vmct0.jpg

Edited by இளங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.