Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலாவை அரசியல் பேசாது உடல்நலத்தை கவனிக்குமாறு பிரபாகரன் உடல்நலம் பற்றி மட்டும்தான் பதில் சொல்ல வேண்டுமென கட்டளை

Featured Replies

பாலாவை அரசியல் பேசாது உடல்நலத்தை கவனிக்குமாறு பிரபாகரன் கேட்டிருந்தார்

[25 - December - 2006] [Font Size - A - A - A]

* அடேல் பாலசிங்கம் தெரிவிப்பு

தனது இறுதிக் காலத்தில் அன்ரன் பாலசிங்கம் தலைவர் பிரபாகரனுடன் தவறாமல் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டிருந்தார். எப்போதும் அரசியல் பேசும் பிரபாகரன் இனி நீங்கள் அரசியல் பேசக்கூடாது. உங்கள் உடல்நலம் பற்றி மட்டும்தான் பதில் சொல்ல வேண்டுமென கட்டளையே இட்டிருந்தாரென அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கம் கூறியதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வு லண்டனில் நடந்தபோது அதில் கலந்து கொண்ட திருமாவளவன் ஜூனியர் விகடன் இதழுக்கு கூறியதாவது;

"வடக்கு லண்டனில் இருக்கும் `உட்கிரீன்' என்ற அரங்கத்தில்தான் பாலாண்ணாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கம் லண்டனில் புகழ்பெற்ற அலெக்ஸாண்ட்ரா அரண்மனையின் ஒரு பகுதி. லண்டன் நேரப்படி காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணிவரை அண்ணனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடல் வைக்கப்படுவதற்கு முன்பே அரங்கத்துக்கு வெளியே கையில் பூக்களுடன் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.

வழக்கமாக லண்டனில் இதுபோல் பெருங்கூட்டம் சேரும்போது, லண்டன் மாநகர பொலிஸ்துறை அதிகப்படியான பொலிஸாரை நியமிக்குமாம். அதேபோல், இந்த நிகழ்ச்சிக்கும் பெருமளவு பொலிஸ் குவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மொத்த பொலிஸும் அங்கிருந்து கிளம்பி விட்டது. `ஏன் இப்படி?' என்று லண்டன் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். `இந்தக் கூட்டத்தால் எந்தவித ஆபத்தும் வராது என்பதை உணர்ந்து அனைவரும் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்' என்று அவர் பதில் சொன்னதைக் கேட்டுப் பெருமையாக இருந்தது.

அஞ்சலிக் கூட்டத்தில் நான் பேச வாயெடுத்தபோது, வார்த்தைகள் வரவில்லை. கண்களில் கண்ணீர் ததும்பியது. `வெறும் ஆயுதங்களைத் தாங்கிய போராளிக் குழுக்களாக புலிகள் இயக்கத்தை உலகம் பார்த்ததை தடுத்தவர் பாலாண்ணா. புலிகளின் இலட்சியத்தில் ஒரு விடுதலை வேட்கை இருக்கிறது என்பதை உலகுக்குச் சொன்னவர் அவர். தலைவருக்கான எல்லா குணங்களையும் உள்ளடக்கிய பாலாண்ணா, தனது தலைவராக பிரபாகரனைத் தேர்ந்தெடுத்ததற்கான அர்த்தம் விரைவில் தெரியும். அப்போது தமிழ் ஈழம் மலரும்' என்று சிறிய உரை நிகழ்த்தினேன்.

உரை முடிந்தவுடன் அடேல் அம்மையாருக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்தேன். அவரே என்னிடம் பேச ஆரம்பித்தார். அப்போது கூட இந்தியாவில், தமிழகத்தில் ஈழப் பிரச்சினையை எப்படிப் பார்க்கிறார்கள் என்றுதான் கேட்டார்.

அதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, பாலாண்ணாவின் கடைசி நாட்கள் எப்படி இருந்தது என்று அவரிடம் கேட்டேன்.

`நோய்கள் அவரை முழுமையாகத் தாக்கியிருந்த நிலையிலும் தன்னையும் தனது பழக்கங்களையும் அவர் மாற்றிக் கொள்ளவில்லை. தனக்குள் எப்போதும் ததும்பிக் கொண்டிருந்த நகைச்சுவையை அவர் கைவிடவேயில்லை. இலங்கைப் பிரச்சினையில் இந்தியத் தலையீடு மிகவும் அவசியம் என்பதை சொல்லிக்கொண்டே இருந்தார். தம்பி பிரபாகரனுடன் தவறாமல் பேசிக் கொண்டிருந்தார். எப்போதும் அரசியல் பேசும் அந்தத் தம்பி, `இனி நீங்கள் அரசியல் பேசக்கூடாது, உங்கள் உடல்நலம் பற்றி மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும்' என்று கட்டளையே இட்டிருந்தார்.

புற்று நோய்க்கான மருந்தை சாப்பிடாமல் தள்ளிப்போட்டுக் கொண்டு வந்தவர், பிரபாகரன் சொன்னதால் ஓரிரு முறை அந்த மருந்தை எடுத்துக் கொண்டார். ஆனால், கடைசி மூன்று மாதங்களில் அவர் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதுபற்றி பிரபாகரனே கேட்க, `தம்பி! நோர்வே நாட்டின் ஏற்பாட்டில் செய்த சிகிச்சை முறைககள் தான் என்னை இப்போது காப்பாற்றிக் கொண்டிருக்கு. அப்போது செய்த சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையில் ஒரு சிறுநீரகம் செயல்படவில்லை. ஒன்றுதான் என் உயிரைக் காப்பாற்றுகிறது. மூளை ரொம்ப நன்றாக இருக்கு. மற்ற உறுப்புகளைப் பற்றிச் சொல்ல முடியலை என்று நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்' என்று அடேல் அம்மையார் கூறினார்.

"நான் பாலாண்ணாவை சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். அவரது எழுத்துகள் மேல் எனக்கு அளவிட முடியாத காதல் உண்டு. இதுபற்றி அவரிடம் சொன்னபோது, `அப்படியா தம்பி... நீங்ககூட ஒரு பத்திரிகை நடத்துகிறீர்களாமே? நான் எழுதின `விடுதலை' புத்தக உரிமையை உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் அதைத் தமிழ்நாட்டில் வெளியிடுங்கள். இல்லை உங்கள் பத்திரிகையில் போடுங்கள்' என்று சட்டென சொல்ல, என் கண்கள் குளமாயின. பேச வார்த்தைகள் இல்லாமல் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டேன்.

சில நாட்களுக்கு முன்புதான் அண்ணனின் புத்தகத்தைப் பெரிய விழா எடுத்து வெளியிட ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தேன். அதற்காக அண்ணனிடம் ஒரு கடிதம் வாங்க அவரை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். அப்போது கூட அவரது உடலைப் பார்க்க இவ்வளவு தூரம் வருவேன் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை" என்றார்.

http://www.thinakkural.com/news/2006/12/25...s_page17998.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.