Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுடன் ஏற்படுத்திக்ö காண்ட ஒப்பந்தத்தை அவமதித்து விட்டது. இந்தியாவையும் அவமதித்து விட்டது.

Featured Replies

இந்திய ஒப்பந்தத்தை குப்பையில் வீசும் இலங்கை

டிசம்பர் 26, 2006

கொழும்பு: ஜனவ> 1ம் தேதி முதல் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக செயல்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடந்த 1987ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன.

ஆனால் கடந்த அக்டோபர் மாதம் இலங்கை உச்சநீதிமன்றம், இந்த இணைப்பு செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அதை தனித் தனி மாகாணங்களாகப் பிரிக்க இலங்கை அரசு முடிவெடுத்தது.

இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் இரு மாகாணங்களும் தனித் தனி மாகாணங்களாக செயல்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தற்போதைய வடகிழக்கு மாகாண ஆளுநராக உள்ள ரியர் அட்மிரல் மோகன் விஜேவிக்கிரமா கூறுகையில்,

நான் கிழக்கு மாகாண ஆளுநராக அதிபர் ராஜபக்ஷேவால் நியமிக்கப்பட்டுள்ளேன். வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் விரைவில் நியமிக்கப்படுவார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், வடகிழக்கு மாகாணங்கள் இனிமேல் தனித் தனி மாகாணங்களாக செயல்படும்.

கிழக்கு மாகாண செயல்பாடுகள் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும். வடக்கு மாகாண செயல்பாடுகள் முழுமை பெற இன்னும் ஒரு ஆண்டு பிடிக்கலாம் என்றார்.

இலங்கை அரசின் இந்தப் பிரிவினைக்கு ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அமைப்பின் தலைவர் ஞானசேகரன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜதந்தி>மாக மாகாணங்கைளப் பி>க்கிறது இலங்கை அரசு.

இதன் மூலம் இந்தியாவுடன் ஏற்படுத்திக்ö காண்ட ஒப்பந்தத்தை அவமதித்து விட்டது. இந்தியாவையும் அவமதித்து விட்டது.

ஜெயவர்த்தனேவை விட ராஜபக்ஷே மிகவும் ஆபத்தான மனிதராக மாறியுள்ளார். சிங்கள பேரினவாத கட்சிகளின் நெருக்குதலுக்கு அவர் ஆளாகி விட்டார். ராஜபக்ஷேவின் போக்கு தமிழர்களை மேலும் சிக்கலில் ஆழ்த்தும் என்று கூறியுள்ளார்.

சுனாமி நிவாரணம்அரசுக்கு புலிகள் கண்டனம்:

இதற்கிடையே சுனாமி நினைவு தினத்தையொட்டி புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மிகப் பெரிய இயற்கை சீற்றத்தில் உயிரிழந்த மக்களுக்கு எங்கள் ஆழ் மன அதிர்வுகளை காணிக்கையாக்குகிறோம். தமிழ் பேசும் மக்கள் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவை ஏற்படுத்திவிட்டது சுனாமி. நொடிப் பொழுதில் 17,000க்கும் அதிகமான தமிழ் மக்கள் உயிரிழந்துவிட்டார்கள். தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள மக்களுக்கும் அவலங்களை சந்தித்தார்கள்.

ஆனால், சுனாமி பேரலைகளால் இலங்கை அரசின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடியவில்லை. தமிழ் மக்களை அழிக்கும் இலங்கை அரசு மற்றும் ராணுவத்தின் செயல் சுனாமியை விட கொடுமையானவை.

இலங்கை அரசால் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்புப் படைகளின் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இலங்கை அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் தமிழ்ச்செல்வன்

http://thatstamil.oneindia.in/news/2006/12/26/lanka.html

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களாக தமிழ்நாட்டோடு வியாபாரரீதியிலான ஒப்பந்தங்கள் செயற்பாடுகளை இலங்கையரசு செய்வதை பார்வையிட முடிகின்றது. முக்கியமாக மதுரையில் இருந்து அனுராதபுரத்துக்கு மின்சாரம் கொண்டு வரப் போகின்றார்களாம்.

இலங்கையில் கொத்மலைச் செயற்திட்டம் இப்போதும் மூடப்படாமல் இருக்கின்றது. அவ்வாறே, சம்பூரில் அனல் மின்னிலையம் உருவாக்கப் போகின்றார்கள். இதை விட ரணிலின் ஆட்சியில், பாரிய மின்பிறக்கிகள் கொண்டுவரப்பட்டன. அப்படியிருக்க மின்சார உற்பத்தியில் ஓரளவு தன்னிறைவை இலங்கையடைந்திருக்க ஏன் தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம் தேவைப்படுகின்றது???

சொல்லப் போனால் தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக எழுந்திருக்கும் எழுச்சி, சிங்கள அரசைக் கிலி கொள்ள வைத்திருக்கின்றது. அதை எனிவரும் காலத்தில் முடக்க முயலாது என்பதையும், பழைய ரணங்களை தமிழ்நாடு-தமிழீழ மக்களிடையே கிளறி எனி பிரிவினையைத் தொடர்ந்தும் பேண முடியாது என்பதையும் சிங்கள அரசு தெளிவாக உணர்ந்திருக்கின்றது. எனி எம்மை ஏமாற்ற முடியாது என்பதைப் புரிந்து கொண்ட சிங்கள அரசு, வர்த்தகரீதியில் நகர்த்தும் காய்நகர்த்தல் தான் இதுவாகும்.

தமிழ்நாட்டோடு வியாபாரரீதியான செயற்திட்டங்களை முன்னெடுக்கையில் பொருளாதாரரீதியில் தொடரும் நட்பை இழக்க தமிழ்நாடும் சரி, இலங்கையும் சரி விரும்பாத நிலமையை உருவாக்கும்போது, தமிழீழ மக்களுக்கு செய்யும் அநீதிகள் மீண்டும் தமிழ்நாட்டில் மறைக்கப்படும் நிலமைக்கு அது தள்ளப்படும். ஊடகங்கள் அமத்தி வாசிப்பதன் மூலம் இரத்த உறவுகளுடைய தொடர்பு மீண்டும் முடக்கப்படலாம் என இலங்கையரசு நம்பிக்கை கொள்ளக் கூடும்.

எனிவரும் காலத்தில் நீண்டகால அடிப்படையில் தமிழ்நாட்டோடு வியாபாரச் சிந்தனைகளை சிங்கள அரசு செய்யுமானால் அதன் சிந்தனை இதுவாகத் தான் இருக்கும் என நிச்சயமாகக் கருதலாம். யாழ்பாணத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து பொருட்கள் கொள்வனவு என்பது கூட இந்தச் சிந்தனையாக இருக்கலாம்.

ஆனால் யாழ்பாணமக்களின் நிலமையைப் பார்க்கின்ற போது அது தவிர்க்க முடியாத ஒன்றாகவே தெரிகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.