Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்யராஜ் தரவேண்டிய சம்பளம் : 'பெரியார்' விழாவில் சுவாரஸ்யம்

Featured Replies

கருத்துக்கும் கண்ணுக்கும் விருந்தாக அமைந்தது 'பெரியார்' பாடல் வெளியிட்டு விழா.

ஞானராஜசேகரன் இயக்கத்தில் சத்யராஜ் பெரியராக நடிக்கும் படம் 'பெரியார்.' வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னை கலைவானர் அரங்கில் நடந்தது. பெரியார் கொள்கைகளின் வாசகம் பொறிக்கப்பட்ட மெகா சைஸ் புத்தகத்திலிருந்து வாலிப கால பெரியார் கெட்டப்புடன் சத்யராஜ் வெளியே வந்து, பார்வையாளர்களை பார்த்து கும்பிடுப்போட அமர்க்களமாக தொடங்கியது விழா.

படப்பாடல்கள் திரையில் ஒளிப்பரப்பானதை அடுத்து மேடைக்கு அழைக்கப்பட்டனர் வி.ஐ.பி.கள். முதல் கேசட்டை முதல்வர் கருணாநிதி வெளியிடஸ கமலஹாசன் பெற்றுக்கொண்டார்.

முதலில் வரவேற்புரையாற்ற வந்த சத்யராஜ், வரவேற்புரையையே சிறப்புரை அளவிற்கு முழங்கி முடிக்க அரங்கில் கைதட்டல்.

அடுத்த பேச வந்த தங்கர்பச்சான், பெரியார் கொள்கைகளை பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தார். "பெரியார் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த கருவிகளும் சப்தங்களும் எப்படியிருக்கும் என்று நிறைய ஆய்வு செய்து பெரியார் படத்திற்கு பாடல்களையும் பின்னணி இசையும் அமைத்தேன்" என தனது உழைப்பை சபையில் தெரிவித்தார் வித்யாசாகர்.

பாடல்களில் துணிச்சலான முற்போக்கு சிந்தனையை விதைத்திருக்கும் வைரமுத்து பேசியபோது "இந்த வரிகளெல்லாம் நான் எழுதவில்லை ஏற்கனவே என் தாத்தா பெரியார் சொன்னதைத்தான் பயன்படுத்தியிருக்கேன்" என பாடல் பிறந்த கதைகளை விளக்கினார்.

"பெரியார் படம் உருவாக ரூ. 96 லட்சம் கொடுத்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி சொல்லும் விழாதான் இது" என்றார் தி.க தலைவர் கி. வீரமணி. பெரியார் படக்குழுவினரை வாழ்த்தி சிவாஜி படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

"விழா முடியும் தருவாயில் அரக்கப் பறக்க அரங்கில் நுழைந்த குஷ்பு, மூச்சு வாங்கியபடியே மைக்கை பிடித்தார். "பெரியார் படத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். என் வாழ்க்கையில் இந்தப் படத்தை மறக்கமுடியாது. இந்த படம் எனக்கு நிறைய சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும், ஒரு வருத்தமும் இருக்கிறது" என்று சின்ன இடைவெளி விட்டு தங்கர்பச்சானை திரும்பி பார்த்த குஷ்பு, "நான் மணியம்மையாக நடித்த பகுதிகளுக்கு தங்கர்பச்சான் சார் ஒளிப்பதிவு செய்யவில்லை. அவருக்கும் எனக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை. எங்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு சிலர்தான் காரணம். அவர் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர், அவர் ஒளிப்பதிவில் நான் நடிக்காதது வருத்தமாக இருக்கிறது" என்றார்.

கதாநாயகன் சத்யராஜே கறுப்பு சட்டை நீளநிற பேண்ட் அணிந்துவர சட்டை - பேண்ட் இரண்டையுமே கறுப்பில் உடுத்தி வந்திருந்தார் கமல். பெரியாரை தனக்கு அறிமுகப்படுத்தியது தனது அண்ணன் சாருஹாசனும், இயக்குனர் ஆர்.சி. சக்தியும்தான் என்ற கமல், பேச்சோடு பேச்சாக கேரளாவில் தனக்கு சிறந்த பகுத்தறிவாளர் விருது கொடுக்கப்பட்ட தகவலையும் எடுத்துரைத்தார்.

கடைசியாக முதல்வர் கருணாநிதி சிறப்புரையாற்றத் தொடங்கினார். பெரியாருடன் பழகிய நாட்களையெல்லாம் நினைக்கூர்ந்தவர் சத்யராஜின் சம்பளம் பற்றி பேச ஆரம்பித்தபோது அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது.

"இந்த படத்தில் சத்யராஜ் சம்பளமே வாங்காமல் நடிப்பதில் பொதுநலம் இருப்பதாக தெரியவில்லை. இது ஒரு சுய நலம்தான். வரலாற்றில் இடம் பெறக்கூடிய இந்த படம் இன்னும் 100 வருடங்கள் கழித்தும் பேசப்படும் அப்போது., "பெரியார் என்றொரு படம் வந்தது. அதில் இவர்களெல்லாம் நடித்தார்கள். படத்தின் 100-வது நாள் விழாவில் இவர்களெல்லாம் கலந்துகொண்டார்கள் படம் உருவாக தி.க. தலைவர் வீரமணி பாடுபட்டார். இப்படி சிறப்பு வாய்ந்த இப்படத்தில் சத்யராஜ் என்ற நடிகர் சம்பளமே வாங்காமல் நடித்தார்" என்று புகழப்படுவார். இதற்கெல்லாம் சத்யராஜ் எவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்பதை யோசித்து பார்க்கவேண்டும்" என்று கூற சத்யராஜ் உட்பட அனைவருமே சிரித்து விட்டனர்.

:icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.